Sunday, January 03, 2016

கலில் கிப்ரான் கவிதை

அலையின் கீதங்கள்

நடனம் ஆடினேன்
நான் பன்முறைக்
கடற் கன்னிகளைச் சுற்றி வந்து
ஆழ்கடல் உள்ளிருந்து
மேலேறி !
பாறை மீதமர்ந் தேன்
தாரகைகள் நோக்கிட !
என்னிடம் காதலர்
பன்முறைப் புகார் செய்வதைக்
கேட்டுளேன்
தாம் குள்ளமாய் உள்ளதை !
ஆறுதல் கூறுவேன்
அவர்க்கு மனச்
சோர்வுகள் நீங்கிட !
பாடுபடுத்துவேன் பாறைகளைப்
பன்முறை !
புன்முறுவ லோடு
தடவிக் கொடுப்பேன் !
ஆயினும் அவை
நன்றியுடன் எனைக் கண்டு
நகைப்ப தில்லை !
மூழ்கிடும் ஆத்மாக்களைத்
தூக்கி வந்து
பன்முறைப் பரிவுடன்
அன்புக்கரை சேர்த்தேன் !
ஆத்மாக் களுக்கு
மன உறுதி அளிக்கும்
கடற்கரை என்
உடற் சக்தி எடுத்து !
விலை மதிப்பில்லா
ஒளிக் கற்களைக் களவாடிப்
பன்முறை
அன்புக் கரைக்குப்
பரிசாய் அளித்தேன் !
மௌன மாக
எடுத்துக் கொண்டான் !
நானின்னும் கொடுத்தாலும்
வாங்கிக் கொள்ள
தயக்க மில்லை
எப்போதும் !
நடுநிசிப் பொழுதில்
உயிர்ப் பிராணிகள் எல்லாம்
ஆழ்ந்த உறக்கத்தை நாடி
மூழ்கிப் போன வேளையில்
அமர்ந் திருந்தேன் நான்
பாடிக் கொண்டு
ஒரு சமயம் !
பெரு மூச்சை விட்ட படி
மறு சமயம் !
உறக்க மில்லை எப்போதும்
எனக்கு மட்டும் !
எழுப்பி விட்ட தென்னை
ஐயகோ ! எனது
விழிப்புத் தன்மை !
ஆயினும்
மனித நேயன் நான்
சத்தி யத்தைக்
காதலிக்கும்
சித்த வலு பெற்றவன் நான் !
களைத்துப் போயினும்
ஒருபோதும்
மரண மில்லை
எனக்கு !

No comments:

Post a Comment

கணவன் - மனைவி உறவைவிட உன்னதமான உறவு உண்டா?

கணவனுக்குத் தலைவலி. நெற்றியை அழுத்திப் பிடித்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்திருக்கிறான். மனைவி கொஞ்சம் தைலம் எடுத்து வந்து, கணவன் அருகில் அம...