Monday, February 22, 2016

கருணாயிசம் - தற்போதைய தமிழின அரசியலின் ஒரே கொள்கை...

  -சுப.உதயகுமார்

இந்திய, தமிழக அரசியலில் 1950களிலும் அறுபதுகளிலும் சக்தி வாய்ந்தவராயிருந்த பெருந்தலைவர் காமராசர் (1903-1975) தன்னை ஒரு சோசலிசவாதி என்று அழைத்தார். “பின்தங்கியிருப்போர் முன்னேற வேண்டும். வாழ்க்கைக்கு இன்றியமையாத உணவு, உறைவிடம், கல்வி, வேலை – இவை கிடைக்க வேண்டும். இதுவே சோஷலிசம்” என்றார் அவர். அடக்குமுறையின்றி, வகுப்புச் சார்பின்றி, அடிப்படை உரிமைகளுக்கு பாதகமின்றி சோசலிச சமுதாயம் அமைக்க முடியுமென்று தான் நம்புவதாக அடித்துச் சொன்னார் காமராசர். காங்கிரசின் சோசலிசக் கொள்கைக்கு எதிராக அறுபதுகளில் இராஜாஜி (1878-1972) நடத்திய சுதந்திரா கட்சி தனியார்மயமாக்கல், தாராளமயமாக்கல் போன்றக் கொள்கைகளோடு பெருமுதலாளிகள், முன்னாள் மன்னர்களுக்கு ஆதரவான வலதுசாரி சக்தியாக இந்திய, தமிழக அரசியலில் இயங்கி, பெருமளவு மக்கள் ஆதரவு இன்றி நொண்டிக் கொண்டிருந்தது.

திராவிடர் கழகத்தின் தலைவர் தந்தை பெரியார்-மணியம்மை திருமணத்திற்குப் பிறகு, திராவிடர் கழக மத்திய நிர்வாகக் குழு உறுப்பினர் கூட்டம் செப்டம்பர் 17, 1949 அன்று சென்னையில் நடந்தது. அதில் பலரும் பேசிய பிறகு, அறிஞர் அண்ணா ஓர் அறிக்கை வாசித்தார். அதில் இப்படிக் குறிப்பிட்டார்: “திராவிடர் கழகத்திலே இருந்து நாம் பணியாற்றுவதின் நோக்கம், நாட்டிலே அறிவுப் புரட்சி உண்டாக்கி, வைதீக ஆதிக்கத்தை அகற்றி – நல்லாட்சி அமையவும், வட நாட்டு ஏகாதிபத்தியம் குழம்பி, திராவிடத்தைத் தேய வைக்காமல் தடுக்கவுமேயாகும். மற்ற சில அரசியல் கட்சிகள் போல உடனடியான அரசியல் நோக்கம் கொண்டதல்ல நமது பணி. திராவிடச் சமுதாய ஜாதித் தளைகளை நீக்கி மதப் பிடிப்புகளை அகற்றி, பொருளாதாரத் துறையில் சம தர்ம நாடாகவும், அரசியல் துறையில் எந்த அந்நிய நாட்டிற்கும் அடிமைப்படாமலும், தனி உரிமையுடன் விளங்க வேண்டுமென்பதே நமது குறிக்கோள்.”

அந்த அறிக்கை நாட்டின் நிலையை தெளிவாக விளக்கியது: “நாட்டின் நிலைமையை நீங்கள் நன்கு அறிவீர்கள். வட நாடு-தென்னாடு என்னும் பேத உணர்ச்சி, டில்லியில் பேசப்படவேண்டிய அளவுக்கு வளர்ந்துவிட்டது. மொழி ஏகாதிபத்தியம் உருவாக்கப்பட்டிருக்கிறது. மாகாண ஆட்சி மன்றங்கள் தில்லியின் சூத்திரக் கயிற்றிலாடும் பதுமைகளாக்கப்பட்டு விட்டன. தொழிலாளரின் பிரச்சினை, யாரும் ஒதுக்கிவிடாத நிலையிலும் வளர்ந்துவிட்டது. பொருளாதார நிலையோ, பஞ்சமும், பட்டினியும், வேலையில்லாக் கொடுமையும் நாட்டிலே கிளம்பிக் கேடு விளைவிக்கும் விதத்தில் கெட்டு வருகிறது. பழமையோ, புதிய பட்டாபிஷேகத்துக்கான நாள் குறித்துக் கொண்டிருக்கிறது.” பக்குவப்பட்டத் தலைவர் என்பதால் அண்ணா தன் தோழர்களை அருமையாக வழிநடத்தினார். திராவிடர் கழகத்தை, அங்கிருக்கும் பணத்தைக் கைப்பற்ற நினைத்தால், மோதல் போக்கு வளரும், பேதப்பேச்சு முன்னணிக்கு வந்து, கலகச் சூழ்நிலை உருவாகி, வெறுப்பே மிச்சமாகும் என்று தனது தோழர்களுக்குப் பக்குவமாக எடுத்துச் சொன்னார். பிறர் கேலி செய்தாலும் பரவாயில்லை, “பகை, பலன் தராது – முடிவு காண முடியாதது – எதிர்ப்புச் சக்திகளுக்கு, பாசிசத்துக்கும் – பழைமைக்கும் இடமளிக்கக் கூடியதாகும். எனவேதான், ஆற்றல் இருந்தும் அடக்கம் வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் – கோழை என்று கேலி செய்யப்படுவதானாலும் சரி, வெறியன் என்ற சொல்லுக்கு இலக்காகக் கூடாது என்று எண்ணுகிறேன்” என்று குறிப்பிட்டார் அண்ணா.

செப்டம்பர் 18, 1949 அன்று காலை அமைப்புக் குழு கூட்டம் நடத்திவிட்டு, மாலை சென்னை, இராயபுரம் இராபின்சன் பார்க் மைதானத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் துவக்க விழாக் கூட்டம் நடத்தினர். இறுதியாக அண்ணா பேசும்போது, அண்மைக் கால நிகழ்வுகளை, இக்கட்டுகளை, பெரியாரின் போக்கை, புதிய கட்சி தொடங்க வேண்டிய நிர்ப்பந்தத்தைப் பற்றித்தான் அதிகம் பேசினார். புதிய கட்சியின் கொள்கைகள் ஆங்காங்கு குறிப்பிடப்பட்டன. “திராவிடர் கழகமாகட்டும் – திராவிட முன்னேற்றக் கழகமாகட்டும் படை வரிசை வேறு என்றாலும் கொள்கை ஒன்றுதான். கோட்பாடு ஒன்றுதான், திட்டமும் வேறு அல்ல, என்ற நிலை இருந்தே தீரும். படைவரிசை இரண்டு பட்டுவிட்டது என்று எக்காளமிடும் வைதீகபூரிக்கும், வட நாட்டு ஏகாதிபத்யத்துக்கும் சம்மட்டியாக விளங்க வேண்டும். இரு கழகங்களும் இரு திக்குகளிலுமிருந்து வட நாட்டு ஏகாதிபத்யத்தை ஒழித்து, வைதீகக்காட்டை அழித்துச் சமதர்மப் பூங்காவை திராவிடத்தைச் சிழிக்கச் செய்தல் வேண்டும்” என்றார். “நாட்டிலே ஆற்றி வந்த நல்லறிவுப் பிரச்சாரத்தைத் தொடர்ந்து நடத்துவோம்! பாசீசத்தையும் பழமையையும், நாட்டைப் பாழ்படுத்தும் சக்திகளையும் எதிர்த்துப் போராடுவோம்” என்று கொட்டும் மழைக்கிடையே முழங்கினார் அண்ணா. “முக்கியமாக முதல் வேலையாக எழுத்துரிமை, பேச்சுரிமை எதையும் அடக்கும் சர்க்கார் போக்கை எதிர்த்துப் போரிட திராவிட முன்னேற்றக் கழக முன்னணிப்படை அமைய வேண்டும். ...பேச்சுரிமையைப் பறிக்காதே, எழுத்துரிமையைத் தடுக்காதே, புத்தகங்களைப் பறிமுதல் செய்யாதே என்று போரிடுவோம்!” என்ற வீர முழக்கத்தோடு தனதுப் பேச்சை முடித்தார் அண்ணா.

கட்சித் தொடங்கி சுமார் பதினேழு ஆண்டுகள் கழித்து தேர்தலில் பெரும்பான்மை பெற்று, 1967 பெப்ருவரி முதல் 1969 பெப்ருவரி வரை முதல்வராகப் பணியாற்றி, அறிஞர் அண்ணா (1909-1969) அகாலமாக மரணமடைந்ததும், நாவலர் நெடுஞ்செழியன் தற்காலிக முதல்வராகப் பொறுப்பேற்றார். ஆனால் நாவலரைப் புறந்தள்ளி, எம்.ஜி.ஆர். போன்ற நெருக்கமான நண்பர்கள், முன்னணித் தலைவர்கள் உதவியுடன் கலைஞர் மு. கருணாநிதி முதல்வர் பதவியைப் பிடித்தார். “கருணாநிதியைத் தலைவராகத் தேர்ந்தெடுப்பதன் மூலம் ஒரு பலசாலிக்குப் பின்னால் தனது பேதங்களை விட்டொழித்து தி.மு.க. ஒன்று சேர்ந்திருக்கிறது” என்று ஸ்டேட்ஸ்மேன் நாளிதழ் தலையங்கம் எழுதியது. பத்திரிகையாளர் ப. திருமாவேலன் குறிப்பிடுவது போல, “கருணாநிதி அளவுக்கு உயரம் தாண்டியவர்கள், தமிழக அரசியலில் இதுவரை எவரும் இல்லை. ஐந்து முறை தமிழ்நாட்டு முதல்வர், தொடர்ச்சியாக 11 முறை சட்டமன்ற உறுப்பினர் தேர்தலில் வென்றவர், 38 வயதில் தி.மு.க. பொருளாளர், 44 ஆண்டுகளாகத் தி.மு.க-வின் தலைவர் என்று அடுக்கிக்கொண்டே செல்லலாம்.” நேரங்காலம் பார்க்காத உழைப்பு, ரத்த ஓட்டம் மொத்தமும் அரசியலாக ஓடிக் கொண்டிருப்பது, எதிர்ப்பையே பார்த்துப் பார்த்துப் பழகிய தன்மை, மனவலிமை, சுயசிந்தனை என கருணாநிதியின் பலங்களைப் பட்டியலிடுகிறார் திருமாவேலன்.

