பாரதியால் தமிழ்
உயர்ந்ததும், தமிழால் பாரதி உயர்ந்ததும் இன்று
யாவரும் ஏற்றுக்
கொள்ளக் கூடியதாகும்.
பாரதி மக்கள்
கவி. மானுடம்
பாட வந்த
மாக்கவி. புது
நெறி காட்டிய
புலவன். தன்னைப்
பின்பற்றித் தமிழ் வளர்க்க ஒரு பரம்பரையைத்
தோற்றுவித்த ஓர் உயர்கவி. எண்ணத்தாலும், எழுத்தாலும்
இந்திய சிந்தனைக்கு
வளம் சேர்த்தவர்.
பல்துறை அறிஞர்,
தொலை நோக்கினர்,
அறிவியல் பார்வை
நல்கிய கவிஞானி.
மெய்ஞ்ஞான விஞ்ஞானங்களின்
கூட்டுச் சேர்க்கை
அவர் படையல்.
புதிய தமிழகத்தை
உருவாக்கக் கனவு கண்ட கவிக்குயில். சுதந்திரப்
போரில் பாரதியின்
பாடல் உணர்ச்சி
வெள்ளமாய், காட்டுத் தீயாய், சுதந்திரக் கனலாய்ப்,
புனலாய்த் தமிழ்
நாட்டை வீறுகொள்ளச்
செய்தது. (ச.
மெய்யப்பன், அண்ணாமலைப் பல்கலைக் கழகம்)
கவிஞர்கள் பலவிதக்
கனி வகைகளைப்
போன்றவர்கள்! கவிஞரின் தனித்துவப் படைப்புகள் எல்லாம்,
தனித்தனிக் கனிகளின் அரிய பழச்சுவை போல,
முற்றிலும் வேறுபட்டு உள்ளத்தில் உணர்ச்சி அளிப்பவை!
பலவிதக் கனிகளான
மா, பலா,
வாழை, ஆப்பிள்,
ஆரஞ்சு, திராட்சை,
பீச், பியர்
ஆகியவற்றுள் எப்பழம் சுவையில் உயர்ந்தது, எப்பழம்
சுவையில் மட்டமானது
என்று கேட்டால்
எவ்விதம் பதில்
அளிக்க முடியும்
? அவரவர் காலத்தின்
கோலங்களை அவரவர்
காவியத்தில், கவிதைகளில் வானவில் போல ஓவியம்
தீட்டுகிறார், படைப்பாளிகள்!
முப்பத்தி ஒன்பது
வயதில் காலமான
மக்கள் கவி பாரதி படைத்த காவியப் பாக்கள்
அளவில், எண்ணிக்கையில்
சிறிதே ஆயினும்,
நயத்தில் உயர்ந்து,
உணர்ச்சி ஊட்டலில்
மகாகவிகளுக்கு இணையாக இடத்தைப் பெறுகிறார். நோபெல்
பரிசு பெற்ற
தேசீயக் கவியோகி
ரவீந்திரநாத் தாகூருக்கு நிகரானவர் பாரதியார். ‘சுதந்திர
தேவி! நின்னைத்
தொழுதிடல் மறக்கிலேனே
‘ என்று தினமும்
தொழுது, சுதந்திரம்
அடையப் போவதை
முழுமையாக நம்பிய
போது, அவரது
நிழலாகக் காட்டிக்
கொண்ட புரட்சிக்கவி
பாரதிதாசனுக்கு இந்திய விடுதலையில் அறவே நம்பிக்கை
யில்லை! பாரத
தேச விடுதலையை
வீரர்களைப் பாராட்டியோ, பாரத சுதந்திரப் போராட்டத்தைப்
பற்றியோ, பாரதம்
விடுதலை பெற்றதைப்
பற்றியோ பாரதிதாசன்
எந்த ஒரு
கவிதையும் எழுதியதாகத்
தெரியவில்லை! வாலிபராய் இருந்தபோது மகாத்மா காந்தியைப்
பற்றிப் பாடிய
பாரதிதாசன், அவர் கொலை செய்யப்பட்டு மாண்ட
போது ஓர்
இரங்கல் பா
கூட எழுதவில்லை.
