நவீன வாழ்க்கையின்
நெருக்கடி காரணமாக மனிதன் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அளவற்றவை. எல்லாக்
கேள்விகளுக்கும் விடை அறிந்தது போன்ற நிலையிலும், ஒவ்வொரு தடவையும்
ஆரம்பத்திலிருந்து புதிதாகத் தொடங்க வேண்டியுள்ளது. வாழ்வின்
வினோதங்களையும் புதிர்களையும் அவிழ்த்து, எளிய விடைகளைக் கவித்துவமாகச்
சொல்லிவிடத் துடிக்கும் கவிஞன், மின்னல் கீற்றெனத் தெறிக்கும் சொற்களைத்
தேடி அலைய நேரிடுகிறது. நேற்றைய மொழியின் பழமை யும் சொற்பொருளின்
இருண்மையும் வழக்கிழந்த கற்பனைகளும் கவிஞனின் இருப்பினைக்
கேள்விக்குட்படுத்துகின்றன. வாழ்க்கையை எளிமையாக மதிப்பிடும் மனம்
காலத்தினால் மிகவும் பின்தங்கியது. எனவேதான் நவீன கவிஞனின் பாய்ச்சல்,
இதுவரையிலான மதிப்பீடுகளின் போலித்தனங்களை மறுதலிக்கிறது. இத்தகு சூழலில்
பெண் மொழியின் உக்கிரமான குரலினைக் கவிதையாக்கத்திற்குத் தளமாகக்கொண்ட பெண்
கவிஞர்கள், நவீன கவிதையில் பெரும் வீச்சினை
உருவாக்கிக்கொண்டிருக்கின்றனர். இதுவரையிலும் மரபு என்ற பின்புலத்தில்
தமிழ் அடையாளத்தை நிறுவிட முயலும் பொதுப் புத்தியைச் சவாலுக்கு அழைக்கின்றன
நவீனப் பெண் கவிதைகள். இத்தகைய போக்கினால் சுகிர்தராணியின் கவிதை மொழி
தனித்திருக்கின்றது.
சுகிர்தராணியின் கவிதைகள் கைப்பற்றி என் கனவுகேள் (2000), இரவு மிருகம் (2004), அவளை மொழிபெயர்த்தல் (2006) ஆகிய மூன்று தொகுதிகளாக வெளியாகியுள்ளன. பிறப்பினால் தலித்தாக அறியப்படும் சுகிர்தராணியின் கவிதைகள் இன்று பலருடைய கவனத்தை ஈர்த்துள்ளன. விட்டேற்றியான மனநிலையுடன் கலகத்தை உருவாக்கும் மொழியிலமைந்த இவருடைய கவிதை வரிகள் சிலருக்குக் கொண்டாட்டத்தையும் சிலருக்கு எரிச்சலையும் தந்துள்ளன. தமிழ்ச் சமூகத்தில் பெண் என்றால் பால் நிலையில் இரண்டாம் தரமாகவும் தலித் என்றால் தீண்டாமையைக் கற்பித்தும் ஒதுக்கப்படும் சூழலில் சுகிர்தராணி வீரியமான மொழியில் அழுத்தமான மனப் பதிவுகளைக் கவிதைகளாக வெளிப்படுத்தியுள்ளார்.
கைப்பற்றி என் கனவுகேள் தொகுதியானது இளம் பெண்ணின் மனவோட்டமாக விரிந்துள்ளது. ஆண்டாள் போலத் தன்னைப் பாவித்துக்கொண்ட மனநிலையில், காதலின் ஏக்கம் கொப்பளித்திடும் கவிதைகள் புனைவில் ரம்மியமாக வெளிப்பட்டுள்ளன. ஆண் மீதான மரபு வழிப்பட்ட காதலில், தனது அடையாளத்தை முன்னிறுத்தும் பெண்ணின் மனத்துடிப்பை அறிய முடிகின்றது. அவை மனுஷி என்ற நிலையில் பெண்ணின் புழங்கு வெளியையும் இருப்பினையும் முதன்மைப்படுத்துகின்றன. சுகிர்தராணியின் தொடக்க காலக் கவிதைகள் சித்திரிக்கும் வாழ்க்கைப் பரப்பு மிகச் சுருங்கியது. பகல் வேளையில் பால் கணக்கு எழுதுதல், கடிதம் வாசித்துக் காட்டுதல், பாவாடைக்கு நாடா கோர்த்தல் எனப் பொழுதைக் கழித்திடும் அவள் இரவினில் அவன் பற்றிய நினைவுடன் உறங்குகிறாள். இக்கவிதை வாசிப்பில் தட்டையாகி வேறு எவ்விதமான அனுபவமும் தரவில்லை. 'அப்பாவுக்கு எதைச் சொல்லி என் வயதை ஞாபகப்படுத்த? ஞாயிறுகளில் படி தாண்ட அனுமதியில்லை; மடியில் முகம் புதைத்து மௌனமாய் அழலாம் . . .' இப்படியாக முடியும் கவிதை வரிகள் மேலோட்டமாகவே தேங்கிவிடுகின்றன. சராசரிப் பெண்ணின் வாழ்நிலை மீறல்கள், சில கவிதைகளில் பதிவானாலும், அவை ஆண் மேலாதிக்க மொழியில் அமைந்துள்ளன. எனினும், பெண் என்று தன்னையறிந்து தனது இருப்பின் அவலத்தைப் பெண்ணிய நோக்கில் விவரிக்கும் கவிதை முக்கியமானது.
. . . . . . . . .
துள்ளும் வலியும்
மின்னலென வெட்டும்
வேதனையும்
உச்சமாய் எகிற
உயிரை அசைத்து
இரத்தச் சகதியில்
மீண்டழுத குழந்தையின்
துணி விலக்கி
பெண்ணென முகம் சுழிப்பவனே
அன்று
என் மீது பரவியபோது
மனம் களித்தவன் நீதானே?
தாய்க்கும் மகளுக்குமான நெருங்கிய பிணைப்பைப் புறக்கணித்து ஒதுக்கிடும் கணவனிடம் அவள் கேட்கும் கேள்வி சமூகத்தை நோக்கியதாகும். காலந்தோறும் வௌ;வேறு வடிவங்களில் பதிவாகிக்கொண்டிருக்கும் பெண்ணின் மன உளைச்சல் சுகிர்தராணியின் எழுத்திலும் பதிவாகியுள்ளது.
மொழியின் மீதான ஆளுமை, வடிவச் செழுமை, கருத்தியல் தேர்வு போன்றவற்றில் கவனமற்ற மனத்தின் குரலைக் கவிதை வரிகளாக மாற்றிட முயலும் இளம் கவிஞருக்கே உரிய போக்கினை முதல் தொகுப்பில் காண முடிகின்றது. காதலின் 'புனைவு' மனநிலையைத் தாண்டிப் போக முடியாத ஏக்கத்தினைப் பல கவிதைகளில் காணமுடிகின்றது. தலித் பிரச் சினையை மையமிட்ட கவிதைகளும் அத்தொகுப்பில் இடம் பெற்றிருப்பது தற்செயலானது அல்ல.
