அப்பா சொல்லித் தந்த கதையொன்றில்
பனி உறைந்திருந்தது
செந்நிறப் படைவீரனொருவன்
பனியின் மீது தவழ்ந்தவாறு சென்றான்
துப்பாக்கிச்சன்னம் பட்ட காலொன்றினால்
வெண் பனிக்கட்டிகளின் மீது
செந்நிற வழித்தடம் உண்டானது
வேதனை வழிகி்ன்ற
அப்பாவின் குரலுக்கு
சிறுவன் என்றாலும் என் மனது நொந்தது
பனி போர்த்திய சமதரையொன்றில்
அவருடன் பனியில் விளையாடிக்கொண்டிருந்த இடைவேளையில்
வேலை நிறுத்தக்காரரான எனது அப்பா
சைபீரியாவுக்கு அனுப்பிய கடிதம் தபாலில் கிடைத்தது
இறுக மூடப்பட்டிருந்த இடது கைக்குத் துணையாக
சிறிய கரமொன்று இணைந்திருந்தது
ஸ்டெப்ஸ் புல்வெளியை விடவும் நீளமான பசி
பனியைப் போல மனதில் இறுகிப்போனது
சிறிய மனதால் தாங்கவே முடியாமற் போகும்
கணமொன்றும் இருந்தது
அப்பாவின் பனி உறைந்த விழிகளின் தைரியத்தில்
பனிப் பந்தொன்றுக்கு உதை கிடைத்தது
ஆனாலும் நாம் பனியிடையே தரித்தோம்
எமது முழங்கால்கள் வரை கால்கள் புதைந்தன
வெந்நீர்ப் பானையிலிருந்து எழுந்து வந்த ஆவியில்
சீனியில்லாத தேனீர்ச் சாயத்தின் சுவை நிரம்பியிருந்தது
தேனீரின் நறுமணத்தில் திறபட்ட
சாயமற்ற விழிகள் இரண்டுக்கு
கவிதை எழுதும் வழித்தடங்கள் தென்பட்டன
*இர்த்து ஊடாக நெடுந் தூரம் நடந்த
காரிருளால் முடிச்சுகளும் கேசத்தின் அலைகளும் நிறைந்த
அந்தத் தலையில் பனி இதழ்கள் உறைந்தன
ஆனாலும் அந்தக் குரலின் கூர்மை பிரகாசித்தது
அந்தக் குரலில் கதையொன்று கேட்டது
பனி உறைந்திருந்தது
செந்நிறப் படைவீரனொருவன்
பனியின் மீது தவழ்ந்தவாறு சென்றான்
துப்பாக்கிச்சன்னம் பட்ட காலொன்றினால்
வெண் பனிக்கட்டிகளின் மீது
செந்நிற வழித்தடம் உண்டானது
வேதனை வழிகி்ன்ற
அப்பாவின் குரலுக்கு
சிறுவன் என்றாலும் என் மனது நொந்தது
பனி போர்த்திய சமதரையொன்றில்
அவருடன் பனியில் விளையாடிக்கொண்டிருந்த இடைவேளையில்
வேலை நிறுத்தக்காரரான எனது அப்பா
சைபீரியாவுக்கு அனுப்பிய கடிதம் தபாலில் கிடைத்தது
இறுக மூடப்பட்டிருந்த இடது கைக்குத் துணையாக
சிறிய கரமொன்று இணைந்திருந்தது
ஸ்டெப்ஸ் புல்வெளியை விடவும் நீளமான பசி
பனியைப் போல மனதில் இறுகிப்போனது
சிறிய மனதால் தாங்கவே முடியாமற் போகும்
கணமொன்றும் இருந்தது
அப்பாவின் பனி உறைந்த விழிகளின் தைரியத்தில்
பனிப் பந்தொன்றுக்கு உதை கிடைத்தது
ஆனாலும் நாம் பனியிடையே தரித்தோம்
எமது முழங்கால்கள் வரை கால்கள் புதைந்தன
வெந்நீர்ப் பானையிலிருந்து எழுந்து வந்த ஆவியில்
சீனியில்லாத தேனீர்ச் சாயத்தின் சுவை நிரம்பியிருந்தது
தேனீரின் நறுமணத்தில் திறபட்ட
சாயமற்ற விழிகள் இரண்டுக்கு
கவிதை எழுதும் வழித்தடங்கள் தென்பட்டன
*இர்த்து ஊடாக நெடுந் தூரம் நடந்த
காரிருளால் முடிச்சுகளும் கேசத்தின் அலைகளும் நிறைந்த
அந்தத் தலையில் பனி இதழ்கள் உறைந்தன
ஆனாலும் அந்தக் குரலின் கூர்மை பிரகாசித்தது
அந்தக் குரலில் கதையொன்று கேட்டது
No comments:
Post a Comment