Friday, March 17, 2017

டாக்டர் இராதா கிருட்டிணன்

1888  -ஆம் ஆண்டு செப்டம்பர்  மாதம் 5 -ஆம் தேதி திருத்தணியில் ஏழை தெலுங்கு பிராமண குடும்பத்தில் பிறந்தார்.இவருடைய தந்தை சர்வபள்ளி வீராசாமி. தாயார் சீதாம்மா.தம் இளமைக் காலத்தைச்  சொந்த ஊரிலும் திருப்பதியிலும் கழித்தார்.16 வயதில் வேலூரில் கல்லூரிப் படிப்பைத் துவங்கினார்.அப்பொழுது  பெற்றோர் தேர்ந்தெடுத்த தனது தூரத்து உறவினரான சிவகாமு என்பவரை மணந்தார்.அடுத்த  ஆண்டு சென்னையில் தத்துவத்தைச் சிறப்புப் பாடமாக எடுத்துத் தன்  மேற்படிப்பைத் தொடர்ந்தார்.விரும்பி இப்பாடத்தை எடுத்ததைக் காட்டிலும்  இந்தப் படிப்பை முடித்த அவரது உறவினர் தன்  புத்தகங்களை இலவசமாக கொடுக்க முன்வந்ததால் குடும்பப் பொருளாதாரச் சூழ்நிலையால் இதைப் படித்தார்.இத்துறையில் அதிக ஆர்வமும் ஈடுபாடும் உண்டானதால்  படிப்பைச் சிறப்பாக முடித்தார். முதுகலைப் பட்டம் பெற   அவர் எழுதிய ஆய்வுக் கட்டுரை  ஆசிரியர்களின் பாராட்டைப் பெற்றது.  20  -ஆம் வயதில் ஆய்வுக் கட்டுரை பிரசுரிக்கப்பட்டது.வேதாந்தத்தில் அறவியல் பற்றி அவர் எழுதிய ஆய்வுக் கட்டுரையின்  தலைப்பு :"The Ethics of the Vedanta and Its Metaphysical Presuppositions". வேதாந்தத்தில் அறவியலுக்கு இடம் இல்லை என்னும் குற்றச்சாட்டை அக்கட்டுரை மறுத்தது.

படிப்பு முடிந்ததும் சென்னை பிரெசிடென்சி கல்லூரியில் தத்துவ  விரிவுரையாளராக ஆசிரியர் பணியைத் தொடங்கினார்.அப்பொழுது அவருடைய சம்பளம்  17 ரூபாய். தன்னம்பிக்கையினாலும்  சொந்த முயற்சியாலும் முன்னுக்கு வந்தவர் இவர். சென்னைப்  பல்கலைக்கழகத்தில் பல்வேறு கல்லூரிகளில் பேராசிரியராகவும் கல்லூரி முதல்வராகவும் செம்மையாகப் பணியாற்றினார்.1929   -இல் இங்கிலாந்து மான்செஸ்டர் கல்லூரியின் முதல்வராக நியமிக்கப்பட்டார்.  இவர் கல்விப் பணிகளில் குறிப்படத்தக்க ஒன்று : கல்கத்தா பல்கலைக்கழகத்தில் ஐந்தாம் சியார்சு மன்னர் அறக்கட்டளை யில் அமைந்த மனநல-அறநிலை அறிவியல் துறையில் (Chair of Mental and Moral Science) இவர் பணி புரிந்தது.  1936 - 1939 கால கட்டத்தில், ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தின் கீழைச் சமயங்கள்-அறவியல் துறையில் பேராசிரியராகப் பணி புரிந்தார். 1939 -இல் பிரித்தானியக் கழகத்தின்  உறுப்பினராகத் (Fellow of the British Academy) தேர்ந்தெடுக்கப்பட்டார். 1938-1948 ஆண்டுகளில் காசி இந்துப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணிபுரிந்தார்.

1946 - 1952 வரை UNESCO வில் இந்தியப் பிரதிநிதியாகப் பதவி வகித்தார்.ரஷ்யாவின் இந்தியத் தூதராக  (1949 - 1952 ) பணியாற்றினார்.அப்பொழுது ரஷ்ய அதிபர் ஸ்டாலினை சந்தித்து உரையாற்றினார். இருவரிடையே நல்ல நட்பு இருந்தது. இந்தியா  திரும்பும் முன் இராத  கிருட்டிணனை சந்தித்த ஸ்டாலின் "மனிதனாக என்னை ஏற்று கொண்ட முதல் மனிதர் நீர்தான்" என உணர்ச்சிபட கூறினாராம்.இந்திய விடுதலைக்காக பாடுபட்ட காந்தி, நேரு, அம்பேத்கார், சுபாஷ் சந்திரபோஸ், தாகூர் போன்றவர்களுடன் நேரடியாக  தொடர்பு உண்டு இராதா கிருட்டிணன் அவர்களுக்கு. 1952 - 1962 வரை இந்தியாவின் துணைக் குடியரசுத் தலைவராக இருந்தார்.இந்தக் காலக்கட்டத்தில் முக்கியமான காரசாரமான  விவாதங்கள் மக்களவை (மேல் சபை) யில் நடைபெறும்போது வடமொழி இலக்கியங்கள், பைபிள் இவற்றிலிருந்து மேற்கோள்கள் எடுத்துச் சொல்லி அந்தச் சூழ்நிலையை மாற்றிக் குடும்ப நிகழ்ச்சி போல நடத்தி செல்வார் எனத் திரு நேரு அவர்கள் கூறுகிறார். 13 மே 1962 முதல் 13 மே 1967 வரை இந்தியாவின் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.அப்போது பல்வேறு மாநிலங்களில் பல குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு அதன் மீதான மேல் முறையீடு உச்சநீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுக்  கருணை மனுக்கள்  பரிசிலனைக்கு வந்தபோது மரண தண்டனை தேவையில்லை என்ற  கருத்தைத் தெரிவித்தார். பதவிக் காலம் முடிவடைந்ததும் அடுத்துப்  போட்டியிட விரும்பவில்லை.