சுகிர்தராணியின் அடுத்தடுத்த இரு தொகுப்புகளும் கருத்தியல் ரீதியிலும் வெளிப்பாட்டு நிலையிலும் தனித்து விளங்குகின்றன. சராசரிப் பெண்ணின் புனைவியல் மனோபாவத்திற்கும் ஏக்க உணர்வுகளுக்கும் மாற்றாகத் தீவிரமான பெண் முன்னிறுத்தப்படுகிறாள். மரபு வழிப்பட்ட காதல் பற்றிய புனைவினைச் சிதைத்து, உடல்களை மையப்படுத்தி எழுதப்பட்ட கவிதைகள், ஆண்-பெண் உறவில் புதிய போக்கினை உருவாக்குகின்றன. ஒருவிதமான கேலியும் கம்பீரமும் கர்வமும் கலந்த மனநிலையில், பெண்ணுடல் இதுவரையிலும் மறைக்கப்பட்ட பெண் குல வரலாற்றை எழுதுவதற்கான ஆதாரமாகின்றது. தமிழ்ச் சமூகம் பன்னெடுங்காலமாக மர்மப்படுத்தியுள்ள உடலையும் விலக்காகக் கருதி ஒதுக்கப்பட்ட கற்பிதங்களையும் புனைவின் உச்சமாகக் கருதி மறைக்கப்பட்ட பாலுறுப்புகளையும் கட்டுடைக்கின்றன சுகிர்தராணியின் கவிதைகள். பெண்ணுடலை மையப்படுத்தி அவர் எழுதியுள்ள கவிதைகளில் பெண் அரசியல் பொதிந்துள்ளது. பெண்ணுடலை எப்படி வேண்டுமானாலும் உருமாற்றுவதற்கான சாத்தியப்பாடுகளை முன்னிறுத்தும் வரிகள் 'அவளை எழுதுதல்' என்ற கவிதையாக வடிவெடுத்துள்ளன. பிரக்ஞையில் எப்பொழுதும் பெண் என்ற உடல்ரீதியான மனஅழுத்தம் நசுக்குகையில், அதிலிருந்து வெளியேறி உடலை முன் வைத்து ஆண் மேலாதிக்கக் குரலை எதிர்ப்பது கவிதைகளில் நுட்பமாக வெளிப்பட்டுள்ளது. அது மரபு வழியில் உறைந்துகிடக்கும் ஆண் மனங்களில் பண்பாட்டு அதிர்வுகளை ஏற்படுத்துகின்றது. இதனால் பெண் இது போலக் கவிதை எழுதுவது சரியா, பெண் தன்னுடைய உடலையும் அக உணர்வையும் வெளிப்படையாகக் கவிதையாக்கு வது முறையா என்று சிலர் பதற்றமடைகின்றனர்.
இன்றைய உலகமயமாக்கல் காலகட்டத்தில் புற நெருக்கடிகளுக்குப் பணிவதுடன், தன்னையே கூட்டுக் குள் ஒடுக்கிக்கொள்ளும் பொதுப் புத்தி எங்கும் பரவலாகிக்கொண்டிருக்கின்றது. மனிதனை நுகர்பொருளாக மாற்றி ஆதாயம் தேடும் சூழலில், காதல், கற்பு போன்ற சொற்கள் அர்த்தமிழக்கின்றன. இத்தகைய சூழலில், 'உடல்' காரணமாக ஏற்படும் பிரச் சினைகள், சுகிர்த ராணியின் கவிதைகளில் முதன்மைப்படுத்தப்படுகின்றன. இந்திய வைதீக சமய நெறிப்படி, கடந்த ஆயிரமாண்டுகளுக்கும் கூடுதலாக உடல்கள் தொடர்ந்து கண்காணிப்பிற்கு உள்ளாக்கப்படுவதுடன், அவை எப்படி இயங்க வேண்டுமென்ற நெறிமுறைகள் கற்பிக்கப்படுகின்றன. சுத்தம் ஜ் அசுத்தம் என்ற கருத்தியலை மையமாக்கிப் பால், பிறப்பின் அடிப்படையில் உடல்களை இழிவானதாகக் கருதிடும் போக்கு உள்ளது. புலன் உணர்வுகளை மறுப்பதும் இயல்பான பாலியல் இச்சைக்குத் தடை விதிப்பதும் 'விரதம்' என்ற பெயரில் உடலை வருத்துவதும் இங்கு தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. மாதந்தோறும் வெளியேறும் மாதவிலக்குக் குருதி காரணமாகப் பெண்ணுடலை முழுக்க இழிவானதாகக் கருதிடும் போக்குப் பரவலாக உள்ளது. இந்நிலையில் சுகிர்தராணியின் கவிதைகள் ஒடுக்கப்பட்ட உடலினை மையப்படுத்திப் புலன் வேட்கையைக் கொண்டாட்டமாக்கி எதிர் அரசியலை முன்வைக்கின்றன. மரபு ரீதியாக இழிவாகக் கருதி ஒதுக்கப்பட்டவைக்கு எதிரிணையாகச் சுகிர்தராணி முன்னிறுத்துபவை அடிப்படையில் கலகத்தன்மை மிக்கவை.
மனிதனின் இயல்பூக்கம் சார்ந்த அடிப்படைப் பண்பாகப் பாலியலும் வன்முறையும் அமைந்துள்ளன. சமூக இயக்கம் அல்லது வளர்ச்சி என்பது காலங்காலமாக வன்முறையின் மூலமாகத்தான் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. புறநிலையில் நிலத்தைத் துய்ப்பதும் அக நிலையில் பெண்ணுடலைத் துய்ப்பதும் ஆணின் அதிகாரமாகக் குவிந்திட்ட நிலையில் வரலாறு முழுக்க ரத்தம் தோய்ந்துள்ளது. இரண்டாயிரமாண்டுப் பாரம்பரியமுடைய தமிழ்ச் சூழலில் இந்நிலைக்கு எதிராகக் காமத்தை முன்னிறுத்திப் பாலியல் தொடர்பாகப் பெண்ணுடலை மறுவாசிப்புச் செய்திடும் சுகிர்தராணியின் கவிதைகள் தனித்த போக்குடையன.
பருவங்கள் வாய்த்த என்னுடல்
காளானைப் போலக் கனிந்து குவிகிறது
அதன் முன்னும் பின்னும்
கவனமாய் நெய்த ரகசிய உறுப்புகள்
மயிர்க் கால்கள் சிலிர்த்த தோல் முழுவதும்
காம நெய்யின் உருகிய வாசனை
மலர்ந்த இடையைச் சுற்றி
வெதுவெதுப்பான புணர்கதுப்புகளும்
கவிழ்த்துப் போட்ட ஆயுத எழுத்தாய்
காமத்தின் சோழிகளும்
உடலினுள் பொதிந்து மிதக்கின்றன
. . . . . . . . .
இனியென் ஆளுகைப் பிரதேசத்தில்
பதாகையை உயர்த்திப் பிடிக்கும்
இளகாத ஸ்தனங்களை
விதையின் அடியிலிருந்து உரக்கப்பாடு
முலைகள் விருட்சங்களாகி வெகுகாலமாயிற்று
கருத்து ரீதியில் பெண்ணுடலை வெறும் யோனியும் முலைகளுமாகக் குறுக்குவதும் நடைமுறையில் துய்க்கப் பட்ட உடல்களைத் தூக்கியெறிந்துவிட்டுப் போவதுமான ஆண் மைய நுகர்வுப் பண்பாட்டிற்கு எதிராகப் பெண்ணின் காம வேட்கையை முன்னிறுத்திப் பெண் விடுதலையை மையப்படுத்தும் கவிதைகள் தமிழுக்குப் புதியன. மேலும், பாலியல் மூலம் இயற்கையை அவதானிக்க முயல்வதும் பெண்ணுடலை அடையாளப்படுத்துவதும் கவிதைகளின் வழியே தொடர்ந்து முயலப் பட்டுள்ளது.