‘ஆனந்த சுதந்திரம்
அடைந்து விட்டோம்
‘ என்று பாரதி
தீர்க்க தெரிசியாய்
1908 இல் கனவு
காணும் போது,
விடுதலை இயக்கத்தைப்
பாரதிதாசன் ஒரு பாட்டில் நக்கல் புரிந்து
கேலி செய்வதைப்
பலர் அறியமாட்டார்கள்!
கூண்டுக் கிளியைப்
பற்றி எழுதும்
போது பாரதிதாசன்,
‘அக்கா! அக்கா!
என்றாய், அக்கா
வந்து கொடுக்க
சுக்கா, மிளகா,
சுதந்திரம் கிளியே ? ‘ என்று எள்ளி நகையாடுகிறார்!
இதை நான்
இங்கே குறிப்பிடு
வதற்குக் காரணம்,
வரப்போகும் மெய்ப்பாடுகளை முன்கூறும் மகாகவிக்குரிய தீர்க்க
தரிசனம், மெய்ஞானம்,
பாரதிக்குத் [Futuristic Intuition] தெளிவாக இருந்தது
என்பதைக் காட்டுவதற்குத்தான்!
பாரதி பாரத
விடுதலைப் போரின்
ஆரம்ப காலங்களில்,
அதைப் பாக்களில்
முரசடித்துப் பறைசாற்றிய நாட்டுக் கவி. ஆனந்த
சுதந்திரம் அடைந்து விட்டோ மென்று உறுதியாக
நம்பிப் பாடிய
விடுதலைக் கவி.
ஷேக்ஸ்பியர், காளிதாசர் போல அநேக நாடகங்கள்
எழுதா விட்டாலும்,
‘பாஞ்சாலி சபதம்
‘ என்னும் ஒரு
நாடகக் காவியம்
படைத்த ஓர்
நாடகக்கவி. ‘ஆகா வென்று எழுந்தது பார்
யுகப் புரட்சி
‘ என்று ரஷ்யப்
புரட்சியைப் பாராட்டிய புரட்சிக் கவி. ‘அச்சமில்லை,
அச்சமில்லை, அச்சம் என்பதில்லையே ‘ என்று படை
வீரர்களுக்கு உச்ச சக்தி ஊட்டிய போர்க்கவி.
கவிதையில் சிலேடை
புகுத்திய நக்கல்
கவி. கவிதையில்,
பாடல்களில் புதுமையாக இசையைப் புகுத்திய இசைக்கவி.
திரைப்படங்களில் அவரது இனிய பாடல்கள் பல
இடம் பெற்றுள்ளதால்
அவர் ஒரு
திரைக்கவி.
வள்ளுவர், ஒளவையாரைப்
போல அறவழி
காட்டும் ‘புதிய
ஆத்திச்சூடியை ‘ ஆக்கியதால், அவர் ஓர் அறக்கவி.
பைரன், ஷெல்லி
போல காதல்,
காமத்தை எழுதாவிட்டாலும்,
பாரதியின் பாடல்களில்
காதல் காவியச்
சுவைகளைக் காண
முடிகிறது. வறுமை, ஏழ்மை, தாழ்மை, கீழ்மை,
பழமை, மடமை,
பெண்மை ஆகியவற்றைப்
பற்றி உணர்ச்சியோடு
பல பாக்கள்
எழுதிய மானிடக்கவி.
வீட்டுக் குள்ளே
பூட்டி வைத்து
அடிமைப்பட்ட பெண்களுக்கு விடுதலை அளித்துப் புதுமைப்
பெண்களை உருவாக்கிய
புதுமைக்கவி. ‘ஜாதி, மதங்களைப் பாரோம் ‘ என்று
மதச்சார்பற்ற பண்பைப் போதித்த மானிடக் கவி.
