Wednesday, July 06, 2016

மனைவி...



கவிஞர் முனைவர் அன்புசிவா 

நான் தேடிச்சுற்றிய
பத்தாவது கிரகம்
ஓடித்திரிந்த
ஒன்பதாவது திசை
எழுதி  மகிழ்ந்த
எட்டாவது ஸ்வரம்
மகிழ்ந்து ருசித்த
ஏழாவது சுவை
என் அணுவிலும் கலந்த
ஆறாவது பூதம்
ஆசையாய் நான் படித்த
ஐந்தாவது வேதம்
நல்லதையே சொல்லும்
நான்காவது காலம்
நல்வழி காட்டிய
மூன்றாவது விழி
என்னை வளர்த்த
இரண்டாவது தாய்
எல்லாம் ஆகிய
என் மனைவி

No comments:

Post a Comment

கணவன் - மனைவி உறவைவிட உன்னதமான உறவு உண்டா?

கணவனுக்குத் தலைவலி. நெற்றியை அழுத்திப் பிடித்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்திருக்கிறான். மனைவி கொஞ்சம் தைலம் எடுத்து வந்து, கணவன் அருகில் அம...