பழனி முருகன் கோயில் ‘பள்ளர்’ குல மக்களுக்கு சொந்தமானது என்பதையும் உணர்த்தும், பள்ளர்களின் பண்பாட்டையும், வரலாற்றையும் பறைசாற்றும் உரிமைப் பட்டையமான பழனிச் செப்பேடு ஒரு பள்ளர் குடும்பத்தாரிடம் இருந்து கிடைக்கப் பெற்றுள்ளது. இது பழனி ‘தேவேந்திர குல வேளாளர்’ சங்கத் தலைவர்களான பால சமுத்திரம் சிலுவை முத்துத் தேவேந்திரர், பழனி அடிவாரம் ஆசிரியர் தண்டபாணித் தேவேந்திரர் அவர்களால் அருங்காட்சியகக் காப்பாட்சியர் எசு.சுலைமான், தமிழ்நாடு தொல்பொருள் துறை உதவி இயக்குனர் எசு.அரிகரன், எசு.போசு ஆகியோரிடம் கொடுக்கப் பட்டது. இப்பலனிச் செப்பேடு பற்றிய செய்திகள் 30 .04 .1995 அன்று மதுரைப் பதிப்பு தினமணி தமிழ் நாளிதழிலும், மதுரைப் பதிப்பு இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழிலும், 16 .06 .1995 அன்று கோயமுத்தூர் இந்து ஆங்கில நாளிதழிலும் வெளி வந்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
பழனி
செப்புப் பட்டயத்தின் காலம் கி.பி.1528 ஆகும்.
இப்பட்டயத்தின் உயரம் 52 .5 செ.மீ., அகலம்
30 .5 செ.மீ, செப்புப் பட்டயத்தில்
உள்ள செய்திகள் வருமாறு:
கடவுள்
வாழ்த்து
வரி
1 – 3
“உ ஆறுமுகன் துணை
கூறுடை
யாளும் வேத குணப்பெறும் குன்றும்
ஞான
பேறுடை
பழனி யன்னல் பெயறது மறுவி யெங்கள்
ஆறுமா
முகவன் வயிகுள நகரமு மன்று தொட்டு
வீரதலப்
பழனியென்றே விளங்கிய துலகம் மூன்றும்”
முருகன்
வாழ்த்து
வரி
3 – 8
“உ வைக நீடுக
மாமழு மன்னுக
மெய்வி
ரும்பிய அன்பர் விளங்குக
சைவ
நன்னெறி தான்தழைத் தோங்குக
தெய்வ
வெண்திரு நீறு சிறக்கவே
கருணைபொழி
திருமுகங்க ளாரும் வாழி
கரகமலப்
பன்னிரண்டு கையும் வாழி
இருசரண
மென்றலைமேல் நாளு மோங்க
இந்திரா
பதவிக் கப்பா லென்றும் வாழி
மறுபனியும்
பைங்கடப்பன் தாருமாறும் வாழி
மயில்பரி
சேவலக்கொடியும் வாழி
மடந்தைதன்
மயிந்த வாழி
மாதவன்
மருகா வாழி வாழி
அடைந்தவர்
துணைவா வாழி
அடியவர்க்
கெளியாய் வாழி
திடம்புயன்
வேலா வாழி
தேவரா
ருயிரே வாழி
படந்தபோர்
அசுரர் கூற்றன்
பரமனே
வாழி வாழி”
முருகன்
மெய்க்கீர்த்தி
வரி
8 – 11
“உ ஸ்ரீபுற தகன
பரமேஷ்வரன் குமாரன்,அரு பரவி
அமரர்
சிறை மீட்ட தேவர்கள் தேவன்,தெய்வலோக நாயகன்
அகிலாண்ட
கோடி பிரமாண்ட நாயகன், கோகநகனை
சரசமாடி
குட்டி குடுமி நெஷ்ட்டை போக்கி கோல பரமபதம்
கொடுத்த
குமார கெம்பீரன்”
முருகன்
வீரம்
வரி
11 – 13
“கொக்கறு வரையாழி கொட்ட ராவுத்தன்
வக்கிரமிகு
அசுரேசர் வடநீரொப்பன்