தேர்ந்த நிர்வாகியாக தனது பொறுப்பை துவங்கித் தொடர்ந்தவர், இந்திரா காந்தி அறிவித்த நெருக்கடி நிலையைக் கடுமையாக எதிர்த்தார். சர்வாதிகாரத் தன்மை கொண்ட இந்திரா காந்தி, 1976-ம் ஆண்டு கருணாநிதி அரசை கவிழ்த்து, அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிக்க சர்க்காரியா கமிஷன் ஒன்றை நிறுவினார்.
லஞ்சம், ஊழல் போன்ற வார்த்தைகள் தமிழக இல்லங்களில், தெருவோர அளவளாவல்களில், தமிழ் குடிமைச் சமூகத்தில் வந்து புகுந்தன. சர்க்காரியா கமிஷன் தனது அறிக்கையில் கருணாநிதியும், அவரது அமைச்சர்களும் மிக நுட்பமாக, தடயங்கள் ஏதுமின்றி ஊழல் செய்திருப்பதாகக் குறிப்பிட்டு, அதனை “அறிவுபூர்வமான ஊழல்” (scientific corruption) என்றழைத்தது. வெற்றுப்பேச்சும், வாய்ப்பந்தலும், வாய்ச்சொல் வீரமும் மலிந்து கிடந்த தி.மு.க.வின் அரசியலில், கட்சிக் கொள்கைகள் கவர்ச்சி மாத்திரைகள் வடிவில் வழங்கப்பட்டன. “அண்ணா வழியில் அயராது உழைப்போம்,” “ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தேத் தீருவோம்,” “இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்,” “ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்” போன்ற கவர்ச்சி வாசகங்களின் பின்னால் எந்தவிதமான தெளிவான அரசியல் சித்தாந்தமோ, பொருளாதாரக் கோட்பாடோ, சமூக சிந்தனையோ இருக்கவில்லை. பேருந்து நிலையங்களுக்கும், சாலைகளுக்கும், கட்டிடங்களுக்கும் அண்ணா பெயரை சூட்டுவதுதான் விமரிசையாக நடந்தது.

“அண்ணா வழியில் அயராது உழைப்போம்” என்பது கருணாநிதி தி.மு.க.வால் முக்கிய கொள்கையாக வலியுறுத்தப்பட்டாலும், எது அண்ணா வழி, அதனுடைய சிறப்பம்சங்கள் என்ன, அந்த வழி தமிழகத்தை எங்கே இட்டுச் செல்லும் என்றெல்லாம் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. எம்.ஜி.ஆரின் சக்திமிக்கப் புகழையும், முக்கியத்துவத்தையும் குறைக்கவும், அவருக்கு தொழிற்போட்டியை ஏற்படுத்தவும், தனது மகன் மு. க. முத்துவை முன்னிலைப்படுத்தவும் கருணாநிதி முயன்றபோது, அவரும் எம்.ஜி.ஆரும் மோதிக்கொண்டனர். தி.மு.க.விலிருந்து 1972-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். விலக்கப்பட்டு தனிக்கட்சி தொடங்கினார். அவரது கட்சியின் கொள்கை என்ன என்று கேட்டபோது, எம்.ஜி.ஆர். “அண்ணாயிசம்” என்று பதிலளித்தார். அண்ணாயிசம் என்றால் என்ன என்று யாரும் அறிந்திருக்கவில்லை. இதை குழப்பம், வெறுமை என்ற அர்த்தங்களில் சித்தரித்து பல நகைச்சுவை உரையாடல்கள் தமிழகமெங்கும் பரவிக்கிடந்தன. எடுத்துக்காட்டாக ‘தங்கப்பதக்கம்’ திரைப்படத்தில் வைகைவளவன் என்ற சோ நடித்த கதாபாத்திரம் சொல்வார்: “அண்ணனுக்கெல்லாம் தம்பி, தம்பிகளுக்கெல்லாம் அண்ணன், அதுதான் அண்ணாயிசம்” என்று.

தமிழகத்து கருணாயிசம்
இன்றைய தமிழக அரசியலில் ஒரே ஒரு கொள்கைதான் கோலோச்சுகிறது. தமிழீழத்தையும் சேர்த்து சிந்தித்தால், ஒட்டுமொத்த தமிழின அரசியலில்கூட அதே கொள்கைதான் தாண்டவமாடிக் கொண்டிருக்கிறது என்று சொல்லலாம். அந்தக் கொள்கை கருணாயிசம். கருணாயிசம் என்றதும் தமிழகத்தில் கலைஞர் கருணாநிதி செய்து வருகிற சமரச அரசியலோ, தமிழீழத்தில் கருணா செய்து வருகிற துரோக அரசியலோ மட்டும் உங்கள் மனத்திரையில் எழுந்தால், கருணாயிசத்தை நீங்கள் முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை என்றுதான் அர்த்தம். கருணாயிசம் என்பதை சுயநலவாதம், பிழைப்புவாதம், சந்தர்ப்பவாதம் எனும் மும்மையைக் குறிக்கும் ஒற்றைப் பெயராகக் கொண்டால், தமிழினத்தின் பெரும்பான்மை அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் கருணாயிசத்தையே கொள்கையாகக் கொண்டிருப்பது புரியும்.

கால் நூற்றாண்டுக்கு முன்னால், என் வயதொத்த தமிழ் இளைஞர்கள் பலரும் கலைஞர் கருணாநிதி மீது மிகுந்த நம்பிக்கையும், மரியாதையும் கொண்டிருந்தோம். எம்.ஜி.ஆர். தனிக்கட்சி துவங்கி கருணாநிதி மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி எதிர்த்தபோதும், என் போன்றோர் தி.மு.க. அனுதாபிகளாகவே இருந்தோம். நாளடைவில் பெருந்தலைவர் காமராசர் சொன்னதுபோல, தி.மு.க., அ.தி.மு.க. எனும் இரண்டு கட்சிகளுமே “ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்” எனும் உண்மை புரிய ஆரம்பித்தது. இந்தக் கட்சிகள் கடைபிடித்த கருணாயிசம் கொள்கை புரியத் துவங்கியபோது, அவற்றிடமிருந்து மெதுவாக விலக ஆரம்பித்தோம். 1999 பொதுத்தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியோடு கூட்டணி அமைத்து, கருணாநிதி வைதீகபூரியோடு கைகோர்த்தபோது, தனது சுயநலத்துக்காக மாறி மாறி காங்கிரசு- பா.ஜ.க. நட்பு என வடநாட்டு ஏகாதிபத்தியத்துக்குத் துணைபோனபோது அவர் மீதிருந்த நம்பிக்கை முழுவதுமாக விலகியது. ஈழத் தமிழர் பிரச்சினையில், குறிப்பாக 2008-2009 காலகட்டத்தில் நடந்த இனப்படுகொலையின்போது அவர் நடத்திய நாடகங்கள், துரோகங்கள், எதிர்ப்புக்களைப் பார்த்தபோது அவர் மீதிருந்த மரியாதையும் முற்றிலுமாக விலகியது. கருணாயிசம் ஆபத்தான கொள்கை மட்டுமல்ல, கடுமையாக எதிர்த்து ஒதுக்கப்பட வேண்டிய கொள்கையும்தான் என்பது தெளிவாகப் புரிந்தது.

முன்னர் குறிப்பிட்டதுபோல, கருணாயிசம் என்பது சுயநலவாதம், பிழைப்புவாதம், சந்தர்ப்பவாதம் ஆகியவற்றை உள்ளடக்கியது. தன்னலம், தன் குடும்ப நலம், தன் இயக்கத் தோழர் நலம் மட்டுமே முதன்மைப் படுத்தப்படுவதுதான் கருணாயிசம். எவ்வளவோ ஆண்டு கால பொதுவாழ்வு, எத்தனையோ முறை மத்திய, மாநில அதிகாரம் என்றெல்லாம் பீற்றிக் கொண்டாலும், பெருமை பேசினாலும், பொதுமக்களுக்கு பயன்படாமல் முழுமையாக சுயநல அரசியல் நடத்துவதுதான் கருணாயிசம். பொதுமக்கள் ஒரு போக்குவரத்துத் துறை அலுவலகத்துக்குப் போய் கண்ணியத்தோடு, மரியாதையோடு, யாருக்கும் லஞ்சம் கொடுக்காமல், யாராலும் இம்சைப் படுத்தப்படாமல் தன் வாகனத்துக்கு சாலை வரி கட்டக்கூட முடியாத நிர்வாகம்தான் கடந்த நாற்பத்தைந்து ஆண்டுகளாக தமிழகத்தில் நடந்து வருகிறது. தமிழகத்தின் தலைநகராம் சென்னையிலுள்ள ஆட்டோ வாடகையைக்கூட ஒழுங்குபடுத்தாத பொதுவாழ்வுதான் இந்தத் தலைவர்களுடையது. “இந்தியா முழுக்க இதுதானே நிலை?” என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் அங்கெல்லாம் யாரும் எழுபத்தைந்து ஆண்டு கால பொதுவாழ்வு என்று பெருமை பேசிக் கொள்வதில்லையே?