மயிர்கள் சிரைக்காத என் நிர்வாணம்
அழிக்கப்படாத காடுகளைப் போல
கம்பீரம் வீசுகிறது
இயற்கையின் பிஞ்சு நிறத்தில்
ஆழ்ந்து கிடக்கும் என்னுடலை
தூர நின்று கவட்டுக் குச்சியால்
கிளறிப் பார்க்கின்றாய்
. . . . . . . . .
அவிழ்ந்த ஆடையை இறுக்கியபடி
நகரத் தெருக்களில்
சொல்லிக்கொண்டு ஓடுகிறாய்
ஆதிவாசியருத்தி கரை கடப்பதாக.
இயற்கையுடன் இயைந்திருக்கும் பெண்ணுடலின் மர்மம் புரியாத நிலையில், தள்ளி நின்று குச்சியால் கிளறிப் பார்ப்பதாக ஆணைப் பகடி செய்யும் கவிதை, தாய்த் தெய்வ வழிபாட்டினை முன்னிறுத்திப் பெண் ணைப் போற்றுகின்றது. மயிர்களுடன் இயற்கையாகப் பொங்கி வழிந்திடும் நிர்வாண உடலினைக் காடுகளைப் போல உவமித்துக் கம்பீரமாகப் பார்க்கும் பார்வையில், சமூகம் இதுவரையில் கட்டமைத்துள்ள பொதுப்புத்தி தகர்ந்துபோகின்றது.
'இரவுகளைப் புணர்தல்' கவிதை, ஆண் - பெண் பாலுறவினை வேறு தளத்திற்கு மாற்றியமைத்துப் புதிய சொல்லாடலுக்கு வழிவகுக்கிறது.
. . . . . . . . .
உன்னோடு பகிரவென்றே
செதுக்கப்பட்டிருக்கிறது
என் கற்படுக்கை என்றாலுங்கூட
வளர்ந்துகொண்டுதானிருக்கின்றன
என் யோனி மயிர்கள்
புறவுலகு பெண்ணுடல்மீது தொடர்ந்து அத்துமீறல்களைக் கட்டமைத்திடும் சூழலில், பெண்ணுக்கு ஆணுடனான உறவு ஒற்றைத் தன்மையாய் இறுகிப்போவதால் படுக்கையும் கல்லாகிப் போகின்றது. பெண்ணுக்கெனத் தனிப்பட்ட மனம் இருக்கிறது; அவளுடைய உடலின் பரவசக் கொண்டாட்டத்திற்கென 'கிளிட்டேரிஸ்' இருக்கிறது என்ற புரிதலற்ற ஆணுடன் கூடி வாழ நேர்ந்தாலும், பெண் இன்னொரு உயிரினை உற்பத்தி செய்யக் கூடியவள் என்ற செருக்கினை 'வளர்ந்திடும் யோனி மயிர்கள்' குறியீடாக உணர்த்துகின்றன.
'உடலெழுத்து' கவிதையில் 'நீண்ட யுகங்களுக்குப் பிறகு ஃ அன்றுதான்ஃ என்னுடல் என்னிடமிருந்தது' என்ற வரிகளும் 'இரவு மிருகம்' கவிதையில் 'கோப்பை நிறைய வழியும் மதுவோடு ஃ என்னுடல் மூழ்கி மிதந்தது' என்ற வரிகளும் பெண் தன்னுடைய உடலினை அறிந்திட்ட நிலையைப் பரவசப்படுத்தியுள்ளன் பெண்ணின் அசலான மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளன. 'போரின் குறுவாள்' கவிதை பெண்ணுடலை வேறுவிதத்தில் புரட்டிப்போட்டு, உடலையே ஆயுதமாக்க முயல்கின்றது.
'கடல் ஆழத்தைக் கண்டாலும் பெண்ணின் மனத்தைப் புரிந்துகொள்ள முடியாது' என்று பெண் பற்றிய புதிர்களைக் கட்டமைத்துப் பெண்ணை மர்மப்படுத்திக்கொண்டிருக்கும் ஆண் மேலாதிக்கச் சமுதாயத்தின் மீது உடைப்பினை ஏற்படுத்த முயல்கின்றன சுகிர்தராணியின் கவிதை வரிகள். இதுவரை ஆண் மூலம் தன்னையும் தன் உடலையும் தன் பாலியல் வேட்கையையும் கண்டறிவதாகக் கட்டமைக்கப்பட்டிருந்த பெண் பிம்பம் தகர்ந்துபோய், பெண் தனது சுயேச்சையான தேர்வின் மூலம் வீறுகொள்கிறாள். உடலைப் பேசுவதன் மூலம் உடல் அரசியலை முதன்மைப்படுத்தும் சுகிர்தராணியின் கவிதைகள், பெண்ணுக்கான அசலான கொண்டாட்டத்தினைச் சாத்தியப்படுத்தியுள்ளன. இவ்வடிப்படையில் பெண்ணின் சுயபுணர்ச்சி குறித்துப் பேசும் கவிதைகள் முக்கியமானவை. பண்பாடு என்ற நிலையில் பெண் தன்னுடைய காம உணர்வை வெளிப்படையாகக் கூறமாட்டாள் என்ற பொதுப்புத்தியைச் சிதைத்துப் பாலியல் தேவையை விடுதலைக்கான முன்மொழிவாகச் சித்திரிப்பது நவீன அறம் சார்ந்தது.
சுகிர்தராணியின் கவிதை மொழி வீரியம் மிக்கது. சில இடங்களில் நீர்த்துப் போய், கூறியது கூறலாக இருப்பினும் கவிதை மொழியில் பாசாங்கு எதுவுமில்லை. அழகியல்ரீதியில் புதிய வகைப்பட்ட மொழியில் வடிவமைக்கப்பட்டுள்ள கவிதைகள், கருத்தியலுக்கு முதன் மையிடம் தந்திருப்பதனால் வடிவம், வெளிப்பாடு குறித்துப் பெரிதும் அக்கறை கொள்ளவில்லை. இயற்கையுடன் பெண்ணுடலைப் பொருத்தும் 'என்னுடல்' கவிதை இவருடைய மொழி ஆளுமைக்குச் சான்றாக உள்ளது.