உக்கிர
மயிலேறிவரும் உத்தண்ட தீரன்,
பக்கரைப்
பகட்டரக்கர் பட்டிட படைக் களத்தில்
கொக்கறித்துடல்
கிழித்த குக்குடக் கோடிக் குமாரன்”
முருகன்
/ மெய்க்கீர்த்திகள்
வரி
13 – 18
“கூளி கொட்ட குகைப்பிசாசுகள்
தொக்கநிற்ற
தாளமொற சூரன் மாழுவதற்க்கு
பாரிய
நீலிய கச்சை கட்டி
பாரவே
லெடுத்த பராக்கிரம சேவுக தீரன்
அசுரர்
குலைகாரன், அமராபதி காவலன்,
தோடு
சிரி காதினான்,தோகைமயில் வாகனன்,
சீதரன்
திருமருகன், சிவா சுப்ரமணியன்,
சண்டப்பிரசண்டன்,
அன்பர் கொரு மிண்டன்,
உத்தண்ட
தேவாதிகள் கண்டன்,
ஆறாறு
நூறாறு அஷ்ட்ட மங்கலம்
ஆவினங்குடி
பழனிக்கதிபன்,
பகுத்தப்
பிரியன், பகுத்தச் சீலன்,
பார்வதி
புத்திரன்,விக்கின விநாயகன்,
தெய்வ
சகோதரன்,எல்லாத் தேவர்க்கும்
வல்லபனாகிய
ஸ்ரீவீரப் பழனிமலை சுவாமியார்
திருவுளப்படிக்கு
வீரவாகு தேவர் அருளிப்படல்”
தமிழகத்தில்
வடுகர் ஆதிக்கம்
வரி
19 – 26
ஸ்ரீமாகமண்டல
ஈஷ்பரனாகிய அரியதழ விபாடன் பாசைக்குத் தப்புவராய கண்டன மூவராய கண்டன் கண்ட நாடு கொண்டநாடு
குடாத மண்டலீகர் கண்டன்,துலுக்கர் தளவிய பாடன், துலுக்கர் மோகந்தவிர்ந்தான் , ஒட்டியர் தளவியபாடன், ஒட்டிய மோகன்த தவிர்த்தான், செரமண்டல பிறதாபனாசாரியான், தொண்டமண்டல பிறதாபனாசாரியான் ஈழ யாழ்பாணம் எம்மண்டலமும்
திரை கொண்டருளி துலாத கம்பம் போட்டு அசையா மணி கட்டி ஆளும்
பிரதாப ருத்திரனான வங்களர் சிங்கிளர் சீனகர் சோனகர் ஆரிய ரொட்டியர் பற்பலர்
மதங்கள் மச்சலர் குச்சலர் மாளுவர் மலையாளர் கொங்கர் கலிங்கர் கருனாடர் துலுக்கர் மறவர் மராத்திகரென்னப்பட்ட பதினென் பூமியும் ஏழு தீவும் சூழ்ந்த
நாகலோக பெருந்தீவில் நரபதியாகிய பூலோக புரந்தர பூருவா பச்சிமா தெச்சனா ருத்திர சத்த சமுத்திராபதி
வடுக
அரசர் மேலாண்மை
வரி
26 – 31
ஸ்ரீவிசயநகரத்தில்
வீர சிம்மாசனத்தில் பிரதாப ருத்திரான புறவுடதேவ மகாராயர்,புக்கராயர்,அறிசங்கு சமளுவ ராயர்,கயிலேஷ்பர ராயர் டில்லி ஈஸ்வர ராயர், ராமபான ராயர், நரசிங்க ராயர், வீரவசந்த ராயர், புருசோத்தம ராயர், மல்லிகாருச்சுண ராயர், மகாதேவா ராயர், சீரங்க தேவராயர், ஆனைகொத்தி வெங்கிட ராயர், ஸ்ரீராம் ராயர், பெறதிம்ம ராயர், சிக்கு ராயர், இவர்கள் பிருத்வி ராச்சியாபாரம் பண்ணி அருளாநின்று ஓதி உணர்ந்து உலகம்
முழுவதும் ஒரு குடைக்குள்ளாண்டு இப்படி
துஷ்ட்ட நிற்கிற சிஷ்ட்டை பரிபாலனம் செய்து
மதுரை
நாயக்கர்கள் ஆட்சி பட்டயத்தின் காலம்
வரி
31 – 38
இருநூற்றி
