வார்த்தைகள் பின்னிய
வலைகளுக்குள்
தொலைவதும்
பின் மீள்வதுமாய்
இருக்கிறது வாழ்வு!
அலைகள் எப்போதும்
ஓய்வதில்லை;
இரைச்சலும் அலைக்கழிப்புமாய்
மேலெழுகின்ற அகந்தை
ஆழத்தில்
எனது இருத்தலை
ஒளித்து வைத்துவிடுகிறது!
முடிவில்லாத பயணத்தில்
இளைப்பாற அமர்ந்த
மரத்தின்
ஒர் கிளையில
எழுந்தது
எனக்குள் ஒரு கேள்வி!
இன்னொரு மரத்தில்
கிடைக்கலாம்
என் கேள்வியை
அழித்துவிடுவதற்கான பதில்...!
வலைகளுக்குள்
தொலைவதும்
பின் மீள்வதுமாய்
இருக்கிறது வாழ்வு!
அலைகள் எப்போதும்
ஓய்வதில்லை;
இரைச்சலும் அலைக்கழிப்புமாய்
மேலெழுகின்ற அகந்தை
ஆழத்தில்
எனது இருத்தலை
ஒளித்து வைத்துவிடுகிறது!
முடிவில்லாத பயணத்தில்
இளைப்பாற அமர்ந்த
மரத்தின்
ஒர் கிளையில
எழுந்தது
எனக்குள் ஒரு கேள்வி!
இன்னொரு மரத்தில்
கிடைக்கலாம்
என் கேள்வியை
அழித்துவிடுவதற்கான பதில்...!
Comments
Post a Comment