 இவர் சிறந்த தத்துவமேதை. தத்துவத் துறையில் ரஸ்ஸலுக்கு அடுத்தப்படியாக உலகத்தாரால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர். உண்மையை உள்ளபடியே உணர உதவும் தருக்க அடிப்படையே தத்துவம் என்கிறார் இவர்.
இவர் நல்ல கல்வியாளர். ஆசிரியர் பணியைப்  பெருமையாய்க் கருதியவர். ஆசிரியர் தொழிலுக்கு மரியாதை கொடுத்தவர். மாணவர்கள் சிலர் அவர் பிறந்தநாளை  கொண்டாடுவதற்கு அனுமதி கேட்டபோது அவர் பின்வருமாறு கூறினார்: "என் பிறந்த நாளைத் தனிப்பட்ட முறையில் கொண்டாடுவதைவிட, அதையே ஆசிரியர் தினமாகக் கொண்டாடினால் நான் பெருமையாக உணர்வேன்" என்று. அவரின் வேண்டுகோளுக்கிணங்க 1962 ஆம் ஆண்டு முதல்,  செப்டம்பர் மாதம் 5 -ஆம் நாள் ஆசிரியர்  தினமாகக் கொண்டாடப்படுகிறது.

இராதா கிருட்டிணனின் பேச்சுக்களும் எழுத்துக்களும் வரலாற்றில் சிறப்பிடம் பெற்றவை.தம் வாழ்நாளில் பலப்பல நூல்களை எழுதிக் குவித்தவர் முனைவர் இராதாக்கிருட்டிணன். 'வாழ்வியல்  - இந்துக்களின் பார்வையில்' (The Hindu View of Life), 'கருத்தியல் கோணத்தில் வாழ்க்கை, சமயம், சமூகம்' (The Idealist View of Life , Religion and Society), ' ‘கீழை மேலை நாடு-களில் மெய்ப்பொருளியல் வரலாறு’ (Eastern Religions and Western Thought), 'இந்தியத் தத்துவங்களின் ஊற்று நூல்' (A Source Book in Indian Philosophy). மதிப்புக்குரிய பன்னாட்டுத் தாளிகைகளிலும் அவர் கட்டுரைகள் வெளிவந்துள்ளன.

 இராதாக்கிருஷ்ணன் இணையருக்கு ஐந்து பெண் குழந்தைகளும் சர்வபள்ளி கோபால் என்ற மகனும் உள்ளனர். இந்திய வரலாற்றுத் தொடர்பான துறையில் கோபால் அவர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்.

விருதுகள்:

1954 -ஆம் ஆண்டு இவருக்குப் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. ஏறக்குறைய அதே சமயம் 'முனைவர் இராதாக்கிருட்டிணன் தத்துவங்கள்' (The Philosophy of Dr. Sarvepalli Radhakrishnan) என்னும் நூல்  அமெரிக்காவில் வெளியிடப்பட்டது.
உலகின் பதினேழு பல்கலைக்கழகங்களிலிருந்து டாக்டர் பட்டம் பெற்றவர் இவர். ஐந்து முறை நோபல் பரிசுக்காக பரிந்துரைக்கப் பட்டார்.ஆனால் வெற்றி பெறவில்லை.
1931 -இல் 'சர்' பட்டம் இவருக்கு  வழங்கப்பட்டது ; இந்திய நாடு விடுதலை அடைந்த பின் அப்பட்டத்தை  இவர் துறந்துவிட்டார். 1963  -இல் 'Order of Merit' வழங்கி இவரைக் கவுரவித்தது காமன்வெல்த் நாடுகள் சபை. 1961 -இல் 'German Book Trade ' வழங்கிய 'சமாதானப் பரிசை'ப் பெற்றார். இவர் மறைவுக்குச் சில காலம் முன்பு - 1975 இல் - டெம்பிள்டன் பரிசு இவரைத் தேடி வந்தது. நோபல் பரிசுக்கு வழங்கப்படும் தொகையை விட இப்பரிசுக்கு வழங்கப்படும் தொகை உயர்ந்தது. ஆயினும் இப்பரிசுப் பணம் அத்தனையையும் ஆக்சுபோர்டு பல்கலைக் கழகத்துக்கே கொடுத்துவிட்டார். இவர் நினைவாக அப் பல்கலைக்கழகம் 'இராதாக்கிருட்டிணன் உதவித் தொகை' வழங்கத் தொடங்கியது.
79 வயதில் சென்னைக்குத் திரும்பி "கிரிஜா" என்ற தன் இல்லத்தில் வசித்து வந்தார்.17 04 1975 அன்று  அமைதியாக இறையடி சேர்ந்தார். அப்பொழுது அவருக்கு வயது 87.