தெய்வ நம்பிக்கை
கொண்டு, சக்தியைப்
பற்றிப் பல
பாடல்கள் பாடிய
பக்திக்கவி. அவரது தோத்திரப் பக்திப் பாடல்கள்
பல யாப்பிலக்கணப்
பண்புகளைப் பின்பற்றியும், பல இசைக் கீதங்களாகவும்
எழுதப் பட்டவை.
‘தமிழ்த்திரு நாடுதனைப்
பெற்ற தாயென்று
கும்பிடடி பாப்பா
‘ என்று சின்னஞ்
சிறு மதலைகளுக்கு
நாட்டுப் பற்றை
ஊட்டுகிறார். ‘வாழிய செந்தமிழ், வாழ்க நற்றமிழர்,
வாழிய பாரத
மணித்திரு நாடு
‘ என்று தமிழ்,
தமிழர், பாரத
நாடு மூன்றையும்
ஒருங்கே பிணைக்கின்றார்,
பாரதி. கண்ணன்
பாட்டில் பாரதி
கண்ணன் பிறப்பில்
ஆரம்பித்துக் கண்ணனைத் தோழனாக, தாயாக, தந்தையாக,
சேவகனாக, அரசனாக,
சீடனாக, குருவாக,
குழந்தையாக, விளையாட்டுப் பிள்ளையாக, காதலனாக, காதலியாக,
ஆண்டானாக, குல
தெய்வமாகக் காண்பது ஒரு புதுமுறைக் கவிதை
ஆக்கம்.
பாரதத்தின் மாபெரும்
இரண்டு இதிகாசங்களான
வியாச முனிவர்
எழுதிய மகாபாரதமும்,
வால்மீக முனிவர்
எழுதிய இராமாயணமும்
இந்தியா வெங்கும்
மற்றும் தாய்லாந்து,
இந்தோனேசியா, கம்போடியா போன்ற நாடுகளிலும் அறியப்பட்டவை.
பாக்கள் 90,000 எண்ணிக்கை கொண்ட மகாபாரதம், உலக
இதிகாசங்களில் மிகப் பெரிதாகக் கருதப்படுகிறது! இரண்டிலும்
பெரியது மகாபாரத
மாயினும், இராமனை
விஷ்ணுவின் அவதாரமாகக் காட்டும் இராமாயணமே இரண்டிலும்
மிக்க புகழ்பெற்றது.
வால்மீகி இராமாயணம்
எட்டுக் காண்டங்களுடன்
எழுதப்பட்டு, அதன் பாக்கள் மகாபாரத்தின் எண்ணிக்கைக்குக்
கால் பங்கிற்கும்
[சுமார் 25,000] மேலாகச் சிறிது கூடியவை. இந்துக்களில்
பலர் இராமனைக்
கடவுளாகவே தொழுது
வருவதற்கு வால்மீகி
இராமாயணம் வழி
வகுத்தது!
இராமனைப் போன்று
நியாயத்துக்குப் போரிட்டு இறுதியில் வென்ற பாண்டவரில்
யாரையும், வியாசர்
வால்மீகியைப் போல் கடவுள் அவதாரமாக காட்டவில்லை!
பாண்டவர்களும், கெளரவர்களும் போரிடும் மகாபாரத யுத்தத்தின்
இடையே பிறக்கிறது
வியாசரின் உன்னத
படைப்பான பகவத்
கீதை. தேரோட்டியாக
வரும் விஷ்ணுவின்
அவதாரமான கிருஷ்ண
பரமாத்மா அர்ஜனனுக்குக்
கீதையை ஓதுவதாக
வியாசர் எழுதியதால்
மகாபாரதமும் மக்களிடையே பெரிதும் பரவியது. கிளைக்
கதைகளும் இடையிடையே
எழுந்து இரண்டையும்
மாபெரும் இதிகாச
நூலாக்கி விட்டன.