இருவத்தினாலு காணவாய்க்கும், முப்பத்திரெண்டு மணியகாரருக்கும் எழுவத்திரெண்டு பாளையக்காரருக்கும் அதிபதியாகிய ராய ராணுவங்களுக்கு கர்த்தரான
நாகப்பா நாயக்கர் குமர கிஷ்ணப்ப நாயக்கர்
கஸ்தூரிரங்கப்ப நாயக்கர் ரங்ககிஷ்ணப்ப நாயக்கர் திருமலை நாயக்கர் இவர்கள் நான் மாடக் கூடலில்
மதுரை மாநகரில் வீற்றிருந்தருளி திக்கு விசையம் செய்து செகத்தம்பம் நாட்டி அசையா மணி கட்டி ஆறிலொன்று
கடமை கொண்டு அருள் பெருக அன்பு கூர்ந்து யாகம சாலையும் அந்தணர்
வெளிவியும் தண்ணீர் பந்தலும் தர்ப்ப சாயூச்சமும் இப்படி தருமத்துக்குள்ளாய் நடந்து வருகிற சாலியவாகனம் சகார்த்தம் 1450 கலியுக சகார்த்தம் 4629 செல்லா நின்ற துன்முகி வருஷம் தையி மாசம் 19 தேதி
சுக்குர வாரமும்,சதுர்த்தியும் உத்திர நட்செத்திரமும் பெற்ற சுபதினத்தில் கொங்கு வய்காபுரி நாட்டில் சண்முகநதி தீர்த்த வாசமாய் பழனிமலை மேல்
தெய்வேந்திர
வம்சத்தார்
பட்டயம்
சாட்சிகள்
வரி
38 – 44
ஆறு
காலமும் அனந்த வடிவுமாய் மகாபூசை கொண்டருளிய சர்வ பரிபூரணச் சச்சிதானந்த
பறபிரம மூர்த்தியாகிய பாலசுப்பிரமணிய சுவாமியார் சன்னதி முன்பதாய் இஷ்தானியம் சின்னோப நாயக்கர் சரவணை வேல் தபராசபண்டிதர் பழனியப்ப
நம்பியார் அறவளர்த்த நம்பியார் பாணிபாத்திர உடையார் பழனிக்கவுண்டன் தலத்து கணக்கு விருமையான பிள்ளை குமாரவேலாசாரியார் மர்ருமுண்டாகிய தானம் பரிகலத்தார் முன்பதாயி தெய்வேந்திர வம்மிஷத்தார்கள் அனைவோருக்கும் கூடி தெய்வேந்திர மடம்
ஆலயம் பழனி மலை உடையாருக்கு
சத்திய சாட்சியாய் எழுதி கொடுத்த தரும சாதினமாகிய தாம்பூர
சாதீன பட்டையம்
தெய்வேந்திரர்
பிறப்பு – வரலாறு
வரி
44 – 50
தெய்வேந்திர
பல்லன் பிறப்பு, அந்திர் பத்திய பாதாள திருலோகத்தில் பிரவாகிய அண்டம் அடுக்கு தட்டு தாபறம் சங்கம துருவம் சந்திறாள் சூரியாள் அஷ்ட்குல பருவதம் சத்தசாகரம் மகாமேரு பருவதம் சத்த கன்னியர் தேவர்கள்
முனிவர்கள் முதலாகிய எறும்பு கடை யானை முதல்
எண்பத்து நான்கு நூறாயிரம் சீவ செந்துக்கும் பரமசிவனும்
பார்வதாதேவியும் படியளந்து வருகிற போது பூலோகத்திலுள்ள சீவ
செந்துக்களுக்கும் பரமேஷ்வரி செந்நெல் பூசனம் குடுக்க திருவுளத்தில் நினைந்து பரமேஷ்வரிடத்தில் சொல்ல பரமேஷ்வர் தேவர்களை அழைத்து ஆலோசிக்க விசுவகருமாவானவர் சொல்லுவார் சுவாமி தேவரீர் அனுகிரகத்தினாலே ஒரு குழந்த உற்பத்தி
செய்தால் அவனாலே பூலோகத்தில் சகலமான செந்நெல்லும் உற்பத்தியாகும் என்று சொன்னார்.