தேர்தலில் வென்றால் இந்தியனாய் தேசபக்தியில் திளைப்பதும், தேர்தலில் தோற்றால் தமிழனாய் உருப்பெறுவதும் கருணாயிசத்தின் பிழைப்புவாதம். அதிகார வர்க்கச் சூழ்நிலைகள் சாதகமாக இருந்தால் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா பற்றிய நினைவுகள் ஏதுமின்றி அமைதி காப்பதும், ஆதிக்க சக்திகள் இன்னல் கொடுத்தால், பார்ப்பனீயத்தை எதிர்ப்பதும் இந்தப் பிழைப்புவாதத்தின் தன்மை. மத்திய அரசோடு மோத வேண்டுமானால் மாநில சுயாட்சியை நினைவு கூறுவதும், ஈழத் தமிழர் பாசம் பொங்கி வழிவதும் இயல்பு. ஈழத் தமிழர் பிரச்சினைக்காகவோ, காவிரி நதிநீர் பிரச்சினைக்காகவோ, இவை போன்ற இதர முக்கிய பிரச்சினைகளுக்காகவோ தில்லிக்கு நேரில் போய் வாதாட, போராட விரும்பாத, முடியாத தலைவர், தனது குழந்தைகளுக்கு, பேரனுக்கு, தோழர்களுக்கு பதவிகள் பெறுவதற்காகப் போய் மன்றாடுவது பிழைப்புவாதத்தின் உச்சக்கட்டம். காரிய சித்திக்காக கழுதையின் காலையும் பிடிப்பதுதான் பிழைப்புவாதம்.

கொள்கைகள் இருப்பதாகச் சொல்லிக் கொள்வதும், அந்த கொள்கைகளுக்காக உறுதியாக நிற்காமலிருப்பதும், ஆனால் அப்படி இயங்குவதாக ஒரு போலித் தோற்றத்தை உருவாக்குவதும், உருட்டுவதும், புரட்டுவதும் கருணாயிசத்தின் முக்கியமான அம்சங்கள். நேரத்துக்கு, சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு கொள்கைகளை மாற்றிக் கொள்வதுதான் சந்தர்ப்பவாதம். இந்துத்துவக் கட்சியோடு கூட்டணி வைத்துக் கொள்வது, அவர்கள் அமைச்சரவையில் பங்கேற்று ஆட்சி அதிகாரத்தை அனுபவிப்பது, அடுத்த தேர்தலில் மதவாதம் பற்றி வகுப்பு எடுப்பது, மதச்சார்பின்மை கொள்கைக்காகவே உயிர் வாழ்வதாக பொய் சொல்வது எல்லாம் சந்தர்ப்பவாதத்தின் உச்சகட்டம். ஈழம் அடைவதே எங்கள் தாகம் என்று இறுமாப்பு பேசுவதும், தில்லிக்கு பயந்து சென்னை ‘டெசோ’ மாநாட்டில் ஈழம் என்ற வார்த்தையையே பயன்படுத்தாமல் “இலங்கைத் தமிழர் உரிமைப் பாதுகாப்பு” என்று மாற்றிக்கொள்வதும் கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதம். சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு கூடவே கூடாது என்று வெளியே முழங்குவது, ஆனால் நாடாளுமன்றத்தில் அதற்கு ஆதரவாக வாக்களிப்பது இன்னொரு சிறந்த உதாரணம்.

சுயநலவாதம், பிழைப்புவாதம், சந்தர்ப்பவாதம் தவிர இன்னும் பல முக்கியமான குணாதிசயங்கள் கொண்டது கருணாயிசம்:
· தொலைதூர சிந்தனையோ, செயல்பாடோ இன்றி அண்மைக்கால வெற்றிகளை, பலன்களை மட்டுமே கருத்திற்கொண்டு அரசியல் நடத்துவது;
· தீங்கற்ற தமிழ்ச் சமுதாயம் அமைப்பதற்காய் முயல்வதைவிட, வெறும் தீயணைப்பு நடவடிக்கைகளில் மட்டுமே ஈடுபடுவது;
· மக்கள் பிரச்சினைகளில் தீர்க்கமான நிலைப்பாடு எடுக்காமல், நிரந்தரத் தீர்வுக்கு முயலாமல், கடிதம் எழுதுவது, அறிக்கை விடுவது, நீட்டி முழக்குவது என வறட்டு அரசியல் மட்டுமே செய்வது;
· முக்கியமான பிரச்சினைகளிலிருந்து மக்கள் கவனத்தை முக்கியமற்ற விடயங்களுக்கு திசை திருப்புவது;
· தனது திறமைகளை, சாதனைகளை “பனைத் துணையாய்” கொண்டாடுவது, எதிர்கட்சித் தலைவர்களின் திறமைகளை, சாதனைகளை “தினைத் துணையாய்க்” கொள்வது;
· மானம், ரோசம், வெட்கம் என எதுவுமே இல்லாமல் வெறும் வார்த்தைகளாலேயே உருட்டுவது; இதுதான் அரசியல் சாணக்கியத்தனம் என்று நியாயப்படுத்துவது;
· மக்கள் மீதும், மற்றக் கட்சிகள் மீதும் திடீர் பாசம், திடீர் மறதி எழுந்து மறைவது;
· மலர்க்கிரீடம், வீரவாள், தேர்பவனி, பாராட்டு விழா, சினிமாக்காரர் நிகழ்வுகள் என புகழ் போதையில் திளைப்பது;
· கட்டிடங்கள் கட்டுவது, நினைவுச் சின்னங்கள் எழுப்புவது, தன் பெயரைப் பொறிப்பது என ஒரு வரலாற்றுச் சிந்தையோடும், காலாதீத உணர்வோடும் மட்டுமே இயங்குவது.
இந்த கருணாயிசத்தின் அம்சங்களைப் பற்றி எழுதினால், இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

இங்கே ஒரு குறிப்பிட்டத் தலைவரை மட்டுமோ, அல்லது அவரது கட்சியை மட்டுமோ பழிக்கவில்லை. முன்னரே குறிப்பிட்டது போல, பெரும்பாலான தலைவர்கள், கட்சிகள் கருணாயிசத்தைத்தான் கொள்கையாகக் கொண்டிருக்கின்றனர். கருணாயிசம்தான் இன்றையத் தமிழகத்தின் முக்கியமான அரசியல் கொள்கையாக இருக்கிறது. ஒவ்வொருவரும் தமது தேவைக்கேற்றபடி, திறமைக்கேற்றபடி அதை மாற்றியமைத்து பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. “காமராஜ் ஆட்சியை அமைப்போம்” என்கிற காங்கிரசுக்காரர்களும், அ.தி.மு.க. உள்ளிட்ட அனைத்து முக்கிய கட்சிகளும், அரசியலில் புதிதாக அடியெடுத்துவைக்கும் பல புதுமுகங்களும் கருணாயிசத்தைத்தான் கடைபிடிக்கிறார்கள். இந்த கொள்கை அத்திவாரத்தை அமைத்துக் கொடுத்தவர் தமிழக அரசியலில் கடந்த அரை நூற்றாண்டு காலம் தனிப்பெரும் சக்தியாக வலம் வரும் கலைஞர் கருணாநிதிதான்.

தமிழீழ கருணாயிசம்

தமிழகத்து கருணாயிசம் இப்படி வேலை செய்தால், தமிழீழ கருணாயிசம் துரோகத்தின் உச்சத்துக்கே செல்கிறது. இந்த துரோக கருணாயிசம் மனித வரலாற்றில் பல்வேறு இடங்களில் பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டிருக்கிறது. இயேசு நாதரை கைது செய்யத் திட்டமிட்ட ரோமாபுரியின் உயர்பூசாரிகள் அவர் யாரென்று தெரியாமால் திணறிய நிலையில் 30 வெள்ளிக் காசுகளை கூலியாகப் பெற்றுக்கொண்டு இயேசுவை முத்தமிட்டு காட்டிக் கொடுத்தார் யூதாஸ். பண ஆசையினால்தான் யூதாஸ் அந்த துரோகத்தைச் செய்ததாகவும், தான் எதிர்பார்த்தபடி ரோமப் பேரரசின் ஆட்சியை இயேசு நாதர் கவிழ்க்காததால் யூதாஸ் கோபம் கொண்டிருந்ததால்தான் காட்டிக்கொடுத்தார் என்றும், கடவுளின் திட்டத்தை நிறைவேற்ற இயேசுதான் தன்னைக் கண்டுணர உதவும்படி கேட்டுக்கொண்டார் என்றும் பல புரிதல்கள், விவாதங்கள் நடக்கின்றன. ஆனாலும் யூதாஸ் காட்டிக் கொடுத்தவர் என்பதை ஒட்டுமொத்த உலகமே ஒத்துக்கொள்கிறது.

