Tuesday, February 07, 2017

கடைசிவரை...

அவர்கள்
நெஞ்சுக்குள்
ஒரு பொறி
எப்போதும்
எரிந்துகொண்டிருக்கிறது.


நம்பிக்கையின்
காற்று வீசும்போது
பொறி நெருப்பாகிறது.


ஒவ்வொரு நெஞ்சமாய்ப்
பற்றி எரிகிறது.


ஒட்டுண்ணிகள்,
அதில் பொசுங்கிச்
சாம்பலாவார்கள்


அது சமைப்பதற்கான தீ...
புதுயதோர் சமுதாயம்
படைப்பதற்கான தீ...

No comments:

Post a Comment