Monday, May 08, 2023

பாரதியார் கல்லூரியில் உலக தாய்மொழி தின விழா


 பாரதியார் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் நேற்று முன்தினம் (21) உலக தாய் மொழி தினவிழா கொண்டாடப்பட்டது. பாரதியார் மகளிர் கல்வி நிறுவனங்களின் தலைவர் செ. இளையப்பன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் கல்வி நிறுவன அனைத்து இயக்குநர்களும் கலந்து கொண்டனர். கல்வி நிறுவன செயலர் டாக்டர் ஏ.கே. ராமசாமி, பொருளாளர் எஸ்.ஆர்.டி. செல்வமணி வாழ்த்துரை வழங்கினார்.

பாரதியார் மகளிர் கலை அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் டி. இராஜகுமாரி வரவேற்புரை வழங்க சிறப்பு விருந்தினர் சென்னை, ஜேப்பியார் பல்கலைக்கழகம், தமிழ்த்துறைத் தலைவர், முனைவர் பூ.மு. அன்புசிவா “செம்மொழியான தமிழ் மொழியே"- என்ற தலைப்பில் தமிழின் சிறப்பும், தமிழரின் பெருமை, தமிழ் மொழியின் அருமையை மாணவிகளுக்கு எடுத்துரைத்தார்.

தாய்மொழியை பறைசாற்றும் விதமாக பாரதியார் மகளிர் கல்லூரி தமிழ்த்துறை மாணவிகள் தேசத் தலைவர்கள், தமிழ் அறிஞர்கள் என பல மாறு வேடங்கள் அணிந்து தாய் மொழி தினத்தை பெருமைப்படுத்தினர்.

கணவன் - மனைவி உறவைவிட உன்னதமான உறவு உண்டா?

கணவனுக்குத் தலைவலி. நெற்றியை அழுத்திப் பிடித்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்திருக்கிறான். மனைவி கொஞ்சம் தைலம் எடுத்து வந்து, கணவன் அருகில் அம...