தமிழ் நாட்டு கலாச்சாரத்தில் யூதாஸ் போன்ற பழிச்சொல் பெற்றவர் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் வீரபாண்டிய கட்டபொம்மனைக் காட்டிக் கொடுத்த வெங்கடேஸ்வர எட்டப்பன். 1780ஆம் ஆண்டு முதல் எட்டயபுரம் குடும்பத்தார் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுடன் நல்லுறவு பூண்டு, சிறப்பு சலுகைகளைப் பெற்று வந்தனர்; அவ்வப்போது அவர்களுக்கு உளவுத் தகவல்களையும், படையாட்களையும் கொடுத்து வந்தனர். ஆனால் உண்மையில் எட்டப்பன் காட்டிக் கொடுக்கிறவர் அல்ல என்றும், அதிகாரத்தில் இருந்தபோது ஏராளமான மக்கள் நலப் பணிகளை செய்தார், குளங்களை வெட்டி தண்ணீர் வசதி செய்தார், பல கவிஞர்களை, புலவர்களை பாதுகாத்தார் என்றும் சிலர் வாதிடுகின்றனர். மா.பொ.சி. எழுதிய புத்தகத்தின் அடிப்படையில் சிவாஜி கணேசன் நடித்து வெளிவந்த வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம்தான் எட்டப்பனை மோசமானவராக சித்தரித்தது என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். உண்மையில் கட்டபொம்மனை காட்டிக் கொடுத்தவர் புதுக்கோட்டை விஜயரகுநாதத் தொண்டைமான்தான் என்கின்றனர் அவர்கள்.

துரோகம் என்பதற்கு தமிழ் கலாச்சாரத்தில் பல சொல்லாடல்கள் உள்ளன; நம்பிக்கை துரோகம், முதுகில் குத்துவது, (வளர்த்த கடா) மார்பில் பாய்வது, உறவாடிக் கெடுப்பது, காட்டிக் கொடுப்பது என்பன. ஒருவருடன் நெருங்கிப் பழகி, நம்பிக்கையைப் பெற்று, பின்னர் அந்த உறவுக்கு உண்மையாக இல்லாமல், எதிராக நடப்பதுதான் துரோகம். இந்த துரோகம் எந்த உறவிலும் நடக்கலாம். என்னை/எம்மை இதனால் இவர் காப்பார் என்று கருதிக் கொண்டிருக்கும்போது, அந்த எதிர்பார்ப்புக்கு நேர் எதிராக நடந்து கேடு விளைவிப்பதுதான் துரோகம். நட்பு, திருமணம், பொதுவாழ்வு போன்ற உறவுகளில் தனிமையை மதிப்பது, “உடுக்கை இழந்தவன் கை” போல உதவுவது, பொது வெளியில் ஒருவரையொருவர் குறை சொல்லாமல் இருப்பது, இரகசியம் காப்பது, பிறரிடம் அவற்றைப் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது போன்றவை முக்கியமான கூறுகள். இவற்றில் ஒன்றையோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவற்றையோ முறிப்பது துரோகமாகக் கொள்ளப்படுகிறது.

யூதாஸ், எட்டப்பன் எனும் அசிங்கமான வரிசையில் இப்போது சேர்ந்திருப்பவர் கருணா என்ற முரளிதரன். கிழக்கு மாகாணம் பட்டிகொல மாவட்டம் கிரண் எனும் கிராமத்தில் பிறந்தவர் இந்த கருணா. 1983-ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பில் சேர்ந்து, பல போர் நடவடிக்கைகளை முன்னெடுத்து, 1990-ஆம் ஆண்டு 900 சிங்கள, முஸ்லீம் காவல்துறை அதிகாரிகளைக் கொன்று, கிழக்கு மாகாணத்தின் தலைமைத் தளபதியாக உயர்ந்தார். தலைவர் பிரபாகரனுக்கு மெய்க்காப்பாளராக இருந்து, புலிகளின் இராணுவப் பிரிவில் இரண்டாம் இடத்தை பிடித்தவர் கருணா. விடுதலைப் புலிகள் கிழக்கு மாகாண மக்களின் நலனில் அக்கறை கொள்ளவில்லை என்று குற்றஞ்சாட்டி 2004 மார்ச் மாதம் இயக்கத்திலிருந்து வெளியேறினார். தீவிரவாதத்தைக் கைவிடுவதாகவும், சனநாயக மைய நீரோட்டத்தில் கலப்பதாகவும் சொன்னார். ஆனால் அவர் பணம் கையாடல் செய்ததாகவும், ஒழுக்கமின்றி நடந்ததாகவும் விடுதலைப் புலிகளின் உளவுத்துறை கண்டுபிடித்து அவரை நெருங்கிக்கொண்டிருந்ததுதான் காரணம் என்று இயக்கம் தெரிவித்தது. கருணா தரப்புக்கும் புலிகளுக்கும் கடும் சண்டை நடந்து, முன்னவர் பிடித்து வைத்திருந்த இடங்களை தாங்கள் கைப்பற்றிவிட்டதாக புலிகள் அறிவித்தனர். எனினும் சில நூறுபேர் கொண்ட படையோடு இலங்கையின் தென்கிழக்கு பகுதியில் ஆதிக்கம் செலுத்தினார் கருணா. 2006-ஆம் ஆண்டு கருணா படையின் உதவியோடு இலங்கையின் கிழக்கு மாகாணத்திலிருந்து புலிகளை வெளியேற்ற இலங்கை இராணுவம் ஒரு தாக்குதலைத் தொடங்கி, 2007 யூலை மாதம் அதில் வெற்றியும் பெற்றது.

இலங்கை அரசின் உதவியுடன் திருட்டுத்தனமாக வெளிநாட்டு தூதர்களால் பயன்படுத்தப்படும் கடவுச்சீட்டு பெற்று, கருணா லண்டனுக்குச் சென்றபோது 2007 நவம்பர் 2-ஆம் நாளன்று பிரிட்டனில் கைது செய்யப்பட்டார். அதிபர் மகிந்த ராஜபக்சேவின் சகோதரர் கொத்தபய ராஜபக்சே அந்த கடவுச்சீட்டைத் தந்ததாக கருணா நீதிமன்றத்தில் ஒத்துக்கொண்டார். 2008 சனவரி 25 அன்று ஒன்பது மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கருணா, யூலை 3 அன்று இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார். அவரது போர்க் குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டும் என்று பல்வேறு சர்வதேச நிறுவனங்கள் கோரிக்கை வைத்தும், பிரிட்டிஷ் அரசு அதை ஏற்கவில்லை. இலங்கைக்குத் திரும்பியதும் அரசியலில் சேர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஆன கருணா, ராஜபக்சே அமைச்சரவையில் மீள்குடியேற்றத் துறை துணை அமைச்சராக சேர்த்துக் கொள்ளப்பட்டார். ஈழத் தமிழர் இயக்கங்களின் மனித உரிமை மீறல் பற்றி விசாரணை கோரும் கருணா, அதன் மூலம் தனது தலையை தற்காத்துக்கொள்ள முயன்று வருகிறார்.

கருணாயிசத்தை இனம் காண்போம்

நேர்கோடு ஒன்று வரைந்து முக்கியமான தமிழ் அரசியல் கட்சிகளை அவற்றின் கொள்கைகள் அடிப்படையில் அந்த நேர்கோட்டில் அடையாளப்படுத்துங்கள். முற்போக்குச் சிந்தனை, சமத்துவம், சனநாயகம், சமூக நீதி, பெண் விடுதலை, சாதி-மத மறுப்பு, கருத்துச் சுதந்திரம், மனித உரிமை போன்ற கொள்கைகள் கொண்ட இயக்கங்களை இடது கோடியில் நிறுவலாம். சோசலிசம், கம்யூனிசம் பேசும், உண்மையாகவேப் பேணும் இந்தக் கட்சிகளை இடது சாரிகள் (Leftists) எனக் குறிப்பிடுகிறோம்.

“சமூகம் நன்றாகத்தானே போய்க்கொண்டிருக்கிறது; எந்த மாற்றத்துக்கும் இங்கே இப்போது தேவையே இல்லையே” என்று வாதிட்டு தற்போதைய சமூக நிலையை, அவலங்களை அப்படியே தக்கவைத்துக் கொள்ள நினைக்கும், பாடுபடும் இயக்கங்களை வலது கோடியில் குறிக்கலாம். பழமைவாதிகள், மதவாதிகள், சாதி வெறியர்கள், வெறுப்பு-கோபம் போன்ற கொடும் உணர்வுகளின் அடிப்படையில் வன்முறை அரசியல் நடத்துபவர்கள், ஃபாசிஸ்டுகள் போன்றவர்களை வலது சாரிகள் (Rightists) என்றழைக்கிறோம்.

அங்கேயும் இல்லாமல், இங்கேயும் இல்லாமல் மதிற்மேல் பூனையாக இயங்கும் இயக்கங்களை நேர்கோட்டின் மத்தியில் அடையாளப்படுத்தலாம். அவர்களை மையவாதிகள் (Centrists) என்கிறோம். இவர்களில் பெரும்பாலோர் முற்போக்கு கொள்கைகளைப் பேசிக்கொண்டு, பிற்போக்கு செயல்களில் ஈடுபடும் குழப்பவாதிகள், சுயநலவாதிகள், பிழைப்புவாதிகள், சந்தர்ப்பவாதிகள்.

