அன்புள்ள தோழி !
நலம்! நலமே நாடுகிறேன்!
மடல் தாங்கி வந்த
நலம்! நலமே நாடுகிறேன்!
மடல் தாங்கி வந்த
ஆதரவான சொற்கள்
ஆறுதலாயிருந்தன!!!
வெகு நாட்கள் பிரிந்ததில்லை
உனைவிட்டு!
வெகு தூரமும்தான்!
அதனால்தான் துயரம்
அத்துணையும் அண்டையில்!!!!
விழிகள் வேர்க்கிறது!
துடைத்தெறிய மனமில்லை
ஒருவருக்கும்!!!
கண்களே காணாதவர்க்கு
கண்ணீர் எப்படித் தெரியும்?
சுற்றிலும் சுயநலக்கூட்டம்
சுக்கலாய் உள்ளே நான்!!!
உயிரின் தரையில்
ஒரு கோடி அசைவுகள்!!!
அனைத்தையும் அமைதியாய்
அடைத்து வைத்திருக்கிறேன்
உன்னிடம் பகிர்ந்து கொள்ள!
தீராத பாரத்தோடு
தோள் தேடி அலைகிறேன்!
ஆங்கிலத் திங்களின்
தொடக்கத்தில் உனை சந்திக்கிறேன்!
அதுவரை
உன் நினைவோடும்
நம் நினைவுகளோடும்
நிரந்தனமானதொரு பிரிவு
நிகழப்போவதில்லை நமக்குள்ளே!
தற்காலிகமானதொரு பிரிவை
தாங்கிக் கொள்ளப் பழகிவிட்டோம்!
நட்பென்ற சிறையில்
நாட்கணக்காய் அல்ல
ஆயுள்கைதியாய் இருக்கத்தான்
ஆசைப்படுகிறேன் நான்!
புதிதாய் வரும் பந்தங்கள்
பழைய விலங்குகளைப்
பழுதாக்கிவிடலாம்!
மறுக்க முடியாத நிஜம்
அறுக்க நினைத்தாலும் இயலாது!
எட்டாத தூரத்தில் இருந்தாலும்
கிட்டிய தூரம்தானே நம் நினைவுகள்!
திக்குத் தெரியாத தீவில் இருந்தாலும்
பரம சுகமாய் இருக்குமே நம்
பழைய கால நினைவுகள்!
உன் பிறந்த நாளில்
உனைவிட்டு வெகுதூரம் சென்றாலும்
உடல் மட்டும் உலகத்தோடு உறவாடும்!
உள்ளம், உள்ளம் சார்ந்த எண்ணங்கள்
என்றும் என்றென்றும்
உன்னுடனே!!!
ஆறுதலாயிருந்தன!!!
வெகு நாட்கள் பிரிந்ததில்லை
உனைவிட்டு!
வெகு தூரமும்தான்!
அதனால்தான் துயரம்
அத்துணையும் அண்டையில்!!!!
விழிகள் வேர்க்கிறது!
துடைத்தெறிய மனமில்லை
ஒருவருக்கும்!!!
கண்களே காணாதவர்க்கு
கண்ணீர் எப்படித் தெரியும்?
சுற்றிலும் சுயநலக்கூட்டம்
சுக்கலாய் உள்ளே நான்!!!
உயிரின் தரையில்
ஒரு கோடி அசைவுகள்!!!
அனைத்தையும் அமைதியாய்
அடைத்து வைத்திருக்கிறேன்
உன்னிடம் பகிர்ந்து கொள்ள!
தீராத பாரத்தோடு
தோள் தேடி அலைகிறேன்!
ஆங்கிலத் திங்களின்
தொடக்கத்தில் உனை சந்திக்கிறேன்!
அதுவரை
உன் நினைவோடும்
நம் நினைவுகளோடும்
நிரந்தனமானதொரு பிரிவு
நிகழப்போவதில்லை நமக்குள்ளே!
தற்காலிகமானதொரு பிரிவை
தாங்கிக் கொள்ளப் பழகிவிட்டோம்!
நட்பென்ற சிறையில்
நாட்கணக்காய் அல்ல
ஆயுள்கைதியாய் இருக்கத்தான்
ஆசைப்படுகிறேன் நான்!
புதிதாய் வரும் பந்தங்கள்
பழைய விலங்குகளைப்
பழுதாக்கிவிடலாம்!
மறுக்க முடியாத நிஜம்
அறுக்க நினைத்தாலும் இயலாது!
எட்டாத தூரத்தில் இருந்தாலும்
கிட்டிய தூரம்தானே நம் நினைவுகள்!
திக்குத் தெரியாத தீவில் இருந்தாலும்
பரம சுகமாய் இருக்குமே நம்
பழைய கால நினைவுகள்!
உன் பிறந்த நாளில்
உனைவிட்டு வெகுதூரம் சென்றாலும்
உடல் மட்டும் உலகத்தோடு உறவாடும்!
உள்ளம், உள்ளம் சார்ந்த எண்ணங்கள்
என்றும் என்றென்றும்
உன்னுடனே!!!
No comments:
Post a Comment