குறுஞ்செடிகள் மண்டிய மலையில்
பெருகுகிறது ஒரு நதி
அதன் கரைகளில் வளைந்து
நீர்ப் பரப்பினைத் தொட்டோடுகின்றன
பால்வழியும் மரத்தின் கிளைகள்
இஞ்சியின் சுவைகூடிய பழங்கள்
மெல்லிய தோல் பிரித்து
விதைகளை வெளித்தள்ளுகின்றன
பாறைகளில் பள்ளம் பறித்தெஞ்சிய நீர்
முனைகளில் வழுக்கி விழுகிறது அருவியாய்
நீர்த்தாரைகளின் அழுத்தத்தில்
குருதி படர்ந்த வாயை நனைக்கிறது
வேட்டையில் திருப்தியுற்ற புலி
கீழிறங்குகையில்
எரிமலையின் பிளந்த வாயிலிருந்து
தெறிக்கிறது சிவப்புச் சாம்பல்
வானம் நிறமிழக்க
வலஞ்சுழிப் புயல் நிலத்தை அசைக்கிறது
குளிர்ந்த இரவில் வெம்மை
தன்னைக் கரைத்துக்கொள்கிறது
இறுதியில் இயற்கை
என் உடலாகிக் கிடக்கிறது
இக்கவிதையை வாசித்ததும் எனக்குச் சங்கப் பெண் கவிஞரான வெள்ளிவீதியாரின் பாடல் நினைவுக்கு வந்தது.
திங்களும் திகழ் வான் ஏர் தரும்; இமிழ் நீர்ப்
பொங்கு திரைப் புணரியும் பாடு ஓவாதே;
ஒலி சிறந்து ஓதமும் பெயரும்; மலிபுனற்
பல் பூங்கானல் முள் இலைத் தாழை
சோறு சொரி குடையின் கூம்பு முகை அவிழ,
வளி பரந்து ஊட்டும் விளிவு இல் நாற்றமொடு
மை இரும் பனைமிசைப் பைதல உயவும்
அன்றிலும் என்புற நரலும்; அன்றி,
விரல் கவர்ந்து உழந்த கவர்வின் நல்யாழ்
யாமம் உய்யாமை நின்றன்று;
காமம் பெரிதே; களைஞரோ இலNர்
(நற்றிணை : 335)
நிலவு ஒளிர்கின்றது; கடல் அலை கரையில் மோதுகின்றது; மலரின் மணம் காற்றில் வீசுகின்றது; அன்றில் பறவை எலும்புருகக் கத்துகின்றது; நள்ளிரவு வரை யாழ் வாசிக்கப்படுகின்றது. இவை யாவற்றையும்விட என் காமம் மிகப் பெரியது. அக்காமத்தைப் போக்கிடும் காதலன்ஃகணவன் இல்லையே என்று இரவு வேளையில் தனித்திருக்கும் பெண்ணின் காம வேட்கை அழுத்தமாக இக்கவிதையில் வெளிப்பட்டுள்ளது. சுகிர்தராணியின் கவிதையில் இயற்கைக் காட்சிகள் வருணிக்கப்பட்டு, 'இறுதியில் இயற்கை என் உடலாகிக் கிடக்கிறது' என்ற வரிகள் மூலம் உடலின் பாலியல் வேட்கை நுட்பமாக வெளிப்பட்டுள்ளது. திணை சார்ந்த சங்க கால இயற்கையான வாழிடச் சூழல் இன்று மாறித் தமிழகமெங்கும் வறண்ட பாலையாகியுள்ள நிலையிலும் சுகிர்தராணியின் கவிதை வரிகளில் இரண்டாயிரமாண்டு மனத்தின் தொடர்ச்சியைக் காண முடிகின்றது. இந்தக் கவித்துவ மனவுணர்வு மிகவும் முக்கியமானது. பெண்ணுடலை இயற்கையின் பகுதியாகக் கருதுவது தாய்வழிப்பட்ட இனக்குழுச் சமூகத்தின் எச்சமாகும்.
சுகிர்தராணியின் கவிதைகளில் வெளிப்படும் இன்னொரு முக்கியமான அம்சம், தலித்திய நோக்கிலான சமூக விமர்சனமாகும். வைதீக சமயம் பிறப்பின் அடிப்படையில் மனிதர்களைப் பிரித்துத் தீண்டாமையைக் கற்பித்திருப்பது, இந்திய சமூகத்தைப் பிடித்துள்ள பெரும்சாபக்கேடு. அதிலும் தலித்தாகப் பிறந்த பெண்ணின் பிரச்சினைகள் ஒப்பீட்டளவில் தலித் ஆணைவிடக் கூடுதலானவை. அவளுடைய உடலின் மீது கணவன் மட்டுமின்றி, ஆதிக்க சமுதாயமும் தொடர்ந்து வன்முறையைச் செலுத்துகின்றது. இன்னொரு புறம் பொருளியல் சுரண்டலின் ஆதிக்கம் வலுவாக உள்ளது. பால் ரீதியில் தலித் பெண்ணின் குரல் சமூக அடித்தளத்தில் பலவீனமாக ஒலித்துக்கொண்டிருக்கின்றது.
கிராமத்தில் சமூகச் செயற்பாட்டில் கடைசி ஆளாக ஒதுக்கப்படும் 'தலித்துகள்' 'முதல் ஆளாகஃ இழவுக்குப் பறையடிக்க அழைக்கப்படுவது குறித்து 'அமைப்பு' கவிதையில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. ஊருக்கு ஒதுக்குப் புறமானதாகக் கருதப்படும் பறையர் தெருவை ஊருக்கு 'முதலில் இருப்பதாகக் கவிஞர் மாற்றியமைக்கின்றார். தலித் உடல்களைக் கடின உழைப்பில் ஈடுபடுத்திப் பொருளாதார வளம் பெறும் ஆதிக்கச் சாதியினர் மேல் ஜ் கீழ், சுத்தம் ஜ் அசுத்தம், கடைசி ஜ் முதல் போன்ற சொல்லாடல்கள் மூலம் தொடர்ந்து தீண்டாமையைத் தக்கவைத்திருப்பதும் அதற்கெதிரான ஆவேசமான குரலும் உக்கிரமாகக் கவிதையில் வெளிப்பட்டுள்ளன.
செத்துப்போன மாட்டைத்
தோலுரிக்கும்போது
காகம் விரட்டுவேன்
வெகு நேரம் நின்று வாங்கிய
ஊர்ச் சோற்றைத் தின்றுவிட்டு
சுடுசோறெனப் பெருமை பேசுவேன்
தப்பட்டை மாட்டிய அப்பா
தெருவில் எதிர்ப்படும்போது
முகம் மறைத்துக் கடந்துவிடுவேன்
அப்பாவின் தொழிலும் ஆண்டு வருமானமும்
சொல்ல முடியாமல்
வாத்தியாரிடம் அடி வாங்குவேன்
தோழிகளற்ற
பின் வரிசையிலமர்ந்து
தெரியாமல் அழுவேன்
இப்போது
யாரேனும் கேட்க நேர்ந்தால்
பளிச்சென்று சொல்லிவிடுகிறேன்
பறச்சி என்று
சாதிரீதியான ஏற்றத் தாழ்வு குறித்து ஆவேசமான மனநிலையைக் கவிதை பதிவுசெய்துள்ளது. 'பறச்சியே தடா பனத்தியேதடா' என்ற சித்தரின் கலகக் குரல் சுகிர்தராணியிடம் வேறு தொனியில் வெளிப்பட்டுள்ளது.