பழங்காதலின் பல மொழிகள்

1. காதல் கண்களிலிருந்துதான் ஆரம்பமாகிறது. - ரஷ்யா

2.  ஒரேயொரு கடைக்கண் பார்வையில்  காதல் நடப்படுகிறது. - அரேபியா

3.  பொறாமை இல்லாமல் காதல் இல்லை. - பிரெஞ்சு

4.  தூக்கம் வந்தால் தலையணை தேவையில்லை, காதல் வந்தால் அழகு  தேவையில்லை - பாஷ்டோ

5.  காதல் இதயம் எப்போதும் இளமையாக இருக்கிறது - ஹீப்ரூ

6.  காதலிக்கப்படுவதை விட காதலிப்பது மேல் - ஈஸ்டோனியன்

7.  காதலைத் திருட முடியாது. ஆனால் அது திருடர்களை உருவாக்குகிறது. -  ஸ்வீடிஷ்

8.  காதலை மறுக்கலாம் யாராலும் வெறுக்க முடியாது. - தமிழ்

9.  காதலர்களின் கோபம் காதலைப் புதுப்பிக்கிறது - லத்தீன்

10. காதல் குடிசையிலும் கொலு மண்டபத்தைப் போலவே வாழ்கிறது - ஆங்கிலம்

11.  காதல் மலர் திருமணத்தில் கனியாகிறது - பின்னிஷ்

12. காதல் அச்சத்தை வெளியே துரத்துகிறது - செக்

13.  காதலில் இருக்கும்வரை, உலகில் எதுவும் வருத்தமுறச் செய்யாது - ஹங்கேரியன்

14.  காதல் முள்ளில்லாத ரோஜாக்களையே பார்க்கிறது - ஜெர்மன்

15.  காதல் இதயத்திலிருந்து கண்வழி வெளிப்படுகிறது - தமிழ்

Wednesday, March 15, 2017

சிற்பியின் “மௌன மயக்கங்கள்”காதல் ததும்பும் காம நிலை



முனைவர் பூ.மு.அன்புசிவா
உதவிப் பேராசிரியர்
தமிழ்த்துறை
இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்- 641 028
பேச:098424 95241,98438 74545.