இந்த அரசியல் நேர்கோட்டை உற்றுநோக்கினால், இடது பாதியில் வெகு குறைவான சக்திகள், தலைவர்கள் இடம்பெறுவதையும், வலது பாதியில் (அதாவது மையப் புள்ளியிலிருந்து வலதுகோடி வரை) பெரும் கூட்டமேக் குழுமிக்கிடப்பதையும் காணலாம். இந்தக் கூட்டத்தில் பெரும்பாலானோர் கருணாயிசத்தைத்தான் கொள்கையாகக் கொள்கின்றனர். ஆகஸ்ட் 17, 2013 அன்று சென்னை பல்கலைக்கழகத்தின் 155-வது பட்டமளிப்பு விழாவில் பேசிய முதல்வர் ஜெயலலிதா சொன்னார்: “ஒரு வருடத்துக்கு முன்கூட்டி நீங்கள் சிந்தித்தால், நெல் பயிரிடுங்கள்; பத்து வருடங்களுக்கு முன்கூட்டி நீங்கள் சிந்தித்தால், மரங்களை நடுங்கள்; நூறு வருடங்களுக்கு முன்கூட்டி நீங்கள் சிந்தித்தால், மக்களைக் கற்பியுங்கள் என்பது ஒரு சீனப் பழமொழி. எனது அரசு இவை மூன்றையுமே செய்திருக்கிறது. இப்போதும், இனிவரும் ஆண்டுகளிலும், எதிர்காலத்திலும் நல்லதோர் அரசை தருவதற்கும், தலைமுறைகள் பேசும் சீர்திருத்தங்களை கொண்டுவருவதற்கும் நான் உறுதி பூண்டிருக்கிறேன்.” அப்படியே நடந்து கொண்டு உண்மையிலேயே ஒரு சமூக-பொருளாதார-அரசியல்-கலாச்சார மாற்றத்தை சாதித்துக் காட்டினால், அவர் கட்சிக்காரர்கள் அதனை “அம்மாயிசம்” என்ற கொள்கையாகவே எதிர்காலத்தில் முன்வைக்கலாம். நேர் எதிராக அடக்குமுறைகள், அவதூறு வழக்குகள், என்கவுண்டர்கள், ‘தலைவா’ வகை விவகாரங்கள் எனத் தொடர்ந்தால், இது அம்மா வகை ஃபாசிசம் எனக்கொண்டு அவரது எதிரிகள் “அம்மாசிசம்” என்றும் அழைக்க நேரலாம்.

ஆனால் இப்போதைக்கு தமிழினத்தின் மீது கருணாயிசம்தான் கோலோச்சுக்கிறது. இவர்களின் கருணாயிசம் நம்மை கரைசேர்க்கும் என்று நம்புவது மணல் குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவது போலத்தான். தமிழினம் மிக மோசமான நிலையில் இருப்பதால், புது அரசியல் ரத்தம் பாய்ச்சப்பட வேண்டும்; புதுவகை அரசியல் ஊட்டச்சத்து புகட்டப்பட வேண்டும்; புத்தம்புது அரசியல் பயிற்சிகள் பயிற்றுவிக்கப்பட வேண்டும்; புதியதோர் அரசியல் கலாச்சாரம் உருவாக்கப்பட வேண்டும். பொருளாதாரப் புரிதல், அரசியல் தத்துவங்களை-விழுமியங்களை அறிதல், அரசுக் கொள்கைகளை விவாதித்தல் என ஓர் உயர்நிலை அரசியல் நடத்தப்பட வேண்டும். சினிமாத் திரையில் தலைவனைத் தேடி, அரசியலில் ஹீரோவைத் தேடி சீரழியாது, நடிகர்-தலைவர்களையும், தலைவர்-நடிகர்களையும் வீட்டுக்கு அனுப்பி ஒரு புதிய கலாச்சார மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும்.

காமராசரைப் பற்றி புகழ்ந்த கவிஞர் கண்ணதாசன் இப்படிப் பாடினார்:
அந்த மனிதனை அழையுங்கள் உங்கள்
அன்னைக் கோவிலுக் கவனோர் கோபுரம்
...
அந்த மனிதனை அழையுங்கள் உங்கள்
அடுத்த கட்டத்தை அழகுற நடத்த.

ஆனால் இன்றைய நிலையில், தமிழகமானாலும் சரி, தமிழீழமானாலும் சரி, ஒரே ஒரு தலைவன் வருவான், ஒரே ஒரு கொள்கை தருவான், நம்மையெல்லாம் சுபிட்சத்துக்கு அழைத்துச் செல்வான் என்று எதிர்பார்ப்பது பெரும் மடமை. தமிழினத்தின் இன்றைய அரசியல் இயலாமைக்குத் தீர்வு “அந்த மனிதனைப்” போன்ற ஆயிரமாயிரம் மனிதரை அடையாளம் காண்பதும், ஆங்காங்கேக்கூடி அளவளாவி ஓர் ஆன்ம சுயபரிசோதனையில் ஈடுபடுவதும், அனைவருமாக சாதி-மதம் கடந்து ஒருவரையொருவர் அரவணைத்துக் கொண்டு நம் இலக்கு நோக்கி நடப்பதும்தான்.

உதவிய நூல்கள், கட்டுரைகள்:
[1] டி. எம். பார்த்தசாரதி, தி. மு. க. வரலாறு. சென்னை: பாரதி நிலையம், 1986. பக்கங்கள்: 85-86, 88-89, 92, 109-110, 112, 115.
[2] ப. திருமாவேலன், “கருணாநிதி 90: வரலாறும், தகராறும்!” ஆனந்த விகடன், 5.6.2013.
[3] பல இணைய தளங்கள்.

தொல்காப்பியம் இருக்குவேதத்திற்கு முந்தையது!...

- முனைவர் . நெடுஞ்செழியன்
19-ஆம் நூற்றாண்டின் இறுதி யில் (கி.பி.1875) அறிஞர் பர்னல் இரண்டு ஆய்வு நூல்களை வெளியிட்டார். அவற்றுள் ஒன்று, 'தென்னிந்திய எழுத்தி யல் வரலாறு.' மற்றொன்று 'அய்ந்திரப் பள்ளியைச் சார்ந்த இலக்கண ஆசிரி யர்கள்.' இவ்விரு நூல்களுள், இந்திய எழுத்தியல் வரலாறு எனும் நூலில் 'பிராமி முதலான இந்திய எழுத்து வடிவங்களுக்குத் தமிழே அடிப்படை' என்பதை உறுதி செய்திருந்தார். ஆனால் எழுத்தியல் பற்றி ஆராய்ந்த அறிஞர்கள் இவரின் கருத்தைக் கூடுமானவரை புறக்கணித்தனர். 'அய்ந்திரப் பள்ளியைச் சார்ந்த இலக்கண ஆசிரியர்கள்' (ஒய் ற்ட்ங் ஆய்ண்க்ழ்ஹ cட்ர்ர்ப் ர்ச் நஹய்ள்cழ்ண்ற் ஏழ்ஹம்ம்ஹழ்ண்ஹய்ள்) என்ற நூலில், 'அய்ந்திரம் என்பது ஒரு சிந்தனைப் பள்ளியே தவிர அது ஒரு தனிமனிதரால் செய்யப்பட்ட இலக்கண நூல் அன்று' என்றார். மேலும் அய்ந் திரம் என்ற இலக்கண நூல் இந்திரன் என்ற கடவுளால் அல்லது தனிமனித ரால் இயற்றப்பட்டது என்பதற்கான எவ்விதச் சான்றும் கிடைக்கவில்லை என்றும் உறுதி செய்திருந்தார். ஆனால் இந்திய அறிஞர்கள், .சி. பர்னல் அவர் களின் கூற்றை ஒரு தலையாக 'அய்ந் திரம் என்பதைப் பாணினிக்கும் காலத் தால் முற்பட்ட சமற்கிருத இலக்கண நூலாகவே' கருதிவிட்டனர்.



அய்ந்திரத்தைச் சமற்கிருத 'மொழியிலமைந்த இலக்கணப் பள்ளி யாகப் பர்னல் குறிப்பிட்டாலும் கூட, அவர் தரக்கூடிய எடுத்துக்காட்டுகள் அக்கருத்தை வலியுறுத்தக்கூடிய வகை யில் அமையவில்லை. அவர் குறிப்பிடும் அவ் எடுத்துக்காட்டுகளுள் தலையா யவை இரண்டு. ஒன்று பெளத்த இலக்கியமாகிய 'அவதான சாதகத்தில்' புத்தரின் தலைமாணாக்கருள் ஒருவராகிய சாரிபுத்தன் தமிழ்நாட்டில் தன் பிள்ளைப் பருவத்தில் 'அய்ந்திரம் கற்றான்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளதாகும். இதனை விளக்கும் சக்கரவர்த்தி நயினார், 'அய்ந் திரம் என்பதற்கு உலகாய்தம் எனப் பொருளுரைத்தார் (. சக்கரவர்த்தி நயினார், நீலகேசி நூலுக்கான ஆங்கில முன்னுரை (ஆய் ஒய்ற்ழ்ர்க்ன்cற்ண்ர்ய் ற்ர் சங்ங்ப்ஹந்ங்ள்ண்). சக்கரவர்த்தி நயினார், அய்ந்திரத்தை உலகாய்தம் எனக் குறிக்க அவரின் ஆங்கில முன்னுரையைத் தமிழ்ப்படுத் திய பேராசிரியர் நா. வானமாமலை, உல காய்தம் என்பதைப் பூதவாதம் எனக் குறித்தார்.

