Sunday, January 03, 2016

அக்கினிப் பூக்கள் !

1.  படைப்போன் இல்லாது
படைப்பே கிடையாது !
முட்டை முதலாய் இட்டதா ?
கோழி முன்பே பிறந்ததா
ஞானத் தங்கமே ?
2.  ஒரு பானை சோற்றுக்கு
ஒரு சோறு பதமாம் !
நுனிப் புல் மேய்ந்து
வனத்தை அறிவதோ
ஞானத் தங்கமே ?
3.  வந்த சண்டைக்கு நழுவு !
வராத சண்டைக்குத் தழுவு !
சண்டை வந்தாலும் முடிவில்
சமாதானா மாய்க் கைகொடு
ஞானத் தங்கமே !
4.  குருடனுக் குதவச் செவிடன் !
செவிடனுக் குதவ நொண்டி !
நொண்டிக் குதவக் குருடன் !
மண்டுக் குதவ எவன்
ஞானத் தங்கமே ?
5.  போர் வாளை எல்லாம் நெளித்து
ஏர் முனையாய் ஆக்கு !
போர் வாள் ஊரை உழுதால்
வேர்கள் எங்கே நிலைக்கும்
ஞானத் தங்கமே ?
6.  தூரத்துப் பச்சை
கண்ணுக்கு இச்சை !
கிட்டப் பார்வை குள்ளனுக்கு
எட்ட ஏணி உள்ளதா
ஞானத் தங்கமே ?
7.  காணாத மோதிரம் தேடக்
கை விளக்கில் திரியில்லை !
திரி இட்டதும் எண்ணை சிந்த
தீபம் ஏற்றுவோன் வழுக்கி விழுந்தான்
ஞானத் தங்கமே ?
8.  உன்னைப் பற்றி நான் அறியேன் !
என்னைப் பற்றி நீ அறியாய் !
இல்லறக் சிறையில் நீயும், நானும்
பல்லாங்குழி விளை யாடுவோம்
ஞானத் தங்கமே !
9.  ஜன்னல் இடத்தில் முகம் பார்க்கும்
கண்ணாடி வைத்திடு !
கண்ணாடி இடத்தில் ஒளிவரும்
ஜன்னலை வைத்திடு
ஞானத் தங்கமே !
10.  பாதிப்பேர் மூடர் என்றேன் !
பளாரென அறைந்தார் அவ்வூரில் !
பாதிப்பேர் அறிஞர் என்றேன் !
பூமாலை கழுத்தில் விழும் இவ்வூரில்
ஞானத் தங்கமே !
11.  ஈராக்கில் ஆஹாவென எழுந்தான்
விடுதலைச் சூரியன் !
குடிமக்கள் நிம்மதியாய்த் தூங்கினர்
கூடாரக் குப்பை வெளியில்
ஞானப் பெண்ணே !
12.  செருப்பைத் தைத்துக் கொண்டு
பாதத்தை நுழைக்கப் போனான் !
செருப்பு பல்லால் கடித்ததும்
நறுக்கப் போனான் காலை
ஞானப் பெண்ணே !
13.  வந்த சண்டை போடவா ?
வராத சண்டை நாடவா ?
போன சண்டை கீறி விட்ட
புண்ணை ஆற்றிக் கொள்ளவா
ஞானப் பெண்ணே ?
14.  ஆழம் தெரியாமல் காலை விடாதே !
ஒரு கால் நொண்டி
காலை விடுவானா ? அல்லது
கோலை விடுவானா
ஞானப் பெண்ணே ?
15.  எல்லாரும் வலது கால் வைக்க
இடது கால் வைத்தான் பேரன் !
எல்லோரும் தவறிய பாதம்
என்றாள் பாட்டி பேரனைத் தவிர
ஞானப் பெண்ணே !
16.  சுட்ட சட்டி எறிவதா ?
சுடாத சட்டி அறிவதா ?
சுட்ட சட்டி தெரிந்திட
எட்டி நிற்க முடியுமா ?
ஞானப் பெண்ணே ?

No comments:

Post a Comment

கணவன் - மனைவி உறவைவிட உன்னதமான உறவு உண்டா?

கணவனுக்குத் தலைவலி. நெற்றியை அழுத்திப் பிடித்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்திருக்கிறான். மனைவி கொஞ்சம் தைலம் எடுத்து வந்து, கணவன் அருகில் அம...