Thursday, December 29, 2016

எனக்குள் ஒரு கேள்வி

வார்த்தைகள் பின்னிய
வலைகளுக்குள்
தொலைவதும்
பின் மீள்வதுமாய்
இருக்கிறது வாழ்வு!

அலைகள் எப்போதும்
ஓய்வதில்லை;
இரைச்சலும் அலைக்கழிப்புமாய்
மேலெழுகின்ற அகந்தை
ஆழத்தில்
எனது இருத்தலை
ஒளித்து வைத்துவிடுகிறது!

முடிவில்லாத பயணத்தில்
இளைப்பாற அமர்ந்த
மரத்தின்
ஒர் கிளையில
எழுந்தது
எனக்குள் ஒரு கேள்வி!
இன்னொரு மரத்தில்
கிடைக்கலாம்
என் கேள்வியை
அழித்துவிடுவதற்கான பதில்...!

No comments:

Post a Comment

கணவன் - மனைவி உறவைவிட உன்னதமான உறவு உண்டா?

கணவனுக்குத் தலைவலி. நெற்றியை அழுத்திப் பிடித்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்திருக்கிறான். மனைவி கொஞ்சம் தைலம் எடுத்து வந்து, கணவன் அருகில் அம...