முனைவர் பூ.மு.அன்புசிவா
தமிழ்த்துறைத்தலைவர்
சுகுணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி
நேரு நகர், காளப்பட்டி சாலை
கோயம்புத்தூர்-641 014.
பேச:9842495241.
பாரதி…
உன் கடைசி கவிதையை
நீட்டினால் தீ…
அதனால் தான் என்னமோ
உன் கணல் கவிதைகள் எங்கும் தீ…!
பாரத தேசம்
உன் ஒற்றைப் பார்வையால்
பாரதி தேசமானது…!
பூனூல் போட்ட
மேல் தடடு மக்களுக்கு மத்தியில்
தமிழ்ப் பெண்களுக்காக
பாநூல் பாடிய பாவலன் நீ…!
குடியிருந்த தாய் வீட்டிற்கு
வெள்ளை அடிக்கவில்லை நீ
ஆனால்!
தன் தாய் நாட்டிற்காக
வெள்ளையனையே விரட்டி அடித்தவன் நீ…!
சேதுவை மேம்படுத்தி
சமுத்திரத்தில் வழி கண்டாய்
பெண் சமூக மேம்பாட்டிற்காக
உன் பாட்டால் விழி கண்டாய்…!
அன்று
இந்தியா என்னும் இதழின்
ஆசிரியாரும் நீ தான்…
இன்று
இந்தியாவின் ஆச்சரியமும் நீதான்.