உலகாய்தம், பூதவாதம் ஆகிய இரண்டும் ஒரு பொருள் குறிப்பன. அவை நிலம், நீர், தீ, வளி, விசும்பு என்ற அய்ந்து பூதங்களின் இயல்பை விளக்கிய அணுக்கோட்பாடுகளாகும். அறிவியலையும் தருக்கவியலையும் இணைத்த இக்கோட்பாடுகள் பேச்சுக் கலைக்குச் சிறப்பிடம் தந்தன. தருக்க முறையினால் உண்மையை நிலைநாட்ட வேண்டிய தேவை இருந்ததால் இக் கொள்கையாளர்கள் பேச்சுக் கலைக்குச் சிறப்பிடம் தந்தனர். இதனை விளக்கும் வகையில் அறிஞர் பர்னல் தரும் மற்றொரு சான்று பாணினி பற்றியதாகும்.

காஷ்மீரைச் சார்ந்த சோமதேவா என்பவர் எழுதிய கதாசரிதசாகரம் எனும் நூலிலிருந்து தரும் எடுத்துக்காட்டு அதுவாகும். இந்நூலில் 'சமற்கிருத இலக் கண ஆசிரியராகிய பாணினி அறிவிலியாக இருந்தார் என்றும், அதனால் வரரு சிகாத்தியாயனார் நடத்திய குருகுலத்திலிருந்து விலக்கப்பட்டார் என்றும், அப்படி விலக்கப்பட்ட பாணினி சிவனை நோக்கித் தவம் இருந்தார் என்றும், சிவன் அருளைப் பெற்றபின் மீண்டும் குருகுலத்திற்கு வந்து அவர்களோடு வாதம் புரிந்தார் என்றும் ஏழுநாட்கள் நடந்த அந்த வாதத்தில் பாணினி தோற்றார் என்றும் தன் அருள்பெற்ற பாணினி தோற்றதனால் ஆத்திரமுற்ற சிவன் குருகுலம் பின்பற்றிய அய்ந்திர நூல்களை எல்லாம் அழித்தான்' என்றும் குறிக்கப்பட்டுள்ளது.

மேற்காட்டிய இரண்டு சான்று களுமே அய்ந்திரம் அணுக்கோட்பாடு என்பதையும், அவ் அய்ந்திரம் தருக்க முறையில் வாதமுறையை விளக்கிய பேச்சுக்கலையின் இலக்கணம் என்ப தையும் வற்புறுத்தக் காணலாம். எனவே பனம்பாரனார் 'அய்ந்திரம் நிறைந்த தொல்காப்பியன்' எனக் குறிப்பது தொல் காப்பியர் பின்பற்றிய மெய்யியலின் அடிப்படை என்பதும், அம்மெய்யியல் தருக்க முறையினை உள்ளடக்கியது என்பதும் தெளிவு. இதனை,

நிலம்நீர் தீவளி விசும்போ டைந்தும்

கலந்த மயக்க முலக மாதலின்

எனும் நூற்பா உறுதிசெய்யும். தொல் காப்பியர் பொருளதிகாரத்தின் இறுதியில் விளக்கும் பத்து அழகு, காட்சி, ஐயம், தெளிவு முதலான தருக்கவியல் இலக்கணங்கள், 32 தந்திர உத்திகள் ஆகிய செய்திகள் யாவும் அக்கருத்தை உறுதிப்படுத்தும் சான்றுகளாகும்.

தொல்காப்பியம் இலக்கண நூலாதலால் அய்ந்திரத்தையும் இலக் கண நூலாகவே கருதிவிட்டனர் அறிஞர் கள். அப்படிக் கருதிய அறிஞர்கள்கூட அய்ந்திரத்தைச் சமற்கிருத நூலாகக் கருதவில்லை. பெளத்த வரலாற்றாசிரி யராகிய தாரநாதர், ''இந்நூல் மிகவும் பழ மையானது; தென்னகத்தில் வழங்கியது; கடவுள் உலகைச் சார்ந்தது; ஆரிய தேசத்தது அன்று'' என உறுதி செய்வார்.

தாரநாதரைப் போலவே இருக்கு வேதத்தையும் தொல்காப்பியத்தையும் ஒப்பாய்வு செய்த எம். சுந்தர்ராஜ், அய்ந் திரத்தைத் தமிழ் இலக்கண நூலாகக் கருதினாலும், அது இருக்கு வேதத்திற்கு முந்தையது என்று உறுதிசெய்கிறார் (ஓங்ம்ள் எழ்ர்ம் டழ்ங்லிஐண்ள்ற்ர்ழ்ண்c டஹள்ற்). எனவே அய்ந்திரம் என்பது இலக்கண நூலன்று. அது அணுவியலும் தருக்கவியலும் சார்ந்த அறிவுமரபுக்குரியது என்பது தெளிவாகும். ஒருவேளை அதை இலக் கண நூலாகக் கருதினாலும் கூட அது இருக்குவேதத்துக்கு முந்தைய தமிழ் மரபுக்குரியது என்பதே மாற்று உண்மை. இருக்குவேதம் எழுதாக்கிளவியாக வாய்மொழியாகவே வழங்கப்பட்டுள்ளது. சமற்கிருதத்திற்கு இன்றைய வரிவடிவம் அமைந்ததே மிகவும் பிற்காலத்தில்தான். எனவே எழுத்துமுறையே இல்லாத ஒரு மொழியில் எழுத்துகள் பற்றிய இலக் கணம் எப்படி இருந்திருக்க முடியும்?

மேலும் பானம்பாரனார், தொல் காப்பியரை 'முந்துநூல் கண்டு முறைப் பட எண்ணிப் புலம் தொகுத்தவராகப்' புகழ்கின்றார். இங்கு சொல்லப்படும் 'முந்துநூல்' என்பதில் தொல்காப்பியரின் இலக்கணப் புலமையும் அடங்கிவிடும். அதனால் அய்ந்திரம் என்பதை நாம் இலக்கண நூலாகக் கருதவேண்டியது இல்லை. அப்படிக் கருதினால் பனம்பார னார் 'கூறியது கூறல்' எனும் குற்றம் புரிந்தவராகிவிடுவார்.

நான்மறை

அதங்கோட்டாசான் நான்மறை முற்றியவர். இந்நான்மறை என்பது நச் சினார்க்கினியர் குறிப்பிடும் தைத்திரியம், பெளடிகம், தலவகாரம், சாமவேதம் எனும் கருத்தும் அண்மைக்கால ஆய்வு களால் மாற்றம் பெற்றுள்ளன. இருக்கு, யஜுர், சாம, அதர்வணம் என நான்காக எண்ணப்படும் முறை மிகவும் பிற்கால வழக்காகும். சாணக்கியரின் பொருள்நூல், வேதங்கள் மூன்று மட்டுமே என்ற பொரு ளில் ''திரையீ'' எனக் குறிப்பிடுகின்றது. அதனால், நான்மறை முற்றிய அதங் கோட்டாசான் என்ற தொடர்கூட ஆய் வுக்குரியதாகிறது. மாகறல் கார்த்திகேய னார், 'நான்மறை என்பதற்கு மூலமறை' எனப் பொருள்கொள்வதையும் இங்கே எண்ணிப்பார்க்க வேண்டும்.

மயங்காமரபின் எழுத்துமுறை காட்டி

பனம்பாரனாரின் பாயிரம் அரிய கருத்துப்புதையலின் திறவுகோலாகும். அறத்தைப் பரப்பும் இயல்பும், வேதப் புலமையில் தேர்ச்சியும் உடைய அதங் கோட்டாசானுக்குத் தொல்காப்பியர், 'மயக்கம்தராத மரபினை உடைய தமிழ் எழுத்துமுறையினைக் காட்டினார்' எனக் குறிப்பது மிகுந்த கவனத்துடன் ஆராயத் தக்கதாகும். வேதத்தில்வல்ல அதங்கோட் டாசானுக்குத் தொல்காப்பியர் தமிழ் எழுத்துமுறையைக் காட்ட வேண்டிய தேவை ஏன் வந்தது? இக் கேள்விக்கான நுட்பத்தை அறிஞர் டி.டி. கோசாம்பி விளக்கக் காணலாம். அவர் தம் நூலில்,

'
கி.மு. 14ஆம் நூற்றாண்டின் பிற் பகுதியின்போது, தென்னிந்தி யாவில் இருக்குவேதப் பாசுரங் கள் சரியானபடி தொகுத்து ஒழுங்கு செய்யப்பட்டதுடன் எழுத்து வடிவம் பெற்றுக் குறிப் புரையும் வழங்கப்பட்டது. அதற்கு முன்னர் இருக்குவேத மூலத்தைச் செவிவழியே கேட்டு அப்படியே அசை உச்சரிப்புடன் ஒப்பிக்கும் வழக்கமே இருந்தது.... ஆனால் பொதுவாக இது எழுத்து வடிவத் தில் பத்திரப்படுத்தி வைக்கப்பட வில்லை.'

எனக் குறிக்கின்றார். இருக்குவேதம் கி.மு. 14ஆம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்டு எழுத்து வடிவில் கொண்டுவரப்பட்டது தென்னாட்டில்தான் எனும் டி.டி. கோசாம் பியின் கூற்றைப் பனம்பாரனாரின் மயங்காமரபின் எழுத்துமுறை காட்டி என்ற கூற்றோடு எப்படிப் பொருத்திப் பார்க்காமல் இருக்கமுடியும்?