இன்று கவிதை எழுதிக்கொண்டிருக்கும் பெண் கவிஞர்களில் பலருடைய கவிதைகளை ஆண் கவிஞர்களால் எழுதிட முடியும்; பெரிய அளவில் பால் வேறுபாடுகள் இல்லை. தலித்துகள் பற்றிய சுகிர்தராணியின் கவிதையை யார் வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால், பெண்ணுக்கே உரித்தான துக்கங்களையும் உடல்ரீதியான வேட்கையையும் கவிதையாக்கியதில் பெண் என்ற நிலையில் தனித்த அடையாளத்துடன் சுகிர்தராணியின் கவிதைகள் விளங்குகின்றன. அவை பெண் மொழியின் மூலம் ஆண் - பெண் உறவில் நிலவும் சமத்துவமின்மை அரசியலைப் புதிய வடிவில் முன்வைக்கின்றன் மரபு வழிப்பட்ட தமிழ்ப் பெண் பிம்பத்தைக் கேள்விக்குள்ளாக்குகின்றன. காலங்காலமாக ஒடுக்கப்பட்டுள்ள பெண்களின் வேதனையையும் சீற்றத்தையும் வெளிப்படுத்திடப் பெண்ணுடலையும் உடல் வேட்கையையும் முன்னிறுத்திடும் சுகிர்தராணியின் கவிதைகள், நவீனப் பெண்ணின் விடுதலைக் குரல்களாக வெளிப்பட்டுள்ளன.
சுகிர்தராணியின் கவிதைகள் கைப்பற்றி என் கனவுகேள் (2000), இரவு மிருகம் (2004), அவளை மொழிபெயர்த்தல் (2006) ஆகிய மூன்று தொகுதிகளாக வெளியாகியுள்ளன. பிறப்பினால் தலித்தாக அறியப்படும் சுகிர்தராணியின் கவிதைகள் இன்று பலருடைய கவனத்தை ஈர்த்துள்ளன. விட்டேற்றியான மனநிலையுடன் கலகத்தை உருவாக்கும் மொழியிலமைந்த இவருடைய கவிதை வரிகள் சிலருக்குக் கொண்டாட்டத்தையும் சிலருக்கு எரிச்சலையும் தந்துள்ளன. தமிழ்ச் சமூகத்தில் பெண் என்றால் பால் நிலையில் இரண்டாம் தரமாகவும் தலித் என்றால் தீண்டாமையைக் கற்பித்தும் ஒதுக்கப்படும் சூழலில் சுகிர்தராணி வீரியமான மொழியில் அழுத்தமான மனப் பதிவுகளைக் கவிதைகளாக வெளிப்படுத்தியுள்ளார்.
கைப்பற்றி என் கனவுகேள் தொகுதியானது இளம் பெண்ணின் மனவோட்டமாக விரிந்துள்ளது. ஆண்டாள் போலத் தன்னைப் பாவித்துக்கொண்ட மனநிலையில், காதலின் ஏக்கம் கொப்பளித்திடும் கவிதைகள் புனைவில் ரம்மியமாக வெளிப்பட்டுள்ளன. ஆண் மீதான மரபு வழிப்பட்ட காதலில், தனது அடையாளத்தை முன்னிறுத்தும் பெண்ணின் மனத்துடிப்பை அறிய முடிகின்றது. அவை மனுஷி என்ற நிலையில் பெண்ணின் புழங்கு வெளியையும் இருப்பினையும் முதன்மைப்படுத்துகின்றன. சுகிர்தராணியின் தொடக்க காலக் கவிதைகள் சித்திரிக்கும் வாழ்க்கைப் பரப்பு மிகச் சுருங்கியது. பகல் வேளையில் பால் கணக்கு எழுதுதல், கடிதம் வாசித்துக் காட்டுதல், பாவாடைக்கு நாடா கோர்த்தல் எனப் பொழுதைக் கழித்திடும் அவள் இரவினில் அவன் பற்றிய நினைவுடன் உறங்குகிறாள். இக்கவிதை வாசிப்பில் தட்டையாகி வேறு எவ்விதமான அனுபவமும் தரவில்லை. 'அப்பாவுக்கு எதைச் சொல்லி என் வயதை ஞாபகப்படுத்த? ஞாயிறுகளில் படி தாண்ட அனுமதியில்லை; மடியில் முகம் புதைத்து மௌனமாய் அழலாம் . . .' இப்படியாக முடியும் கவிதை வரிகள் மேலோட்டமாகவே தேங்கிவிடுகின்றன. சராசரிப் பெண்ணின் வாழ்நிலை மீறல்கள், சில கவிதைகளில் பதிவானாலும், அவை ஆண் மேலாதிக்க மொழியில் அமைந்துள்ளன. எனினும், பெண் என்று தன்னையறிந்து தனது இருப்பின் அவலத்தைப் பெண்ணிய நோக்கில் விவரிக்கும் கவிதை முக்கியமானது.
. . . . . . . . .
துள்ளும் வலியும்
மின்னலென வெட்டும்
வேதனையும்
உச்சமாய் எகிற
உயிரை அசைத்து
இரத்தச் சகதியில்
மீண்டழுத குழந்தையின்
துணி விலக்கி
பெண்ணென முகம் சுழிப்பவனே
அன்று
என் மீது பரவியபோது
மனம் களித்தவன் நீதானே?
தாய்க்கும் மகளுக்குமான நெருங்கிய பிணைப்பைப் புறக்கணித்து ஒதுக்கிடும் கணவனிடம் அவள் கேட்கும் கேள்வி சமூகத்தை நோக்கியதாகும். காலந்தோறும் வௌ;வேறு வடிவங்களில் பதிவாகிக்கொண்டிருக்கும் பெண்ணின் மன உளைச்சல் சுகிர்தராணியின் எழுத்திலும் பதிவாகியுள்ளது.
மொழியின் மீதான ஆளுமை, வடிவச் செழுமை, கருத்தியல் தேர்வு போன்றவற்றில் கவனமற்ற மனத்தின் குரலைக் கவிதை வரிகளாக மாற்றிட முயலும் இளம் கவிஞருக்கே உரிய போக்கினை முதல் தொகுப்பில் காண முடிகின்றது. காதலின் 'புனைவு' மனநிலையைத் தாண்டிப் போக முடியாத ஏக்கத்தினைப் பல கவிதைகளில் காணமுடிகின்றது. தலித் பிரச் சினையை மையமிட்ட கவிதைகளும் அத்தொகுப்பில் இடம் பெற்றிருப்பது தற்செயலானது அல்ல.