இராமாயணத்தில் பூசப்பட்டுள்ள
பொய் வேடங்களையும்,
தெய்வீகப் புளுகுப்
பூட்டகங்களையும் நீக்கி, வால்மீகி இராமன், இராவணன்,
அனுமான் அனைவரையும்
வெறும் மனிதராகக்
காட்டியிருந்தால், மெய்யாக நிகழ்ந்த
இராம கருக்கதை
இன்னும் அழகாகத்
தோற்றம் அளித்து
மகிழ்ச்சி தரும்!
மனித ஆற்றலை
மீறிய தெய்வீகத்
திறமைகள், அசுரப்
பண்புகள், வானர
வடிவங்கள் போன்றவற்றை
வடிகட்டி எடுத்து
விட்டால் இராம
கதைக்கரு பலமடங்கு
வலுபெற்று படிப்போர்
மனதைக் கவருவதுடன்
வரலாற்று மெய்ப்பாட்டைக்
காட்டும் தகுதியையும்
பெற்றிருக்கும்! இல்லாத தெய்வாம்சங்களை இராமன், இராவணன்,
அனுமான் ஆகியோருக்குச்
சூட்டி, இராமர்
கதையை ஒரு
போலிப் பொய்
இலக்கியமாக ஆக்கிவிட்டார், மகாகவி வால்மீகி! அந்தக்
காலத்தில் கடவுள்
அவதாரமாகக் காட்டினால்தான் இராமனைப் பற்றி மக்கள்
படிப்பார்கள் என்பது வால்மீகி ஒரு முக்கிய
குறிநோக்கமாகக் கொண்டு இராமாயணத்தைப் படைத்திருக்கலாம்! இவ்விதம் இரண்டு இதிகாசங்களிலும் நம்ப
முடியாத பல
கற்பனை நிகழ்ச்சிகளை
வால்மீகியும், வியாசரும் காட்டியுள்ளார்கள்.
பாரதியாரின் பேத்தியான
டாக்டர் விஜயா
பாரதி, பாரதியாரின்
புதல்வி தங்கம்மாளின்
மகள். பாரதியாரைப்
பார்த்திராத விஜயா, அவரைப் பற்றி தாய்
தங்கம்மாளும், பாட்டி செல்லம்மாவும் சொல்லக் கேட்டுப்
பரவசம் அடைந்தவர்.
தமிழ் இலக்கியத்தில்
மேற்கல்வி பயின்று,
பாரதியின் சரிதையை
ஆங்கிலத்தில் ‘பாரதி படைப்புகளைப் பற்றிய ஓர்
திறனாய்வு ‘ [A Critical Study of
Bharathi 's Works] என்னும் ஆய்வுத்தாளை எழுதி
Ph.D. பட்டம் பெற்றவர். அந்த ஆய்வுரை மற்ற
மொழிகளிலும் பெயர்க்கப் பட்டுள்ளது. அவர் 10 நூல்களுக்கும்
மேலாக எழுதியுள்ளார்.
அவற்றில் அநேகம்
தமிழில் எழுதியவை.
கவிதைப் படைப்பில்
தனக்கு ஈடுபாடும்,
திறமைப்பாடும் இல்லாததால் பாரதியாரைப் போல் தான்
பாக்கள் எழுத
விரும்ப வில்லை
என்று விஜயா
சொல்கிறார். கனடாவின் லண்டன் நகரில் 30 ஆண்டுகளுக்கு
மேல் வசித்து
‘லண்டன் ஆசிய
ஆஃபிரிக்கக் கலாச்சாரப் பள்ளியில் ‘ [London School
of Oriental & African Studies], தமிழ்
இலக்கியத்தைப் புகட்டி வந்தவர். பாரதி பிறந்த
நினைவு நாளில்
[2002 டிசம்பர் 11] அவரது நூல்
‘அமரன் கதை
‘ வெளியிடப்பட்டது. நாவலாக எழுதப்பட்ட
அந்த நூலில்
மெய்யான பாரதியாரை
இலக்கியச் சுவையோடு
நிஜமும், கற்பனையும்
பிணைந்து விஜயா
எடுத்துக் காட்டியுள்ளதாகக்
கூறுகிறார்.
No comments:
Post a Comment