            தமிழிலக்கிய வரலாற்றில் சிற்பியின் 'மௌன மயக்கங்கள்புதுக்கவிதை வடிவில் வெளிவந்த முதல் (1982) கதைக் கவிதை (Fiction Poetry) என்ற சிறப்பைப் பெறுகிறது. தன் இனிய நண்பனின் அந்தரங்க வாழ்க்கையை மையமாகக் கொண்டு இக்கதைக் கவிதையைப் படைத்திருக்கிறார் கவிஞர் சிற்பி. பரத்தமை என்ற மாறாத சாபத்தில் இருந்து பெண்குலம் விடுதலை அடைய முடியாதபடி பற்றிப்படர்ந்திருக்கும் இன்றைய சமூகச் சூழலைக் கதைக் கருவாகக் கொண்டு இக்கதை படைக்கப்பட்டிருக்கிறது. இன்று மனித குலத்தையே அச்சுறுத்தும் வகையில் உலகை உலுக்கிக் கொண்டு இருக்கும் தீயசக்தியாக உருவெடுத்துப் பரவிவரும் ஆட்கொல்லி நோய் (எயிட்ஸ்) எதிர்ப்புப் பிரச்சாரமாக, சிற்பியின் மௌன பிரச்சாரம் தேவையான ஒன்றாகவே அமைகிறது.
கதையும் களமும்
ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உள்ள தொடர்பு பூர்வ ஜென்ம பந்தமானது. வறுமையின் காரணமாக விபச்சாரத் தொழிலில் ஈடுபடும் ஒரு பெண்ணிடம் மயங்கிய ஒருவன் அப்பெண்ணுக்கு வாழ்க்கை கொடுக்கிறான். ஆனால் அப்பெண் முன்பு ஒரு விபச்சாரியாக இருந்த காரணத்தால் அவளை இச்சமூகம் வாழ்க்கையின் ஓரத்திற்கு விரட்டுகிறது. அவளை இழந்த அவன் சமூகத்தில் உள்ள பல அபலைப் பெண்களுக்காகப் போராடும் இலட்சியவானாக வீறுகொண்டு எழுகின்றான். இதுவே இக்கதையின் கருவாக அமைகிறது. இக்கதை ஆண் பெண் இடையிலான மெல்லிய உணர்வுகளை வெளிப்படுத்தும் காதல் கதையாக இருப்பினும் சமூகத்தில் நிலவும் பாலியல் கொடுமைகள், வறுமை, வேலையில்லாத திண்டாட்டம், பெண் விடுதலை, தேசிய ஒருமைப்பாடு  போன்ற சமூக அவலங்களைத் தோலுரித்துக் காட்டவும் தயங்கவில்லை.
கதைச்சுருக்கம்
            முதல் தேதி பரபரப்பில் பை கணத்த கணவானாகப் பட்டப் பகலிலும் அலைமோதும் அந்த பட்டினத்தின் இரவுச் சந்தையில் விற்பனைப் பொருளான ஒருத்தியைத் தற்காலிகமாக விலை கொடுத்து வாங்குகிறான் கதைத் தலைவன். அங்கே அவன் வாங்கியது ஒரு பெண்ணின் உடலை அல்ல அழுக்கின் ஒரு துளி தூசும்படியாத ஓர் ஆத்மாவை. இவ்வாறு பலமுறை அவளை விலை பேசிய அவன் அவளிடம் கொண்டது காதலா? வெறும் இளமைத்திமிரா? என்று கூடத் தெரியாமல் மயங்கிக் கிடக்கின்றான். அப்பா இரயில் விபத்தில் இறந்தபோது தன் பள்ளிப் படிப்பிற்கு முற்றுப்புள்ளி விழுந்து குடும்பம் பாலத்துச் சுவரில் மோதிய வாகனம் போல வறுமை பாதாள விளிம்பில் நின்ற கதையை அவள் கூறக் கேட்ட அவன், அவளை மணம் முடிக்க முடிவெடுக்கிறான். பின்பு தன் தோழன் உதவியுடன் அவளைத் திருமணம் செய்து அமைதியாக வாழுகிறான். ஆனால் இச்சமூகம் அவளை வாழவிடவில்லை. வாழ்க்கையின் விளிம்பிற்கே விரட்டியது. முடிவில் அவள் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொள்கிறாள். அவளின் நீங்காத நினைவுகளிலிருந்து விடுபடாத அவனிடம் தோழரின் மகள், 'மல்லீ.....மல்லீ....” என்று புலம்புகிறீர்களே! சொல்லுங்கள் உங்களைப் போல பெண்களின் உடலை விலைபேசும் ஆண்களால் தானே விபரீதங்கள். ஒரு மல்லிகாவிற்கு ஊன்றுகோலாக முனைந்தீர்கள். ஆனால் தெரு மல்லிகைகள் எத்தனை ஆயிரம் தெரியுமா? என்று சொல்லம்புளால் துளைக்க மௌனமாகிறான். பிறகு தன் தோழருடன் இணைந்து குறிப்பாய் பெண் விடுதலைக் கிளர்ச்சிகளில், உரிமைப் போர்க்களங்களில் முழங்கும் தொண்டனாக மாறுகிறான்.
கதைப்பின்னல்
            நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த ஒருவனுக்கும், கற்புக்குக் கடைத்திறந்து நிற்கும் ஒருத்திக்கும், இடையே நடக்கும் உறவினை மையமாகக் கொண்டு கதை நகர்கின்றது. நெகிழ்ந்த சேறும், முரட்டு விதையும் ஒன்றில் ஒன்று உறவு கொண்டதைப் போல அவர்கள் இருவரிடத்தே மலரும் அன்பு முதலில் இளமைத் திமிராய், பின்பு காதலாய் மாறுகிறது. ஒரு கட்டத்தில் 'அவளைக் காப்பாற்றுவது என் இலட்சியமில்லை. என்னையே நான் காப்பாற்றிக் கொள்ள அவள் வேண்டும்என்னுமளவிற்கு அவளின் களிப்பில் மயங்கிக் கிடக்கிறான் அவன். பிறகு அவன் கொண்ட காதல் சூரியனைப் போல் சுத்தமானதாக மாறுகிறது. இவர்களிடத்தே இருந்த நெருக்கத்தின் இடைவெளியைக் குறைக்க மீண்டும் புயல் வீசுகிறது. புயலில் அடித்து ஒதுங்கியவன் இலட்சிய வீரனாக மாறுவதே கதையின் உச்சமாக அமைகிறது.
            ஒவ்வொரு படைப்பாளிக்கும் சமூகப் பொறுப்பு உண்டு. சமூகத்தின் ஓர் அங்கமான படைப்பாளி சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளை முன்வைத்தே தன் படைப்பைப் படைக்கிறான். அவனது படைப்பும் அவன் வாழும் சமூகத்தை பிரதிபலிக்கும் கண்ணாடியாகவே இருக்கும்; இருக்கக்கூடும். 'கலை, இலக்கியம் என்பவை மனித சமூகத்தைப் பற்றியதுதான் என்ற கருத்தாக்கம் எப்பொழுது தோன்றியதோ அப்பொழுதிலிருந்தே யதார்த்தவாதம் என்ற முறையியல் தோன்றிவிட்டது. கலைக்கு இரண்டு முக்கிய அம்சங்கள் உண்டு. ஒன்று சுற்றுப்புறத்தைப் புரிந்துகொள்ள முயற்சிப்பது (Cognitive). இரண்டு சுற்றுப்புறத்தைப் பிரதிபலிப்பது (Reflective) இதில் சுற்றுப்புறம் என்பது சமூகத்தை மட்டும் தான் குறிக்கிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும்என்ற தோத்தாத்திரியின் கருத்துக் குறிக்கத்தக்கது. கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் அவர்களும் இதனை முன்னிருத்தியே தமது கட்டுரையில், 'இக்கால மனிதனின் சிக்கல்களைப் புரிந்து கொள்ளும் இடையறாத முயற்சியே என் கவிதை (என் எழுத்து பக்.537) என்று குறிப்பிடுகிறார். கவிஞரின் கவிதைகள் அனைத்தும் ஏதேனும் ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுந்தவையாகவே அமைகிறது. 'மௌன மயக்கங்கள்என்ற கதையில் தொழில் முறையால் விபச்சாரம் செய்யும் பெண்ணைத் தலைமைப் பாத்திரமாகக் கொண்டு, சமூகத்தில் நடக்கும் கொடுமைகளைப் பிரதிபலிக்கும் முகமாகப் படைத்துக் காட்டுகிறார் கவிஞர்.
சமூக அவலங்கள்
            ஒரு பெண் விபச்சாரியாக மாற அக்குடும்பத்தில் நிலவும் பொருளாதாரச் சூழ்நிலையே காரணமாக அமைகிறது. இக்கதையின் தலைவியும் வறுமையின் கரணமாகக் குடும்பத்தின் சுமையைத் தாங்க, விபச்சாரியாக மாறுகிறாள். கவிஞர் 'அப்பா இரயில் விபத்தில் இறந்த போது தன் பள்ளிப்படிப்பிற்கு முற்றுப்புள்ளி விழுந்தது. குடும்பம் பாலத்துச் சுவரில் மோதிய வாகனம் போல் வறுமை பாதாள விளிம்பில் நின்றது. அம்மா நகைகளை விற்றாள். அப்புறம் காய்கறி விற்றாள். தலையில் சுமந்து விறகு விற்றாள். பிறகு கற்பை விற்றாள்! எங்களுக்குக் கால் வயிறு நிரம்பியது..... எனக்கு இரட்டைச் சடைபோட்டு ரோஜாப்பூ வைத்துப் பள்ளிக்கு அனுப்பிக் கொண்டிருந்தவள் தானே, ஒற்றைச்சடை பின்னி கனகாம்பரம் வைத்து இரவுப் பள்ளிக்குப் போகத் தொடங்கினாள்என்ற காரணத்தை விவரிக்கிறார்
            இந்தியத் திருநாட்டில் 'வறுமைதலைவிரித்து ஆடுகிறது. உலக நாடுகளில் இந்தியாவில் தான் பிச்சைக்காரர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இங்கு தான் பட்டினிச்சாவுகள் அதிகம் நடக்கின்றன. 'ஈ மொய்க்கும் ஓர் ஈயக் குவளை நீட்டிப் பிச்சை கேட்கிறது ஒரு கரம்என்று இந்தியாவின் வறுமை நிலைக்காக வருத்தப்படுகிறார் .நம் நாட்டிற்கு உரிய இந்தச் சாபக்கேட்டை அகற்றும் முகமாகக் கவிஞரின் சிந்தனை கவிதைகளில் தெரிகிறது. 'திரும்பத் திரும்ப நான் பார்க்கவும், கேட்கவும் அறவே விரும்பாதவை இரண்டு. ஒன்று என் வளநாட்டின் தீரா வறுமை மற்றொன்று வேலையில்லாத் திண்டாட்டம்என்று குறிப்பிடுவதன் மூலம் கவிஞரின் தேசப்பற்று தெரிகிறது.கதைத் தலைவனின் தோழன் ஓர் இயக்கத்தினைச் சார்ந்து பல போராட்டங்களை நடத்துகிறான், 'தீபங்களைத் தூக்கியபடி உச்சக் குரலில் வேலை கொடு! எங்களை வாழ விடுஎன்று தோழர் அதன் முன்னிலையில் இருந்து குரல் கொடுப்பதாகக் காட்டுகிறார்.