வேதத்தை உச்சரிக்கும் முறை

தமிழ் எழுத்துமுறையின் சிறப்பை அறியாத ஒருவருக்கு எழுத்துக்களின் எண்ணிக்கை, அவை பிறக்கும் இடம் ஆகியவற்றை விரிவாக விளக்கக்கூடிய வகையிலேயே தொல்காப்பியர் எழுத்த திகாரத்தின் பிறப்பியலை அமைத் துள்ளார். அதங்கோட்டாசான் வேதம் வல்லவராதலால் வேதத்தை ஒலிக்கும் உச்சரிப்பு முறையை எடுத்துக்காட்டி, அப்படி உச்சரிக்கும் முறைக்கும், தமிழ் எழுத்துக்களுடைய பிறப்பிடம், அவற்றின் மாத்திரை (உச்சரிக்கும் கால அளவு) ஆகியவற்றுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை விளக்கக்கூடிய வகையில் இரு நூற்பாக்களை அமைத் துள்ளார். அவை,

எல்லா வெழுத்தும் வெளிப்படக் கிளந்து

சொல்லிய பள்ளி யெழுதரு வளியின்

பிறப்பொடு விடுவழி உறழ்ச்சி வாரத்(து)

அகத்தெழு வளியிசை யரில்தப நாடி

அளபிற் கோடல் அந்தணர் மறைத்தே - நூற்பா - 102.

அஃதிவண் நுவலா தெழுந்துபுறத் திசைக்கும்

மெய்தெரி வளியிசை அளபுநுவன் றிசினே

-
நூற்பா - 103.

என்பனவாம். இந் நூற்பாக்கள் இரண்டும் சமற்கிருத ஒலிப்புமுறை, தமிழ் எழுத்து முறைக்கு மாறானது என்பதைப் புலப்படுத்துகின்றன. 'வேதத்தின் ஒலிப் புமுறை பற்றி நான் விளக்க வரவில்லை; மாறாகப் பொருண்மை தெரிகின்ற காற்றினால் ஆகிய தமிழ் எழுத்தின் (மாத்திரையின்) அளவினைக் கூறினேன்' என உறுதி செய்கின்றார். தொல்காப்பியத்தின் அந்நூற்பாக்களுக்கு 'வேதத்தின் ஒலிப்புமுறை பொருள்தெரியா நிலைமை ஆகலின் அவற்றிற்கு அளவு கூறமாட்டார்கள்' என்று உரையாசிரியர் இளம்பூரணார் தரும் விளக்கமும் எண்ணத்தகும். இதனால், அதங்கோட்டாசான் காலத்தில் வேதம் எழுத்து வடிவைப் பெறவில்லை என்பதும், அதன் காரணமாகவே தொல்காப்பியர் மயக்கம் தராத மரபினை உடைய தமிழின் எழுத்துமுறையைக் காட்டினார் என்பதும் உறுதியாகின்றது.

தமிழ் எழுத்துகளின் எண்ணிக்கையும் வேதக் கடவுளரின் எண்ணிக்கையும்

வேதக் கடவுள்களின் எண் ணிக்கை 33 என்பதை இருக்குவேதம், அதர்வண வேதம் ஆகியவையும் அவற் றின் வழியாகத் தோன்றிய பிராமணங் களும் உறுதிசெய்கின்றன. அவை,

ஆதித்தியர்கள் 12

வசுக்கள் 8

உருத்திரர்கள் 11

வசத்காரர் 1

பிரஜாபதி 1

என்பன. 33 என்ற எண்ணிக்கை வேதநூல்களில் வரையறுக்கப்பட்ட தற்கான காரணத்தை ஆராயும் சுந்தர்ராஜ் அம் முப்பத்து மூன்றும் தொல்காப்பியர் குறிப்பிடும்

உயிரும் உடம்புமாம் முப்பது முதலே

சார்ந்துவரல் மரபின் மூன்றலங் கடையே.

எனும் நூற்பாவின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவை என்பதைத் தம்நூலில் (தண்ஞ் யங்க்ண்c நற்ன்க்ண்ங்ள் ஆக்க்ங்ய்க்ஹம்) விரிவாக விளக்கியுள்ளார். ஆதித்தியர்கள் 12 என்பது தமிழின் 12 உயிர் எழுத் துக்களே என உறுதி செய்யும் அவர், வசுக்கள் பற்றியும் தக்க சான்றுகளுடன் ஆராய்ந்துரைக்கிறார். 'வழு' என்னும் தமிழ்ச்சொல்லே 'வசு' என ஆகியதை அறிஞர்கள் எமனோ, பர்ரோ தொகுத்த 'திராவிட வேர்ச்சொல் அகராதி'யிலிருந்து (உங்க்.4336) எடுத்துக்காட்டி நிறுவு வார். இந்த வசுக்கள் மொழிக்கு முத

லில் வாரா தமிழ் மெய்யெழுத்துக்கள் என்பதும் இந்த எட்டும் தொல் காப்பியருக்குப் பிந்திய வழக்கு என்பதும் இங்கே எண்ணத்தகும்.

'
' எனும் மெய்யெழுத்து

இருக்குவேதக் கடவுள்களில் ஒன் றாகக் குறிக்கப்படுவது '' என்பதாகும். இக்கடவுளைப் பற்றிய வரலாறு தெரி யாமல் அறிஞர்கள் குழம்பியுள்ளனர். (இராகுல சாங்கிருத்தியாயன், ரிக்வேத கால ஆரியர்கள்) பிரஜாபதியாகக் கருதப் படும் '' என்பது தமிழ் உயிர் மெய் எழுத்தான '' வேயாகும். சங்க காலத்தில் '' என்பது ற் என எழுதப்பட்டது. இவ் வடிவத்தையே மனித உருவிலிருக்கும் '' வே என இருக்குவேதம் போற்று வதை ஆய்வுகள் உறுதிசெய்கின்றன.

இந்திரனும் வருணனும்

இருக்குவேதத்தில் இரட்டைக் கடவுளராகக் குறிக்கப்படுபவர்கள் இந்தி ரனும் வருணனும் ஆவர். இருவருள் ளும் இந்திரனே போர்க் கடவுளாகவும், மழைக்கடவுளாகவும் போற்றப்படு கின்றான். ஏறத்தாழத் தலைமைத் தெய்வ மாக வணங்கப்படும் இந்திரன் இருக்கு வேதத்தின் இடைப்பகுதியில் அறிமுக மாகித் திடீரெனக் காணாமல் போய் விடு கிறான். இவ்வாறு இந்திரன் புறக்கணிக் கப்படுவதற்கான காரணம் பெரும்புதிராக இருப்பதாக அறிஞர் அம்பேத்கர் (அம் பேத்கர் சிந்தனைகள்-8) குறிப்பிடுவார். திடீரென்று மறைந்துவிடுவது மட்டு மின்றி அகலிகை, இந்திரன் தொடர்பின் வாயிலாக இந்திரனுடைய ஒழுக்கமும் சிதைக்கப்படுகிறது. இந்திரனுடைய புகழ் சிதைக்கப்படும் அதே நேரத்தில், வைதிக எதிர்ப்பை அடிப்படையாகவும் ஆரியர் வருகைக்கு முற்பட்ட சிந்தனை மரபைச் சார்ந்தனவாகவும் கருதப்படும் ஆசீவக, சைன, பெளத்த சமயங்கள் இந்திரனை அறிவுமரபின் மூல வடிவமாகப் போற்றுகின்றன.

தொல்காப்பியரும் இந்திரனை யும், வருணனையும் மருத, நெய்தல் திணைகளின் கடவுள்களாகப் போற்று வார். தொல்காப்பியர் குறிப்பிடும் அதே பொருளிலேயே அதாவது மழைத் தெய்வமாக இந்திரனும் கடல் தெய் வமாக வருணனும் குறிக்கப்படுவதைப் போலவே இருக்குவேதமும் அவர் களைப் பற்றிக் குறித்துள்ளது. இவை எல்லாவற்றையும்விட இருக்குவேதம் இந்திரனையும் வருணனையும் அசுரர் களாகவே (இருக்குவேதம்: முதல் மண்டலம் 174-1, 7-36:2) குறித்துள்ள தும் எண்ணத்தகும். இருக்குவேதத்தில் குறிக்கப்படும் அசுரர்கள் வைதிக எதிர்ப்பாளர்கள் என்பதை அறிஞர்கள் (தருமானந்த கோசாம்பி, தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா) உறுதி செய் துள்ளனர். எனவே தொல்காப்பியர் குறிப்பிடும் தமிழ் மக்களின் நிலத்தெய் வங்களான இந்திரனையும் வருண னையும் இருக்கு வேதம் அப்படியே தழுவி அதே பொருளில் அமைத்துக் கொண்டது என்பது உறுதியாகிறது. கடல் வழிப்பயணத்தை அறியாத இருக்குவேதப் புலவர்கள் வருணனைக் கடற்பயண வழிகாட்டியாகக் குறிப் பதைப் பாவாணர் சுட்டிக்காட்டி விளக்குவதும் இங்கே எண்ணத்தகும்.

