Wednesday, January 06, 2016

கவிஞர் வைரமுத்துக்கு அகாதமி பரிசும் கனவில் நடந்த கவியரங்கமும்

கவிப்பேரரசே!

உன்பேரை அகாதமியில்

உச்சரித்த போது தான்

தமிழ்த்தாய் மெல்ல

புரண்டு படுத்தாள்.

தில்லி சீமையில்

உன்பேரை அறிவித்த கணம் தான்

சென்னையில்

தமிழ் நங்கை விழி மலர்ந்தாள்.

சுவாசித்து

வெளியேறுவது கரியமில வாயுவாம்

யார் சொன்னது ?

உன்பக்கத்தில் நின்றாலே

உற்சாகம் பிறக்கிறதே..

'ஆக்ஸிஜன் ' என்று நீ அறிவிக்க வேண்டும்.

அந்த மாலைப் பொழுது

அப்படியே நெஞ்சில் நிற்கிறது

செய்தி வந்த வேளை

வங்கக் கடலில் புயல் சின்னம்

வரலாறு காணாத

வைகை நதியில் பெருவெள்ளம்

உனக்கு நினைவிருக்கிறதா ?

தமிழுக்கு

சோறு போடுவதாய்ச்

சொன்னவன் நீ..

விருந்தே வைத்துவிட்டாய் இன்று

நீ வைத்த விருந்தை

உண்ட பிறகே மீதியை

உவப்புடன் தருகிறாள் எனக்கு.

உன் கவிராஜ்யத்தில்

வெறும்

கவி கூர்க்காவாக

இருப்பதையே பெருமையாய்க்

கருதுகிறேன்

ஏன் தெரியுமா ?

கூர்க்கா என்றாலும்

ஒரு வகையில்

கவிதைக் காவலன் தானே

அரங்கம் அதிந்த கைதட்டலில் விழிப்பு வர பல நல்ல வரிகளைத் தொடர்ந்து

கேட்கவியலாமல் போனது .

No comments:

Post a Comment

கணவன் - மனைவி உறவைவிட உன்னதமான உறவு உண்டா?

கணவனுக்குத் தலைவலி. நெற்றியை அழுத்திப் பிடித்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்திருக்கிறான். மனைவி கொஞ்சம் தைலம் எடுத்து வந்து, கணவன் அருகில் அம...