நான் உன்னை மட்டும் எவ்வளவு
விரும்பினேன் என்பதையே
நீ மறந்தும் விட்டாய்…
நான் செலவிட்ட நேரம்
நான் சொல்லிய கவிதை
நான் முகிழ்ந்த காதல்
நெகிழ்ந்த என் மனம் என
கடந்த காலம்
எதற்கும் இனிப் பொருளில்லை!
சம்பிரதாயமாக உன்னை
சந்தித்து இனி யாரோ போல்!
புன்னகைத்து
கைகுலுக்கி
கடக்க மறுக்கிறேன்.
போகிறது போகட்டும் இனி
உன் அருகில்
நான் இருந்தென்ன…
நான் ஒழிந்தென்ன…
என்றோ நிகழ்ந்திட்ட
ஓர் அன்பை இன்று மீண்டும்
விளக்கிச் சொல்ல நேரும்
துர்பாக்கியங்கள்
இப்பூமியில்
எவருக்கும்
இனி நிகழ வேண்டாம்.