            பெண் விடுதலைக்காகக் குரல் கொடுக்கும் கவிஞர்கள் வரிசையில் சிற்பி பாலசுப்பிரமணியம் குறிப்பிடத்தக்கவர். 'பூக்களுக்கு முதுகெலும்பும் இல்லை. பெண்களுக்குப் பாதுகாப்பும் இல்லை. எனவே தேடிப்போன ஒவ்வொரு மாளிகையும் விதவிதமான காமவெறிக் கானகமாய்க் காட்சியளிக்கிறது. ஒரு நாள் கூலி வேலைக்குப்போய் இருட்டுச் சந்தில் திரும்பியவளை ஒரு குடிகாரன் வழி மறித்து கற்பழிக்கிறான். அப்போது அவளைக் காப்பாற்ற எந்தப் 'பேடியும்வரவில்லை என்று கவிஞர் பாலியல் கொடுமைகள் நடப்பதை வன்மையாகக் கண்டிக்கிறார்.
            விபச்சாரத் தொழிலில் ஈடுபடும் பெண்களின் இயல்பாக, 'ஊருக்கொரு பெயர், நாளுக்கொரு பெயர், ஆளுக்கொரு பெயர், நொடிக்கொரு மதம் மாறுவோம், அடிக்கடி மனம் மாறுவோம்என்றும், 'குவிந்து விரியும் இரப்பர் உதடுகள்என்றும் குறிப்பிடுகிறார். விபச்சாரத் தொழிலில் ஈடுபடும் அவளை ஒருமுறை பார்க்கச் செல்லும் பொழுது 'தெரு முனையில் ஒரு பையன் அவன் கையில் ஒரு காகிதம் திணித்தான்... போலீஸ் முற்றுகையில் இடமாற்றம். 17, இராமர் கோவில் தெரு, என்று முரண்தொடையாகக் குறிப்பிடுவதன் மூலம் ஆசிரியரின் புலப்பாட்டு உத்தி புலனாகிறது.
            கவிஞர் இந்திய நாட்டின் மீது கொண்ட நாட்டுப்பற்றை அவர்தம் கவிதைகளில் காணமுடிகிறது. 'அன்று குடியரசு நாள், கொடிகள் கம்பத்தின் உச்சியில் படபடத்துத் துடிதுடித்துக் கொண்டிருந்தன. பத்திரிக்கைப் பக்கங்களில் இளம் நடிகைகள் சுதந்திர மகிமையை விளம்பரப்படுத்திக் கொண்டிருந்தனர்என்று குறிப்பிடுகிறார். இன்றும் கூடச் சுதந்திர தினம், குடியரசு தினம் ஆகிய நாள்களில் தொலைக்காட்சிப் பெட்டிகளில் நடிகர், நடிகைகளின் பேட்டிகள் அதிகம் இடம் பெறுவதைக் காணமுடிகிறது. தேசியக் கொடியைத் தலைகீழாக ஏற்றும் அதிகாரிகள், அரசியல் வாதிகள் இருக்கும் பட்சத்தில் கவிஞரின் தேசப்பற்றுப் போற்றுதற்குரியது. நம்பிக்கையோடு தொடங்கப்படுகிற ஒவ்வொரு பயணமும் நச்சு அழிக்கின்ற யாகங்கள் தொடங்க வேண்டும் என்ற குறிப்புப் பொருள்பட 'சர்ப்பயாகம்என்ற படைப்பையும், இந்தியத் திருநாட்டின் வளர்ச்சிக்காகப் படைத்துள்ள பாங்கினையும் அறிய முடிகிறது.
வடிவம்
            மரபுக்கவிதைகளின் பிள்ளையான சிற்பி தமிழில் எழுந்த முதல் கதைக்கவிதையான 'மௌன மயக்கங்கள்எனும் புதுமையின் தோழனாகவும் பரிணமிக்கிறார். எண்ணங்களை வெளிப்படுத்த வடிவம் வேண்டும். அந்த வடிவம் எண்ணங்களை எடுத்துச் சொல்லும் பாலமாகத் திகழ வேண்டும். பாரதியார், 'எளிய நடை, எளிய பதம், எளிதில் அறிந்து கொள்ளும் சந்தம், பொது மக்கள் விரும்பும் மெட்டு இவற்றினையுடைய காவியமொன்று தற்காலத்திலே செய்து தருவோன் நமது தாய்மொழிக்குப் புதிய உயிர் தருவோனாகின்றான் (பாஞ்சாலி சபதம் முன்னுரை) என்று குறிப்பிடுகிறார். சிற்பி, பாரதியின் வழிவந்த காரணத்தால், புதிய இலக்கிய வகையை அறிமுகப்படுத்தியுள்ளார். இருப்பினும் ஓர் இலக்கிய வடிவம் மற்றொரு இலக்கிய வடிவத்தின் மீது தாக்கம் செலுத்துவது இலக்கிய வளர்ச்சியில் தவிர்க்க இயலாது (சிற்பியின் கட்டுரைகள், பக்.294) என்ற கருத்தும் ஈண்டு நோக்கத்தக்கது. புதிய இலக்கிய வகையை அறிமுகப்படுத்தி அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம். எளிய தமிழ், தெளிந்த நீரோட்டமாகக் கவிதை அமைந்துள்ளது.