சுகிர்தராணியின் அடுத்தடுத்த இரு தொகுப்புகளும் கருத்தியல் ரீதியிலும் வெளிப்பாட்டு நிலையிலும் தனித்து விளங்குகின்றன. சராசரிப் பெண்ணின் புனைவியல் மனோபாவத்திற்கும் ஏக்க உணர்வுகளுக்கும் மாற்றாகத் தீவிரமான பெண் முன்னிறுத்தப்படுகிறாள். மரபு வழிப்பட்ட காதல் பற்றிய புனைவினைச் சிதைத்து, உடல்களை மையப்படுத்தி எழுதப்பட்ட கவிதைகள், ஆண்-பெண் உறவில் புதிய போக்கினை உருவாக்குகின்றன. ஒருவிதமான கேலியும் கம்பீரமும் கர்வமும் கலந்த மனநிலையில், பெண்ணுடல் இதுவரையிலும் மறைக்கப்பட்ட பெண் குல வரலாற்றை எழுதுவதற்கான ஆதாரமாகின்றது. தமிழ்ச் சமூகம் பன்னெடுங்காலமாக மர்மப்படுத்தியுள்ள உடலையும் விலக்காகக் கருதி ஒதுக்கப்பட்ட கற்பிதங்களையும் புனைவின் உச்சமாகக் கருதி மறைக்கப்பட்ட பாலுறுப்புகளையும் கட்டுடைக்கின்றன சுகிர்தராணியின் கவிதைகள். பெண்ணுடலை மையப்படுத்தி அவர் எழுதியுள்ள கவிதைகளில் பெண் அரசியல் பொதிந்துள்ளது. பெண்ணுடலை எப்படி வேண்டுமானாலும் உருமாற்றுவதற்கான சாத்தியப்பாடுகளை முன்னிறுத்தும் வரிகள் 'அவளை எழுதுதல்' என்ற கவிதையாக வடிவெடுத்துள்ளன. பிரக்ஞையில் எப்பொழுதும் பெண் என்ற உடல்ரீதியான மனஅழுத்தம் நசுக்குகையில், அதிலிருந்து வெளியேறி உடலை முன் வைத்து ஆண் மேலாதிக்கக் குரலை எதிர்ப்பது கவிதைகளில் நுட்பமாக வெளிப்பட்டுள்ளது. அது மரபு வழியில் உறைந்துகிடக்கும் ஆண் மனங்களில் பண்பாட்டு அதிர்வுகளை ஏற்படுத்துகின்றது. இதனால் பெண் இது போலக் கவிதை எழுதுவது சரியா, பெண் தன்னுடைய உடலையும் அக உணர்வையும் வெளிப்படையாகக் கவிதையாக்கு வது முறையா என்று சிலர் பதற்றமடைகின்றனர்.
இன்றைய உலகமயமாக்கல் காலகட்டத்தில் புற நெருக்கடிகளுக்குப் பணிவதுடன், தன்னையே கூட்டுக் குள் ஒடுக்கிக்கொள்ளும் பொதுப் புத்தி எங்கும் பரவலாகிக்கொண்டிருக்கின்றது. மனிதனை நுகர்பொருளாக மாற்றி ஆதாயம் தேடும் சூழலில், காதல், கற்பு போன்ற சொற்கள் அர்த்தமிழக்கின்றன. இத்தகைய சூழலில், 'உடல்' காரணமாக ஏற்படும் பிரச் சினைகள், சுகிர்த ராணியின் கவிதைகளில் முதன்மைப்படுத்தப்படுகின்றன. இந்திய வைதீக சமய நெறிப்படி, கடந்த ஆயிரமாண்டுகளுக்கும் கூடுதலாக உடல்கள் தொடர்ந்து கண்காணிப்பிற்கு உள்ளாக்கப்படுவதுடன், அவை எப்படி இயங்க வேண்டுமென்ற நெறிமுறைகள் கற்பிக்கப்படுகின்றன. சுத்தம் ஜ் அசுத்தம் என்ற கருத்தியலை மையமாக்கிப் பால், பிறப்பின் அடிப்படையில் உடல்களை இழிவானதாகக் கருதிடும் போக்கு உள்ளது. புலன் உணர்வுகளை மறுப்பதும் இயல்பான பாலியல் இச்சைக்குத் தடை விதிப்பதும் 'விரதம்' என்ற பெயரில் உடலை வருத்துவதும் இங்கு தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. மாதந்தோறும் வெளியேறும் மாதவிலக்குக் குருதி காரணமாகப் பெண்ணுடலை முழுக்க இழிவானதாகக் கருதிடும் போக்குப் பரவலாக உள்ளது. இந்நிலையில் சுகிர்தராணியின் கவிதைகள் ஒடுக்கப்பட்ட உடலினை மையப்படுத்திப் புலன் வேட்கையைக் கொண்டாட்டமாக்கி எதிர் அரசியலை முன்வைக்கின்றன. மரபு ரீதியாக இழிவாகக் கருதி ஒதுக்கப்பட்டவைக்கு எதிரிணையாகச் சுகிர்தராணி முன்னிறுத்துபவை அடிப்படையில் கலகத்தன்மை மிக்கவை.
மனிதனின் இயல்பூக்கம் சார்ந்த அடிப்படைப் பண்பாகப் பாலியலும் வன்முறையும் அமைந்துள்ளன. சமூக இயக்கம் அல்லது வளர்ச்சி என்பது காலங்காலமாக வன்முறையின் மூலமாகத்தான் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. புறநிலையில் நிலத்தைத் துய்ப்பதும் அக நிலையில் பெண்ணுடலைத் துய்ப்பதும் ஆணின் அதிகாரமாகக் குவிந்திட்ட நிலையில் வரலாறு முழுக்க ரத்தம் தோய்ந்துள்ளது. இரண்டாயிரமாண்டுப் பாரம்பரியமுடைய தமிழ்ச் சூழலில் இந்நிலைக்கு எதிராகக் காமத்தை முன்னிறுத்திப் பாலியல் தொடர்பாகப் பெண்ணுடலை மறுவாசிப்புச் செய்திடும் சுகிர்தராணியின் கவிதைகள் தனித்த போக்குடையன.
பருவங்கள் வாய்த்த என்னுடல்
காளானைப் போலக் கனிந்து குவிகிறது
அதன் முன்னும் பின்னும்
கவனமாய் நெய்த ரகசிய உறுப்புகள்
மயிர்க் கால்கள் சிலிர்த்த தோல் முழுவதும்
காம நெய்யின் உருகிய வாசனை
மலர்ந்த இடையைச் சுற்றி
வெதுவெதுப்பான புணர்கதுப்புகளும்
கவிழ்த்துப் போட்ட ஆயுத எழுத்தாய்
காமத்தின் சோழிகளும்
உடலினுள் பொதிந்து மிதக்கின்றன
. . . . . . . . .
இனியென் ஆளுகைப் பிரதேசத்தில்
பதாகையை உயர்த்திப் பிடிக்கும்
இளகாத ஸ்தனங்களை
விதையின் அடியிலிருந்து உரக்கப்பாடு
முலைகள் விருட்சங்களாகி வெகுகாலமாயிற்று
கருத்து ரீதியில் பெண்ணுடலை வெறும் யோனியும் முலைகளுமாகக் குறுக்குவதும் நடைமுறையில் துய்க்கப் பட்ட உடல்களைத் தூக்கியெறிந்துவிட்டுப் போவதுமான ஆண் மைய நுகர்வுப் பண்பாட்டிற்கு எதிராகப் பெண்ணின் காம வேட்கையை முன்னிறுத்திப் பெண் விடுதலையை மையப்படுத்தும் கவிதைகள் தமிழுக்குப் புதியன. மேலும், பாலியல் மூலம் இயற்கையை அவதானிக்க முயல்வதும் பெண்ணுடலை அடையாளப்படுத்துவதும் கவிதைகளின் வழியே தொடர்ந்து முயலப் பட்டுள்ளது.
மயிர்கள் சிரைக்காத என் நிர்வாணம்
அழிக்கப்படாத காடுகளைப் போல
கம்பீரம் வீசுகிறது
இயற்கையின் பிஞ்சு நிறத்தில்
ஆழ்ந்து கிடக்கும் என்னுடலை
தூர நின்று கவட்டுக் குச்சியால்
கிளறிப் பார்க்கின்றாய்
. . . . . . . . .
