Tuesday, March 14, 2017

பெண்மையை போற்றுவோம்!!

    ஒரு துளி
    உதிரத்தை கூட
    உருவம் செய்து
    குழந்தையாய் தருபவள்  பெண்!!!

    செலவு செய்தாலும்
    எதோ ஒரு வகையில்
    சேர்த்து வைப்பவள் பெண் ...!

    தங்கமாய் வாங்கினாலும்
    தன் மகள்
    தாலிபாக்கியம் பெற
    தந்து விடுகிறாள் பெண்!!!

    புடவை வாங்கினாலும்
    புருஷன் தகைமைக்கு
    பெருமை சேர்க்கிறாள் பெண்...!!!

    தன் வயிறு காய்ந்தாலும்
    மார்பிலே பால்கொடுத்து
    மகனை வளர்க்கிறாள் பெண்...!!!

    கணவன் கயவன்
    என்றாலும்
    காரணம் இவள் என்று
    கெட்ட பெயர்
    வாங்கிக்கொள்கிறாள் பெண் ...!!!

    கொண்டவன்
    குடிகாரன் ஆனாலும்
    குடித்துவிட்டு அடித்தாலும்
    குடும்பத்தை காக்கிறாள் பெண்...!!!

    பசி என்று
    வரும் பிள்ளைக்கு
    பச்சை தண்ணீராவது
    தந்து விடுவாள் பெண்...!!!

    எப்போதும்...
    பெருமையை
    பிறருக்கு கொடுத்து
    தான் மட்டும்
    சிறுமை பெறுகிறாள் பெண்...!!!

No comments:

Post a Comment

கணவன் - மனைவி உறவைவிட உன்னதமான உறவு உண்டா?

கணவனுக்குத் தலைவலி. நெற்றியை அழுத்திப் பிடித்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்திருக்கிறான். மனைவி கொஞ்சம் தைலம் எடுத்து வந்து, கணவன் அருகில் அம...