தாக்கம்
            கவிஞர் சிற்பி கோவை நகரப் பின்னணியில் கதையை நகர்த்திச் செல்கிறார். தன் நண்பனின் அந்தரங்க வாழ்க்கையை இலக்கியமாகப் படைத்திருப்பதால் கவிஞரின் இளமைக்கால அனுபவங்கள் (கையயழுத்து பிரதி நடத்தியது). நினைவுகள் அவர் வாழ்ந்த நகரப் பின்னணி (நெசவுத் தொழில் ஆலைச் சங்கு ஒலி), ஆகியவற்றை இக்கவிதையில் காண முடிகிறது. அவளின் அழகில் மயங்கிய அவன் உரைக்கும் மொழிகளின் போது சிலப்பதிகாரத்தின் (கோவலன் கூறும் குறியாக் கட்டுரை) தாக்கத்தையும், அவள் ஒருமுறை அவனைச் சந்தித்து விட்டுத் திரும்பும்போது, 'வந்த சுவடு தெரியாமல் போன காற்றைப் போல அடுத்த கணம் நீ காணாமல் போய்விட்டாய்என்று கூறுமிடத்தில் மாங்கனியில் கண்ணதாசனின் (தென்றல் வந்து போனதற்குச் சுவடு ஏது?) தாக்கத்தையும், 'நான் வானத்தையும் கரு மேகங்களையும் தலையில் சுமந்து கொண்டு அவரை நெருங்கினேன்என்று அவன் கூறுமிடத்தில் பாரதிதாசனின் கவிதை வரிகளின் (கடைக்கண் பார்வை காதலியர் காட்டிவிட்டால்...) தாக்கத்தையும் காணமுடிகிறது.
தலைப்புப் பொருத்தம்
            ஒரு பெண்ணின் கூடல் இன்பத்தால் மயங்கும் ஓர் இளைஞன் 'குதிரை மேல் பறக்கும் உன்னை (அவளை) விடாமல் துரத்தித் துரத்தித் தொடர்கிறதே என் இதயப்புரவி. இல்லை, இல்லை நீ ஒரு புதிர். உன்னை என்னால் விடுவிக்கவே முடியவில்லைஎன்று மயங்கிக் கிடக்கிறான். இவ்வாறு மயங்கிக் கிடக்கும் இளைஞர்களை நோக்கிக் கவிஞர், 'தோழரே நினைவில் வையுங்கள் இரண்டு கண்களில் மயங்கிக் கிடப்பது அல்ல வாழ்க்கை! நான்கு கைகள் ஒரே திசை வழியில் நோக்கி நிற்பதே இலட்சிய வாழ்க்கைஎன்று இறுதியாகக் கூறும் கூற்று இளைஞர்களை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்வதாக அமைகிறது.
தீர்வை நோக்கிய பயணம்
            பாலுணர்வு ததும்பும் கருப்பொருளை மிகுந்த எச்சரிக்கையுடன் தமிழ்க் கவிதையில் எடுத்தாண்ட தனித் தன்மையை மௌனமயக்கங்களில் காண முடிகிறது. காதல் உணர்ச்சியைக் கத்தி முனையில் நடப்பது போல் வெகு கவனத்தோடு கையாண்டிருக்கிறேன் என்று கவிஞர் நூலின் முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார். எனினும் தமிழ்த் திறனாய்வாளர்கள் இந்நூலை முறையாக விமர்சிக்கவில்லை என்ற மனக்குறையைத் தன் கவிதை மூலம் வெளிப்படுத்தும் கவிஞர் 'இன்றும் கூட என் மொழி விமர்சகர்களோடு எனக்கு நேசமும் இல்லை, பாசமும் இல்லை (சிற்பியின் கட்டுரைகள், என் எழுத்து, பக்.542) என்று கூறுகிறார். அவளின் மீது கொண்ட தீராக்காதலில் மூழ்கிக் கிடக்கும் அவளை, இன்னுமா தூக்கம்? என்று தோழர் கேட்பது, கவிஞர் உள்ளே ஒரு குறிப்புப் பொருளை வைத்தே கேட்பதாகத் தோன்றுகிறது.
            ஆழ்வார் பாடல்களில் ஆண்டாள் பாடிய பாசுரங்கள் குறிப்பிடத் தக்கவை. ஆண்டாள் தன் தோழிகளை மார்கழி மாதம் அதிகாலையில் துயில் எழுப்பும் நிகழ்வைக் குறிப்புப் பொருளை வைத்தே ஆண்டாளின் துயில் எழுப்பும் பாடல்கள் (5) உள்ளது என்று திறனாய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். உலக வாழ்க்கையில் மூழ்கிக் கிடக்கும் அனைவரையும் ஆன்மீக விழிப்புணர்வு பெறப்பாடியதாகவே ஆண்டாள் பாடல்களைக் குறிப்பிடுகின்றார். அதுபோலவே தோழரின் இன்னுமா உறக்கம்? என்ற வினா நம் அனைவரையும் தீர்வை நோக்கிய பயணமாகக் கருதியே இக்கூற்றை வைத்தார் என்ற குறிப்புப் பொருள் புலப்படத் தன் படைப்பைப் படைத்திருப்பதன் மூலம் கவிஞரின் இலட்சியக் கனவு நிறைவேறும் என்பதில் ஐயமில்லை.