அவிழ்ந்த ஆடையை இறுக்கியபடி
நகரத் தெருக்களில்
சொல்லிக்கொண்டு ஓடுகிறாய்
ஆதிவாசியருத்தி கரை கடப்பதாக.
இயற்கையுடன் இயைந்திருக்கும் பெண்ணுடலின் மர்மம் புரியாத நிலையில், தள்ளி நின்று குச்சியால் கிளறிப் பார்ப்பதாக ஆணைப் பகடி செய்யும் கவிதை, தாய்த் தெய்வ வழிபாட்டினை முன்னிறுத்திப் பெண் ணைப் போற்றுகின்றது. மயிர்களுடன் இயற்கையாகப் பொங்கி வழிந்திடும் நிர்வாண உடலினைக் காடுகளைப் போல உவமித்துக் கம்பீரமாகப் பார்க்கும் பார்வையில், சமூகம் இதுவரையில் கட்டமைத்துள்ள பொதுப்புத்தி தகர்ந்துபோகின்றது.
'இரவுகளைப் புணர்தல்' கவிதை, ஆண் - பெண் பாலுறவினை வேறு தளத்திற்கு மாற்றியமைத்துப் புதிய சொல்லாடலுக்கு வழிவகுக்கிறது.
. . . . . . . . .
உன்னோடு பகிரவென்றே
செதுக்கப்பட்டிருக்கிறது
என் கற்படுக்கை என்றாலுங்கூட
வளர்ந்துகொண்டுதானிருக்கின்றன
என் யோனி மயிர்கள்
புறவுலகு பெண்ணுடல்மீது தொடர்ந்து அத்துமீறல்களைக் கட்டமைத்திடும் சூழலில், பெண்ணுக்கு ஆணுடனான உறவு ஒற்றைத் தன்மையாய் இறுகிப்போவதால் படுக்கையும் கல்லாகிப் போகின்றது. பெண்ணுக்கெனத் தனிப்பட்ட மனம் இருக்கிறது; அவளுடைய உடலின் பரவசக் கொண்டாட்டத்திற்கென 'கிளிட்டேரிஸ்' இருக்கிறது என்ற புரிதலற்ற ஆணுடன் கூடி வாழ நேர்ந்தாலும், பெண் இன்னொரு உயிரினை உற்பத்தி செய்யக் கூடியவள் என்ற செருக்கினை 'வளர்ந்திடும் யோனி மயிர்கள்' குறியீடாக உணர்த்துகின்றன.
'உடலெழுத்து' கவிதையில் 'நீண்ட யுகங்களுக்குப் பிறகு ஃ அன்றுதான்ஃ என்னுடல் என்னிடமிருந்தது' என்ற வரிகளும் 'இரவு மிருகம்' கவிதையில் 'கோப்பை நிறைய வழியும் மதுவோடு ஃ என்னுடல் மூழ்கி மிதந்தது' என்ற வரிகளும் பெண் தன்னுடைய உடலினை அறிந்திட்ட நிலையைப் பரவசப்படுத்தியுள்ளன் பெண்ணின் அசலான மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளன. 'போரின் குறுவாள்' கவிதை பெண்ணுடலை வேறுவிதத்தில் புரட்டிப்போட்டு, உடலையே ஆயுதமாக்க முயல்கின்றது.
'கடல் ஆழத்தைக் கண்டாலும் பெண்ணின் மனத்தைப் புரிந்துகொள்ள முடியாது' என்று பெண் பற்றிய புதிர்களைக் கட்டமைத்துப் பெண்ணை மர்மப்படுத்திக்கொண்டிருக்கும் ஆண் மேலாதிக்கச் சமுதாயத்தின் மீது உடைப்பினை ஏற்படுத்த முயல்கின்றன சுகிர்தராணியின் கவிதை வரிகள். இதுவரை ஆண் மூலம் தன்னையும் தன் உடலையும் தன் பாலியல் வேட்கையையும் கண்டறிவதாகக் கட்டமைக்கப்பட்டிருந்த பெண் பிம்பம் தகர்ந்துபோய், பெண் தனது சுயேச்சையான தேர்வின் மூலம் வீறுகொள்கிறாள். உடலைப் பேசுவதன் மூலம் உடல் அரசியலை முதன்மைப்படுத்தும் சுகிர்தராணியின் கவிதைகள், பெண்ணுக்கான அசலான கொண்டாட்டத்தினைச் சாத்தியப்படுத்தியுள்ளன. இவ்வடிப்படையில் பெண்ணின் சுயபுணர்ச்சி குறித்துப் பேசும் கவிதைகள் முக்கியமானவை. பண்பாடு என்ற நிலையில் பெண் தன்னுடைய காம உணர்வை வெளிப்படையாகக் கூறமாட்டாள் என்ற பொதுப்புத்தியைச் சிதைத்துப் பாலியல் தேவையை விடுதலைக்கான முன்மொழிவாகச் சித்திரிப்பது நவீன அறம் சார்ந்தது.
சுகிர்தராணியின் கவிதை மொழி வீரியம் மிக்கது. சில இடங்களில் நீர்த்துப் போய், கூறியது கூறலாக இருப்பினும் கவிதை மொழியில் பாசாங்கு எதுவுமில்லை. அழகியல்ரீதியில் புதிய வகைப்பட்ட மொழியில் வடிவமைக்கப்பட்டுள்ள கவிதைகள், கருத்தியலுக்கு முதன் மையிடம் தந்திருப்பதனால் வடிவம், வெளிப்பாடு குறித்துப் பெரிதும் அக்கறை கொள்ளவில்லை. இயற்கையுடன் பெண்ணுடலைப் பொருத்தும் 'என்னுடல்' கவிதை இவருடைய மொழி ஆளுமைக்குச் சான்றாக உள்ளது.
குறுஞ்செடிகள் மண்டிய மலையில்
பெருகுகிறது ஒரு நதி
அதன் கரைகளில் வளைந்து
நீர்ப் பரப்பினைத் தொட்டோடுகின்றன
பால்வழியும் மரத்தின் கிளைகள்
இஞ்சியின் சுவைகூடிய பழங்கள்
மெல்லிய தோல் பிரித்து
விதைகளை வெளித்தள்ளுகின்றன
பாறைகளில் பள்ளம் பறித்தெஞ்சிய நீர்
முனைகளில் வழுக்கி விழுகிறது அருவியாய்
நீர்த்தாரைகளின் அழுத்தத்தில்
குருதி படர்ந்த வாயை நனைக்கிறது
வேட்டையில் திருப்தியுற்ற புலி
கீழிறங்குகையில்
எரிமலையின் பிளந்த வாயிலிருந்து
தெறிக்கிறது சிவப்புச் சாம்பல்
வானம் நிறமிழக்க
வலஞ்சுழிப் புயல் நிலத்தை அசைக்கிறது
குளிர்ந்த இரவில் வெம்மை
தன்னைக் கரைத்துக்கொள்கிறது
இறுதியில் இயற்கை
என் உடலாகிக் கிடக்கிறது
இக்கவிதையை வாசித்ததும் எனக்குச் சங்கப் பெண் கவிஞரான வெள்ளிவீதியாரின் பாடல் நினைவுக்கு வந்தது.
