கவிப்பேரரசே!
உன்பேரை அகாதமியில்
உச்சரித்த போது தான்
தமிழ்த்தாய் மெல்ல
புரண்டு படுத்தாள்.
தில்லி சீமையில்
உன்பேரை அறிவித்த கணம் தான்
சென்னையில்
தமிழ் நங்கை விழி மலர்ந்தாள்.
சுவாசித்து
வெளியேறுவது கரியமில வாயுவாம்
யார் சொன்னது ?
உன்பக்கத்தில் நின்றாலே
உற்சாகம் பிறக்கிறதே..
'ஆக்ஸிஜன் ' என்று நீ அறிவிக்க வேண்டும்.
அந்த மாலைப் பொழுது
அப்படியே நெஞ்சில் நிற்கிறது
செய்தி வந்த வேளை
வங்கக் கடலில் புயல் சின்னம்
வரலாறு காணாத
வைகை நதியில் பெருவெள்ளம்
உனக்கு நினைவிருக்கிறதா ?
தமிழுக்கு
சோறு போடுவதாய்ச்
சொன்னவன் நீ..
விருந்தே வைத்துவிட்டாய் இன்று
நீ வைத்த விருந்தை
உண்ட பிறகே மீதியை
உவப்புடன் தருகிறாள் எனக்கு.
உன் கவிராஜ்யத்தில்
வெறும்
கவி கூர்க்காவாக
இருப்பதையே பெருமையாய்க்
கருதுகிறேன்
ஏன் தெரியுமா ?
கூர்க்கா என்றாலும்
ஒரு வகையில்
கவிதைக் காவலன் தானே
அரங்கம் அதிந்த கைதட்டலில் விழிப்பு வர பல நல்ல வரிகளைத் தொடர்ந்து
கேட்கவியலாமல் போனது .
உன்பேரை அகாதமியில்
உச்சரித்த போது தான்
தமிழ்த்தாய் மெல்ல
புரண்டு படுத்தாள்.
தில்லி சீமையில்
உன்பேரை அறிவித்த கணம் தான்
சென்னையில்
தமிழ் நங்கை விழி மலர்ந்தாள்.
சுவாசித்து
வெளியேறுவது கரியமில வாயுவாம்
யார் சொன்னது ?
உன்பக்கத்தில் நின்றாலே
உற்சாகம் பிறக்கிறதே..
'ஆக்ஸிஜன் ' என்று நீ அறிவிக்க வேண்டும்.
அந்த மாலைப் பொழுது
அப்படியே நெஞ்சில் நிற்கிறது
செய்தி வந்த வேளை
வங்கக் கடலில் புயல் சின்னம்
வரலாறு காணாத
வைகை நதியில் பெருவெள்ளம்
உனக்கு நினைவிருக்கிறதா ?
தமிழுக்கு
சோறு போடுவதாய்ச்
சொன்னவன் நீ..
விருந்தே வைத்துவிட்டாய் இன்று
நீ வைத்த விருந்தை
உண்ட பிறகே மீதியை
உவப்புடன் தருகிறாள் எனக்கு.
உன் கவிராஜ்யத்தில்
வெறும்
கவி கூர்க்காவாக
இருப்பதையே பெருமையாய்க்
கருதுகிறேன்
ஏன் தெரியுமா ?
கூர்க்கா என்றாலும்
ஒரு வகையில்
கவிதைக் காவலன் தானே
அரங்கம் அதிந்த கைதட்டலில் விழிப்பு வர பல நல்ல வரிகளைத் தொடர்ந்து
கேட்கவியலாமல் போனது .
No comments:
Post a Comment