Monday, January 04, 2016

யோகி கவிதைகள்

வெற்றிடங்களின் தொடுகை

எமது கரங்களறியும்
வெற்றிடங்களின் தொடுகையை
செவிமறுத்து நிகழுவன
நீண்ட உரையாடல்கள்
உள்ளே மெனங்களின் பேரோசை
இப்போதெல்லாம்
நாட்டப்பட்டுப்போனோம் நாம்
உனக்குமெனக்கும்
பதிலீடுகள் தரப்பார்க்கிறது காலம்
வெற்றிடங்களால்
அலைக்கழிக்கப்படுகிறது நட்பு
மீண்டும்,
எப்போது வெளிக்கொணர்வோம்
நம்மிலிருந்து மிகப்பெறுமதியானதை
தொலைந்து மீள்தலில்
மீளத்தொலைகிறேன் நான்
உன்னிடமிருந்தும் என்னிடமிருந்தும்
என்னை.

No comments:

Post a Comment

கணவன் - மனைவி உறவைவிட உன்னதமான உறவு உண்டா?

கணவனுக்குத் தலைவலி. நெற்றியை அழுத்திப் பிடித்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்திருக்கிறான். மனைவி கொஞ்சம் தைலம் எடுத்து வந்து, கணவன் அருகில் அம...