Thursday, December 29, 2016

இருந்தாலும் நாம் நண்பர்கள்தான்

சினேகம் இல்லா
முதற்சந்திப்பு

நமக்குள் எப்போதும்
சரியாக இருந்ததில்லை
நட்பு

ஞாபகம் இருக்கிறதா?
எப்போதும்
சண்டையை
நீயேதான் தொடங்குவாய்

சட்டெனக்
குரலுயர்த்துவாய்
பின் கண்ணீர் சிந்த
கூர்வாள்கள்
எனை நோக்கித்
திரும்பும்,
நீ மறைவாய்ப் புன்னகைப்பாய்

நம் எதிரெதிர்
குணங்களில்
பகை வளர்த்து
விருட்சமாகிப் போக,
அடியில்
நிழல் தேடுகிறார்கள்
சில மனிதர்கள்

அகந்தை
அடங்காத பெருந்தீ
இன்னும்
அதில் நாம்
எரியத்தான் வேண்டுமா?

No comments:

Post a Comment

கணவன் - மனைவி உறவைவிட உன்னதமான உறவு உண்டா?

கணவனுக்குத் தலைவலி. நெற்றியை அழுத்திப் பிடித்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்திருக்கிறான். மனைவி கொஞ்சம் தைலம் எடுத்து வந்து, கணவன் அருகில் அம...