சமுக நீதி போராளி தியாக திருமகன் இம்மானுவேல் தேவேந்திரர்


முனைவர் பூ.மு.அன்புசிவா
எம் தலைவா 
நீ ஏற்றிவைத்த நெருப்பு
எங்கள் நெஞ்சங்களில்
எரிமலையாய் பொங்கும்...
அதில் ஆதிக்க வெறி
சாத்தான்கள் சாம்பலாய் கருகும்...
சமத்துவம் பிறக்கும் வரை
நாமும் சாதி வெறி
கொண்டு போர் புரிவோம்...
            தென் தமிழகத்தில் குறிப்பாக, ராமநாதபுரம் மாவட்டத்தில் தொல்குடி சமூகங்களின் உரிமைப் போராட்டங்களுக்கான அடையாளமாக, மள்ளர் சமூக இயக்கம் வேர்கொள்ளத் தொடங்கியது. 1922ல் அதாவது, "ஆப்பநாடு மறவர் சங்கம்' தொடங்கப்பட்டதன் உடனடி எதிர்வினையாக, "பூவைசிய இந்திர குல சங்கம்” தனது முதல் மாநாட்டை முதுகுளத்தூர் வட்டம் செங்கோட்டைப்பட்டி என்னும் கிராமத்தில் நடத்தியது. இதன் மூன்றாவது மாநாடு 6.6.1923 அன்று நடத்தப்பட வேண்டிய அளவுக்கு, குறிப்பாக, மறவர்களின் சமூக ஒடுக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தன என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
            இந்திர குல சங்கம், இப்பகுதி வாழ் மள்ளர் சமூகத்தினரை ஒருங்கிணைப்பதையும், நெறிப்படுத்துவதையும் தலையாயக் கடமையாகக் கொண்டு செயல்பட்டு வந்தது. மறவர்களின் சமூக மேலாதிக்கத்திலிருந்தும், வன்முறை நடவடிக்கைகளிலிருந்தும் தம் மக்களைப் பாதுகாப்பதில் பெருமாள் பீட்டர் அவர்களின் முழுமையான அக்கறை, வரலாற்றில் பதிவு செய்யப்படாமலேயே இருக்கிறது. அவரின் அறிவார்ந்த செயல்பாடுகள், மள்ளர் சமூகத்தினரின் வாழ்வியல் பண்புகளைப் பிரதிபலிப்பவையாக இருக்கின்றன.
            இந்திர குல சங்கம் பதிவு செய்யப்பட்ட இரண்டு மாதங்களில் ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் வட்டம், செல்லூர் எனும் கிராமத்தில் 9.10.1924 அன்று பள்ளி ஆசிரியரான வேதநாயகம் – ஞானசவுந்தரி ஆகியோரின் மகனாகப் பிறந்தார் இம்மானுவேல் சேகரன். தனது 18 ஆவது வயதிலேயே "வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தில் பங்கெடுத்து, மூன்று மாத சிறைத் தண்டனை அனுபவித்தார். இதம்பாடல் கிராமத்தைச் சேர்ந்த தொடக்கப்பள்ளி ஆசிரியரான அமிர்தம் கிரேஸ் என்பவரை மணந்தார். இவர்களுக்கு நான்கு பெண் குழந்தைகள் பிறந்தனர். 1945இல் இந்திய ராணுவத்தில் ஹவில்தார் மேஜராகப் பணியில் சேர்ந்தார். பெருமாள் பீட்டர் அவர்களின் கடைசி மகனான திரு. வில்லியம் அவர்களின் பள்ளித் தோழரான இம்மானுவேல் சேகரன் பின்னாளில், சமூக அக்கறை கொண்டு பெருமாள் பீட்டரின் அரசியல் வாரிசாக உருவெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
            தேக்கம்பட்டி பாலசுந்தர்ராஜ் அவர்கள் அண்ணல் அம்பேத்கரை அழைத்து மதுரையில் 29.12.1946 அன்று நடத்திய தேவேந்திர குல வேளாளர் சங்க மாநாட்டில், பெருமாள் பீட்டரோடு இம்மானுவேல் சேகரனும் கலந்து கொண்டார் என்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. அம்பேத்கரின் கருத்துகளால் ஈர்க்கப்பட்டும், பெருமாள் பீட்டரின் வேலைத் திட்டங்களில் ஒன்றியும், ராமநாதபுரம் பகுதிவாழ் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் வாழ்நிலையைக் கருத்தில் கொண்டும் தனது ராணுவப் பணியைத் துறந்து விட்டு, 1951இல் நேரடியான சமூகப் போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 1953 இல் ஒடுக்கப்பட்டோர் இளைஞர் இயக்கத்தை உருவாக்கி, மள்ளர் சமூகத்தினரை மட்டுமல்லாமல், அனைத்து ஒடுக்கப்பட்ட சமூகங்களையும் உள்ளடக்கியதாக அவரின் சமூக விடுதலைப் போராட்டங்கள் உருவெடுத்தன. அம்பேத்கரின் பிறந்த நாள் அன்று, ராமநாதபுரத்தில் ஒடுக்கப்பட்டோர் எழுச்சி மாநாட்டினை நடத்தினார். சாதி ஒழிப்பு, விதவை மணம், கலப்பு மணம் ஆகியவற்றை வலியுறுத்தும் தீர்மானங்களை மாநாட்டில் நிறைவேற்றினார்.
            26.5.1954 அன்று இரட்டைக் குவளை ஒழிப்பு மாநாட்டை அருப்புக் கோட்டையில் நடத்தினார். 2.10.1956 அன்று, ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் பங்கேற்பு மாநாட்டை முதுகுளத்தூரில் முன்னெடுத்தார். 6.12.1956 அன்று அண்ணல் அம்பேத்கரின் மறைவையொட்டி மாபெரும் இரங்கல் கூட்டத்தை நடத்தினார். ஒடுக்க பட்ட சமுகங்களின் ஒப்பற்ற தலைவராக உருவெடுக்க தொடங்கிநார் முதுகளத்தூர் பகுதி வாழ் பறையர் மக்கள் பொது கினறுகளில் தன்னீர் எடுக்க விடாமல் மனித மலம் கலந்த ஆதிக்க சாதிகளின் கொடுமைகளை துனிந்து எதிர்தார். ஒடுக்க பட்ட மக்களுக்கு எதிரான சொல்லான வன்முறைகளை பொருக்க முடியாது. படை திரட்டி எதிர் தாக்குதல்கள் நடத்தினார்...பள்ளர்,பரையர்,சக்கிலியர்,சானர் குழந்தைகள் பள்ளி கூடத்துக்கு போககுடாதுனு சொன்ன ஆதிக்க வெறியர்கள அடித்து நொருக்க சொன்னர். அருந்ததியர் சிலர் மீது மறவர் சமூகத்தினர் நடத்திய வன்முறைக்குப் பதிலடி தரும் விதமாக, மள்ளர் சமூக இளைஞர்களைக் கொண்டு திருப்பித் தாக்கிய அவரின் செயல்பாடு, ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களின்பால் அவர் கொண்டிருந்த அன்பைப் புலப்படுத்தும். ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் பங்கேற்பை உறுதி செய்வதற்காக காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். தனது சமூக விடுதலைப் போராட்டங்களுக்கு ஆளும் கட்சியாகயிருந்த காங்கிரசு அரசும், முதலமைச்சராகயிருந்த காமராசரும் உறுதுணை யாக இருப்பார்கள் என்ற நம்பிக்கையே, அவரை காங்கிரசு கட்சியோடு இணைத்தது.
            1957 இல் பசும்பொன் முத்துராமலிங்கம் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதால், முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் அவர் பதவி விலக, மறு தேர்தல் நடந்தது. காங்கிரசுக்கு ஆதரவாக இம்மானுவேல் பிரச்சாரம் செய்தார். ஆனால், பார்வர்டு பிளாக் வேட்பாளரான சசிவர்ண வெற்றி பெற்றவுடன், மறவர்கள் முதுகுளத்தூர் பகுதியில் வன்முறையில் இறங்கினர். இம்மோதலில் 42 பேர் கொல்லப்பட்டனர்.
            1957 செப்டம்பர் 10 ஆம் தேதி நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைக்கு முத்துராமலிங்கம் வந்தபோது, மாவட்ட ஆட்சியர் உட்பட அனைவரும் எழுந்து நின்று மரியாதை தெரிவித்த நிலையில், இம்மானுவேல் சேகரன் தனது மக்களின் எதிர்ப்பைப் பதிவு செய்யும் விதமாக, அத்தகைய மரியாதையைத் தரவில்லை. மேலும், தன்னைக் குறைவு படுத்திப் பேசிய முத்துராமலிங்கத்துடன் சரி நிகராக நின்று, இம்மானுவேல் வாதம் புரிந்தது, மறவர் சமூகத்தினர் அவரை அடுத்த நாளே படுகொலை செய்யும் அளவிற்குத் திட்டமிடத் தூண்டிய நிகழ்வாகக் குறிப்பிடப்படுகிறது. ஆனால், 33 வயதேயான இம்மானுவேலின் துணிவும், எதிர்ப்பு மனநிலையும், சுயமரியாதை உணர்வுமே அவரை இன்றைய நாளிலும் – மள்ளர் சமூக மக்களின் இணையற்ற தலைவராக இருத்தியுள்ளது

கணவன் - மனைவி உறவைவிட உன்னதமான உறவு உண்டா?

கணவனுக்குத் தலைவலி. நெற்றியை அழுத்திப் பிடித்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்திருக்கிறான். மனைவி கொஞ்சம் தைலம் எடுத்து வந்து, கணவன் அருகில் அம...