திங்களும் திகழ் வான் ஏர் தரும்; இமிழ் நீர்ப்
பொங்கு திரைப் புணரியும் பாடு ஓவாதே;
ஒலி சிறந்து ஓதமும் பெயரும்; மலிபுனற்
பல் பூங்கானல் முள் இலைத் தாழை
சோறு சொரி குடையின் கூம்பு முகை அவிழ,
வளி பரந்து ஊட்டும் விளிவு இல் நாற்றமொடு
மை இரும் பனைமிசைப் பைதல உயவும்
அன்றிலும் என்புற நரலும்; அன்றி,
விரல் கவர்ந்து உழந்த கவர்வின் நல்யாழ்
யாமம் உய்யாமை நின்றன்று;
காமம் பெரிதே; களைஞரோ இலNர்
(நற்றிணை : 335)
நிலவு ஒளிர்கின்றது; கடல் அலை கரையில் மோதுகின்றது; மலரின் மணம் காற்றில் வீசுகின்றது; அன்றில் பறவை எலும்புருகக் கத்துகின்றது; நள்ளிரவு வரை யாழ் வாசிக்கப்படுகின்றது. இவை யாவற்றையும்விட என் காமம் மிகப் பெரியது. அக்காமத்தைப் போக்கிடும் காதலன்ஃகணவன் இல்லையே என்று இரவு வேளையில் தனித்திருக்கும் பெண்ணின் காம வேட்கை அழுத்தமாக இக்கவிதையில் வெளிப்பட்டுள்ளது. சுகிர்தராணியின் கவிதையில் இயற்கைக் காட்சிகள் வருணிக்கப்பட்டு, 'இறுதியில் இயற்கை என் உடலாகிக் கிடக்கிறது' என்ற வரிகள் மூலம் உடலின் பாலியல் வேட்கை நுட்பமாக வெளிப்பட்டுள்ளது. திணை சார்ந்த சங்க கால இயற்கையான வாழிடச் சூழல் இன்று மாறித் தமிழகமெங்கும் வறண்ட பாலையாகியுள்ள நிலையிலும் சுகிர்தராணியின் கவிதை வரிகளில் இரண்டாயிரமாண்டு மனத்தின் தொடர்ச்சியைக் காண முடிகின்றது. இந்தக் கவித்துவ மனவுணர்வு மிகவும் முக்கியமானது. பெண்ணுடலை இயற்கையின் பகுதியாகக் கருதுவது தாய்வழிப்பட்ட இனக்குழுச் சமூகத்தின் எச்சமாகும்.
சுகிர்தராணியின் கவிதைகளில் வெளிப்படும் இன்னொரு முக்கியமான அம்சம், தலித்திய நோக்கிலான சமூக விமர்சனமாகும். வைதீக சமயம் பிறப்பின் அடிப்படையில் மனிதர்களைப் பிரித்துத் தீண்டாமையைக் கற்பித்திருப்பது, இந்திய சமூகத்தைப் பிடித்துள்ள பெரும்சாபக்கேடு. அதிலும் தலித்தாகப் பிறந்த பெண்ணின் பிரச்சினைகள் ஒப்பீட்டளவில் தலித் ஆணைவிடக் கூடுதலானவை. அவளுடைய உடலின் மீது கணவன் மட்டுமின்றி, ஆதிக்க சமுதாயமும் தொடர்ந்து வன்முறையைச் செலுத்துகின்றது. இன்னொரு புறம் பொருளியல் சுரண்டலின் ஆதிக்கம் வலுவாக உள்ளது. பால் ரீதியில் தலித் பெண்ணின் குரல் சமூக அடித்தளத்தில் பலவீனமாக ஒலித்துக்கொண்டிருக்கின்றது.
கிராமத்தில் சமூகச் செயற்பாட்டில் கடைசி ஆளாக ஒதுக்கப்படும் 'தலித்துகள்' 'முதல் ஆளாகஃ இழவுக்குப் பறையடிக்க அழைக்கப்படுவது குறித்து 'அமைப்பு' கவிதையில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. ஊருக்கு ஒதுக்குப் புறமானதாகக் கருதப்படும் பறையர் தெருவை ஊருக்கு 'முதலில் இருப்பதாகக் கவிஞர் மாற்றியமைக்கின்றார். தலித் உடல்களைக் கடின உழைப்பில் ஈடுபடுத்திப் பொருளாதார வளம் பெறும் ஆதிக்கச் சாதியினர் மேல் ஜ் கீழ், சுத்தம் ஜ் அசுத்தம், கடைசி ஜ் முதல் போன்ற சொல்லாடல்கள் மூலம் தொடர்ந்து தீண்டாமையைத் தக்கவைத்திருப்பதும் அதற்கெதிரான ஆவேசமான குரலும் உக்கிரமாகக் கவிதையில் வெளிப்பட்டுள்ளன.
செத்துப்போன மாட்டைத்
தோலுரிக்கும்போது
காகம் விரட்டுவேன்
வெகு நேரம் நின்று வாங்கிய
ஊர்ச் சோற்றைத் தின்றுவிட்டு
சுடுசோறெனப் பெருமை பேசுவேன்
தப்பட்டை மாட்டிய அப்பா
தெருவில் எதிர்ப்படும்போது
முகம் மறைத்துக் கடந்துவிடுவேன்
அப்பாவின் தொழிலும் ஆண்டு வருமானமும்
சொல்ல முடியாமல்
வாத்தியாரிடம் அடி வாங்குவேன்
தோழிகளற்ற
பின் வரிசையிலமர்ந்து
தெரியாமல் அழுவேன்
இப்போது
யாரேனும் கேட்க நேர்ந்தால்
பளிச்சென்று சொல்லிவிடுகிறேன்
பறச்சி என்று
சாதிரீதியான ஏற்றத் தாழ்வு குறித்து ஆவேசமான மனநிலையைக் கவிதை பதிவுசெய்துள்ளது. 'பறச்சியே தடா பனத்தியேதடா' என்ற சித்தரின் கலகக் குரல் சுகிர்தராணியிடம் வேறு தொனியில் வெளிப்பட்டுள்ளது.
இன்று கவிதை எழுதிக்கொண்டிருக்கும் பெண் கவிஞர்களில் பலருடைய கவிதைகளை ஆண் கவிஞர்களால் எழுதிட முடியும்; பெரிய அளவில் பால் வேறுபாடுகள் இல்லை. தலித்துகள் பற்றிய சுகிர்தராணியின் கவிதையை யார் வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால், பெண்ணுக்கே உரித்தான துக்கங்களையும் உடல்ரீதியான வேட்கையையும் கவிதையாக்கியதில் பெண் என்ற நிலையில் தனித்த அடையாளத்துடன் சுகிர்தராணியின் கவிதைகள் விளங்குகின்றன. அவை பெண் மொழியின் மூலம் ஆண் - பெண் உறவில் நிலவும் சமத்துவமின்மை அரசியலைப் புதிய வடிவில் முன்வைக்கின்றன் மரபு வழிப்பட்ட தமிழ்ப் பெண் பிம்பத்தைக் கேள்விக்குள்ளாக்குகின்றன. காலங்காலமாக ஒடுக்கப்பட்டுள்ள பெண்களின் வேதனையையும் சீற்றத்தையும் வெளிப்படுத்திடப் பெண்ணுடலையும் உடல் வேட்கையையும் முன்னிறுத்திடும் சுகிர்தராணியின் கவிதைகள், நவீனப் பெண்ணின் விடுதலைக் குரல்களாக வெளிப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment