முனைவர் பூ.மு. அன்புசிவா
தமிழ்த்துறைத்தலைவர்,
ஜேப்பியார் பல்கலைக்கழகம்,
ராஜீவ்காந்தி சாலை, சென்னை-600119.
பேச:98424 95241.
இன்றைய உலகில் இன்றியமையாத ஒன்றாகத் திகழ்வது யாதெனில் கல்வியே ஆகும். கல்வியின் சிறப்பினைத் திருவள்ளுவர் “கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லாதவர்” என வலியுறுத்துகின்றார். இன்றைய காலகட்டத்தில் எந்தச் சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் கல்வி கற்பதில் இருந்து விலகிச்செல்வது அரிதாகவே காணப்படுகின்றது. மனிதனாகப் பிறப்பது அரிது அரிதான அப்புறப்பினைப் பெற்றுவிட்டால் கல்விச் செல்வத்தைப் பெற்றுக் கொள்வது சிறப்பு.கல்வி மனித அடிப்படை உரிமைகளில் ஒன்று. அறிவியற் கல்வி, சமூக அறிவியற் கல்வி, அழகியல் கல்வி ஆகிய மூன்றும் வாழ்க்கைக்கு அவசியமானவை. ஒருவனுக்கு பெருமையையும் புகழையும் தரக்கூடிய செல்வம் கல்விச் செல்வமே அன்றி வேறில்லை. கல்வி தொழிலுக்கு வழி காட்டுகிறது.
முன்னுரை
வாழும் மனிதருக்கு எல்லாம்;
பயிற்றிப் பல கல்வி தந்து- இந்தப்
பாரை உயர்த்திட வேண்டும்”
என்கிறான் மகாகவி, கல்வி மூலமே உயர்வு காணமுடியும் என்பதை அழுத்த மாக சொல்கிறான் அவன்
ஆலைகள் வைப்போம் கல்விச்சாலைகள் வைப்போம்;
ஓயுதல் செய்யோம் தலைசாயுதல் செய்யோம்
உண்மைகள் சொல்வோம் பலவண்மைகள் செய்வோம்”
வீதிதோறும் இரண்டொரு பள்ளி;
நாடுமுற்றிலும் உள்ளவூர்கள்
நகர்களெங்கும் பலபலபள்ளி;
தேடு கல்வியிலாத தொரூரைத்
தீயினுக்கு இரையாக மடுத்தல்”
கல்வியின்
முக்கியத்துவம்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்,
பின்னருள்ள தருமங்கள் யாவும்,
பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்,
அன்னயாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்”
தொழில் புரிந்து யாவரும்
தேர்ந்த கல்வி ஞானம் எய்தி
வாழ்வம் இந்த நாட்டிலே”
மேலும் அவனது கற்பனை விரிகிறது.
மனம் மகிழ்ந்து கூடியே
மனிதர் யாரும் ஒருநிகர்
சமானமாக வாழ்வமே”
கல்வியால்
அனைவரும் சமம்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;
நீதி உயர்ந்தமதி, கல்வி- அன்பு
நிறை உடையவர்கள் மேலோர்”
பெண்
கல்வி
பெண்களுக்கு கல்வி கற்பித்தால் விதவை ஆகிடுவார்கள் என்ற மூட சிந்தனை அடி மூளையில் ஆழமாக பதித்து விடப்பட்டிருந்தது அப்போது. பெண் ஆணுக்கு சேவை செய்ய மட்டுமே பிறந்தவள்; அவள் பிள்ளை பெறும் இயந்திரம் என்றே கருதப்பட்டனர். பெண் படிக்க விரும்பினால் அடுப்பூதும் பெண்ணுக்கு படிப்பு எதற்கு என்ற எதிர்கேள்வி கேட்டனர்.
என்றெண்ணி இருந்தவர் மாய்ந்துவிட்டார்;
வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைப்போம் என்ற
விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்”
என பெண்ணுக்கு கல்வி மறுப்பவர்களை கடுமையாக சாடுகிறான்.
பாரினிற் பெண்கள் நடத்த வந்தோம்;
எட்டு மறிவினில் ஆணுக் கிங்கேபெண்
இளைப்பில்லை கணென்று கும்மியடி”
ஆணுக்கு பெண் அறிவிலும் திறமையிலும் கொஞ்சம் கூட சளைத்தவள் இல்லை எனச் சொல்லி பெண்களை ஊக்குவிக்கிறான்.
காளி தாசன் கவிதை புனைந்ததும்
சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும்,
தெய்வ வள்ளுவன் வான்மறை செய்ததும்”
மடமைக் கல்வியில் மண்ணும் பயனிலை”
ஆங்கிலக் கல்வியால் என் தந்தைக்கு செலவு ஆயிரம், எனக்கு ஒரு நன்மை கூட கிடைக்கவில்லை, பல்லாயிரம் தீமைகள் எனக்கு வந்தன என்பதை இந்தக் கோவிலிலும் சத்தியம் செய்து சொல்வேன் என்கிறான் பாரதி. துயரம் தந்த ஆங்கிலக் கல்வி தந்தைக்கும், தனயனுக்கும் என்ன செய்தது என்பதை பாரதியின் வரிகளில் படியுங்கள்,
செலவு தந்தைக்கோர் ஆயிரஞ் சென்றது
நலமோர் எட்டுணையும் கண்டிலேன் - இதை
நாற்பதாயிரம் கோயிலிற் சொல்லுவேன்”
கல்வியின்
சிறப்பு
படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால்
போவான் போவான் ஐயோவென்று போவான்”
கல்வியால் தாழ்ந்தவர்கள் என்று கூறுமளவிற்கு எவருமில்லை. கல்வியால் பல்வேறுபட்ட நபர்கள் உயர்வடைந்துள்ளனர். அப்துல் கலாம், அம்பேத்கர், சுந்தர் பிச்சை, கல்பனா சாவ்லா போன்ற பலர் கல்வியால் உயர்வு அடைந்தவர்களாவர். இவர்கள் அனைவரும் எமக்கு ஒர் முன்னுதாரணமானவர்கள்.
இவர்கள் சிறுவயதிலிருந்தே
கல்வி மேல் கொண்ட ஆர்வமே இவர்களை உலகம் கொண்டாடும் மனிதர்கள் ஆக்கியுள்ளது. சிறந்த கல்வி மனிதனை உயர் இடத்திற்கு இட்டுச் செல்லும் என்பதனை இவர்கள் மூலம் நாம் அறிய முடிகின்றது.
சுதந்திர இந்தியாவில் கல்வி
எப்படி இருக்க வேண்டும் என்பதை பாரதியின் பார்வையில் கண்டோம். ஆனால் இப்போது நம்
நாட்டில், தமிழகத்தில் உள்ள கல்வி முறை எப்படி இருக்கிறது ? என்ற கேள்விக்கு வேதனையே பதிலாக கிடைக்கிறது. தமிழ் வழிக்கல்வி என்பதற்கான முக்கியத்துவம் இங்கு குறைந்து கொண்டே வருகிறது, காசு பணம் சம்பாதிக்க மட்டுமே கல்வி; ஒழுக்கம், பண்பு, சமூக அக்கறை போன்றவற்றை போதிப்பது அதன் வேலை இல்லை என்ற நிலையை இப்போதைய கல்விமுறை எட்டிவிட்டது.
v
கற்றவருக்கச் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பர். செல்வங்களில் சிறந்த செல்வம் கல்விச் செல்வம் ஆகும். இத்தகைய உயர்ந்த செல்வத்தை அடைந்து கொள்ள எந்த செல்வங்களையும்
இழக்கலாம். ஆனால் கல்விச் செல்வத்தினை எக்காரணத்திற்காகவும் இழக்கக் கூடாது.
v
கல்விச் செல்வம் நெருப்பினால் வேகாது, வெள்ளத்தால் அழியாது, கள்வர்களால் திருட முடியாது. கல்வியானது மனிதனை சிறந்த ஒழுக்கம் உள்ளவனாக மாற்றுகின்றது. மிருகக் குணங்களில் இருந்து வேறுபடுத்துகின்றது.
v
ஒருவர் கற்ற கல்வியானது பலருக்கும் பயன் தரும். கல்விதான் ஒருவனை அறிவாளியாக்குகின்றது. கற்றவர்கள் தமது நாடு ஊர் அல்லாது எங்கு சென்றாலும் அது அவர்களது நாடாகும்.
v
மகாகவி பாரதி சுதந்திர இந்தியாவில் கல்வி எப்படி இருக்க வேண்டும் என்று நினைத்தானோ அது
மாதிரியான கல்வி முறை வராத வரை நமக்கு விடிவு காலமில்லை. கல்வி குறித்த பாரதியின் கருத்துக்களை அனைவரிடமும் கொண்டு சேர்ப்போம். அவனது சிந்தனை விதைகளை தூவுவோம்.
காரியாலயம், மூன்றாம் பதிப்பு,1946.
2.
ஜீவானந்தம்,ப.பாரதியைப் பற்றி ஜீவா, சென்னை: நியூ
செஞ்சுரி புக் ஹவுஸ் லிமிடெட், நான்காம் பதிப்பு,1989.
3.
வ.ரா.மகாகவி பாரதியார், சென்னை: பழனியப்பா
பிரதர்ஸ், ஒன்பதாம் பதிப்பு, 1978.
4. கோதண்டராமன், ப. பாரதி யுகம். நாகப்பட்டினம்:
இமயப்பதிப்பகம், 1961.