ஆறுபருவங்கள்

தமிழ்மரபில் பன்னிரண்டு மாதங்கள் கொண்டது ஓராண்டாகும். இதனை இரண்டு இரண்டு மாதங்கள் கொண்ட ஆறு பருவங்களாக வகைப் படுத்துவார் தொல்காப்பியர். இருக்கு வேதத்தில் பதின்மூன்று மாதங்கள் கொண்டு ஆண்டுமுறை ஒன்றும் பன்னிரண்டு மாதங்கள்கொண்ட ஆண்டுமுறை ஒன்றுமாக இரண்டு வகையான ஆண்டுமுறைகள் குறிக்கப் பட்டுள்ளன. இவற்றுள் பன்னிரண்டு மாதங்களையும் ஆறு பருவங்களையும் கொண்ட ஆண்டுமுறை தமிழர்களிட மிருந்து இருக்குவேதம் கடன் கொண்டது என்பதை இருக்குவேத ஆராய்ச்சியாளராகிய கிரிஃபித் (ஏண்ழ்ண்ச்ச்ண்ற்ட்) உறுதி செய்துள்ளார். இருக்குவேதத்தில் குறிக்கப்படும் விஷ்ணு, பூசன் ஆகிய புகழ்மிக்கக் கடவுள்களின் பெயர்கள் யாவும் தமிழ் வேர்ச்சொல்லின் அடி யாகப் பிறந்தவை என்பதைச் சொல்லியல் அறிஞர்கள் எமனோவும் பர்ரோ வும் விளக்கியுள்ளனர் (உஊஉ) இருக்கு. வேதத்தில் பொருள்தெரியாத பல சொற்களுக்கும் தமிழே மூலமாக இருப்பதை அக்கினிகோத்திரம் தாத்தாச்சாரியர் (ஒய்ற்ழ்ர்க்ன்cற்ண்ர்ய் ற்ர் தண்ஞ் யங்க்ண்c ள்ற்ன்க்ண்ங்ள்) தெளிவுபடுத்தியுள்ளார். இருக்கு வேதம் எனும் பெயரில் உள்ள முதல் எழுத்தான 'ரி' தமிழின் சிறப்பெழுத்துக் களில் ஒன்றான () 'றி' எனும் எழுத் தின் திரிபே என்பார் எம். சுந்தர்ராஜ்.

இவ்வாறு, பல்வேறு சான்று களைக் கொண்டு காணும்போது இருக்குவேதம் தமிழியற் சூழலிலேயே தொகுக்கப்பட்டது என்பது தெளி வாகும். இக்கருத்தினை,

'
தமிழுக்கும் இருக்குவேதத் திற்கும் இடையே காணப்படும் நெருக்கத்திற்கான காரணம் ஏதோ தற்செயலாக ஏற்பட்ட ஒற்றுமை என்று யாரும் கருதி விடக் கூடாது. தமிழ்ப் பண் பாட்டுக் கூறுகள்தாம் மாறு வேடம் அணிந்தோ, அல்லது முகமூடி போட்டுக் கொண்டோ இருக்குவேதத்தில் உள்ளன என்பதற்கு நாம் வெளிப்படை யான சான்றுகளைக் கொண் டுள்ளோம்...

சமற்கிருத மொழியும் அதன் இலக் கிய மரபுகளும் தமிழியத்தையே அடிப்படையாகக் கொண்டவை. இதன் விளைவாக ஒரு கலப்பு மொழி (ஙண்ஷ்ங்க் கஹய்ஞ்ன்ஹஞ்ங்) தோற்றம் கொண்டது. அதைத்தான் நாம் இப்போது சமற்கிருதம் என்று அழைக்கின்றோம். இந்த மொழி யில் அமைந்த இலக்கியங்களுக்கு உரிய உள்ளடக்கத்தை வழங்கிய ஆசிரியர்கள் அனைவரும் தமிழர் களே', என வரையறை செய்வார் எம். சுந்தர்ராஜ்.

இருக்கு வேதத்தில் தமிழியக் கூறுகள் மிகுதியாக இடம் பெற்றமைக் கான காரணம் அது தென்னாட்டில் தொகுக்கப்பட்டது மட்டுமல்ல; தொல் காப்பியர் விளக்கிக்காட்டிய தமிழ்எழுத்து முறையில் அது தொகுக்கப்பட்டதே ஆகும். ஓர் இனத்தின் எழுத்து முறை யைக் கடன்பெறும் இனம், எழுத்தை மட்டுமல்லாது அவ் எழுத்துமுறைக்குரிய பண்பாட்டுக் கூறுகளையும் கடன்பெறு வது இயல்பு. ஜப்பானியப் பண்பாட்டில் தமிழ்ப் பண்பாட்டுத் தாக்கம் மிகுதியாக இருப்பதற்கான காரணமும், ஜப்பானிய எழுத்துமுறை, தமிழ் எழுத்துமுறையைப் பின்பற்றி அமைந்ததால்தான் என்பதையும் இங்கே நாம் எண்ணிப்பார்கக வேண்டும்.

தொல்காப்பியத்தின் பழமை

இருக்கு வேதம் முதன்முதலாகத் தென்னாட்டில் எழுத்து வடிவில் தொகுக் கப்பட்டு குறிப்புரைகளும் எழுதப்பட்டன எனவும், அக்காலம் கி.மு. 14 ஆம் நூற் றாண்டு எனவும் டி.டி. கோசாம்பி கூறுவ தாலும், இருக்குவேதம், தொல்காப்பியர் கூறும் தமிழ் எழுத்திலக்கணம் முதலான இலக்கணக் கூறுகளைத் தழுவி அமைந் துள்ளதாலும், இருக்குவேதம் தொகுக்கப் பட, அதாவது தொல்காப்பியர் விளக்கிய எழுத்துமுறையை வேதமொழிக்குரிய வகையில் வடிவமைத்து, அதனடிப்படை யில் வேதத்தை எழுத்துவடிவில் கொண்டுவரக் கொஞ்சம் கால இடை வெளி தேவைப்பட்டிருக்கும். எனவே, தொல்காப்பியம் இருக்கு வேதத்திற்கு முற்பட்டது என்பது தெளிவு.

தொல்காப்பியர் குறிப்பிடும் வழி பாட்டு முறைகளான கொடிநிலை, கந்தழி, வள்ளி எனும் மூன்றும் தந்திர வழி பாட்டுக்குரியன என்பதையும், அவை முறையே சிந்துவெளி அகழாய்வில் கண்டெடுக்கப் பெற்ற லதாசாதனம் (லதா - கொடி, சாதனம் - நிலை) இலிங்கம், பகயாகம் எனும் சகம்பரி (ஆறு வகையான செல்வங்களை வழங்கும் வள்ளன்மை மிக்க தந்திரச் சடங்கு) எனவும் அடையாளம் காணப் பட்டுள்ளன. சிந்துவெளி எழுத்துமுறை பற்றி ஆராய்ந்த உருசிய நாட்டு அறிஞர்கள், அவ்எழுத்துமுறை தொல்காப்பியர் காட்டும் இலக்கண அமைதியோடு மட்டுமே பொருந்துகிறது என்பதை முப்பது ஆண்டுகளுக்கு முன்பே உறுதி செய்தனர். (பட்ங் ஐண்ய்க்ன்

15
லி4லி80).

கி.மு. எட்டாம் நூற்றாண்டில் பிரா மணங்கள், ஆரண்யங்கள், தர்மசாத்திரங் கள் முதலான வைதிக இலக்கியங்கள் தோன்றின. இவை உருவாக்கிய சமூகக் கோட்பாடுகளுக்கு மறுப்பாக ஓர் அறிவுப் புரட்சி தோன்றியது. அப்புரட்சியைப் பரிவிராசகர் அமைப்பு நாடுமுழுவதும் கொண்டு சென்றது. அவ் அமைப்பின் மூலவர் எண்ணியக் கோட்பாட்டின் நிறுவனராகிய கபிலர் ஆவார். எண்ணியம் (சாங்கியம்) தொல்காப்பிய அய்ந்திர மரபிலிருந்து கிளைத்தது. வேத வேள்வி எதிர்ப்பும், அணுவியலும், கடவுள் மறுப்பும், எண்ணியத்தின் கூடுதல் அடிப்படை. இவ் எண்ணியம் கி.மு. ஆறாம் நூற்றாண் டில் ஆசீவகத்தோடு இணைந்தது. அதனால் கி.மு. 8ஆம் நூற்றாண்டிலோ, அல்லது அதற்குப் பின்போ தொல் காப்பியம் இயற்றப்பட்டிருக்குமானால் எண்ணியத்தின் தாக்கம் அல்லது ஆசீவகத்தின் தாக்கம் அதில் இருந்தாக வேண்டும். ஆனால், அப்படி ஒரு சுவடே தொல்காப்பியத்தில் இல்லை.

எனவே மெய்யியல், பண்பாட்டி யல், தருக்கவியல், எழுத்தியல், தொல்லியல் முதலான அனைத்துத் துறைகளின் அடிப்படையில் ஆராய்கின்றபோது, இருக்குவேதத்திற்கு மட்டுமல்ல. உலகில் எழுதப்பெற்ற நூல்கள் அனைத்திற்கும் தொல்காப்பியமே முந்தையது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை; உண்மை வெறும் புகழ்ச்சியில்லை.

(
மேலும் கூடுதல் செய்திகளுக்கு கட்டுரையாசிரியரின் 'தொல்காப்பியம் - திருக்குறள் காலமும் கருத்தும்' எனும் நூலினைக் காண வேண்டுகிறோம்)

கணவன் - மனைவி உறவைவிட உன்னதமான உறவு உண்டா?

கணவனுக்குத் தலைவலி. நெற்றியை அழுத்திப் பிடித்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்திருக்கிறான். மனைவி கொஞ்சம் தைலம் எடுத்து வந்து, கணவன் அருகில் அம...