வள்ளிக்
கோடியில் குழந்தை வள்ளல் மகன்
வரி
50 – 55
ஈஷ்வரன்
மனிக்கான தியானத்தினாலே முகாரவிந்தத்தில் வேர்வை தோன்றி அந்த வேர்வையை வழித்து
வில் எரிய செலத்துடன் கலந்து
மாடக்குளத்தில் வள்ளிக் கொடியில் தங்கி கெர்ப்ப உற்பத்தியாகி குழந்தையாக அழுதது. அழுகிற சத்தமுமிவள் கேட்டு சவாமி இந்த அத்துவான ஆருன்னிய
குளக்கரை பள்ளசாருவில் குழந்தைக் குரலேதென்று கேட்க சுவாமி சொல்லுவார் வாரும் பெண்ணே பூலோகத்தில் சகலமான செந்நெல்லும் கந்தமூல பாலதிகளும் உண்டாக்கும்படியாக நீ ஒன்னபடிக்கு ஒரு
குழந்த உற்பத்தி செய்தோமென்று சொல்ல
ஈசுவரி
குழந்தை வள்ளல் மகனுக்கு முப்பால் கொடுத்தது
வரி
55 – 59
ஈஷ்வரி
மனமகிழ்ச்சி கூர்ந்து குழந்தையை எடுத்து முப்பால் கொடுத்து தகையாற்றி தெய்வேந்திரனை அழைத்து தெய்வேந்திரன் கையில் ஒரு காராம் பசுவும்
கொடுத்து வள்ளல் மகனைப் பார்த்து வாராய் மகனே உன்னை எங்களை
பணிவிடைக்கு பிள்ளையாக உண்டு செய்தோம். நீ தெய்வலோகத்துக்கு போய்
இந்த காராம் பசுவின் பாலைச் சாப்பிட்டுக் கொண்டு சகலமான செந்நெலு உண்டு செய்வாயென்று கட்டளை இட்டார்.
தெய்வேந்திரனுக்கும்,இந்திராணிக்கும் பிள்ளையாய்
வளர்ந்து வருதல்
வரி
59 – 61
கட்டளைப்
படியே தெய்வலோகத்துக்குப் போய் காராவின் மூன்று
முலைப்பால் கறந்து ஈஷ்வரிக்கும் தெய்வேந்திரனுக்கும் கொடுத்து தானுமொரு முலைப்பால் சாப்பிட்டு கொண்டு தெய்வேந்திரனுக்கும் இந்திராணிக்கும் பிள்ளையாக வளர்ந்து வருகிற நாளில்
வள்ளல்
மகன் பயிர் செய்தல்
வரி
61 – 65
தெய்வேந்திரனுடைய
சலக்க பிறவிடையில் நீரோடையும் பல்ல சாற்வும் கண்டு
அதில் சிறிது வயல் வரம்புகள் உண்டு
செய்து குச்சி கொளுகளை ஊன்றியும், சில சேறுண்டு செய்தும்,
தண்ணீர் விட்டுக் காப்பாற்றி வருகிற நாளில் குச்சி கோள்களெல்லாம் தளைத்து மாவிடை மரவிடை தென்னை கமுகு பலா எலுமிச்சை மஞ்சளிஞ்சி
இப்படி அனந்த மற்ச வர்க்கமாச்சுது.
வாளால்
மகனின் முதல் செந்நெல்
வரி
65 – 70
இந்த
சேத்திலென்ன விரையை போடுவோமேன்று ஈஷ்வரனை நோக்கி முறையிட்டான். ஈஷ்வரன் கருணை அன்பினால் அன்னைங்கள் புறாக்கள் முதலான பச்சிகளெல்லாம் இரையெடுத்து வள்ளல் மகன் தோப்பி விளையாடுகிறபோது
அன்ன பச்சியின் மூக்கில் நஞ்சு விரையானது ஒட்டியிருந்து வதியில் வீழ்ந்து வெள்ளி குருத்து போல முளைத்தது. முறைத்த
நஞ்சு விரையின் பயிர்களைக் கண்டு தண்ணீர் விட்டு காப்பாத்தி வருகிற நாளையில் அமுர்தங்கொண்டு வேரிலே நஞ்சை போட்டு முடியிலே சென்னேல்லாக விளைந்தது.
வள்ளல்
மகன் முதல் செந்நெல் அரிசியை ஈசுவரனுக்குப் படைத்தல்
வரி
70 – 74
விளைந்த
செந்நெல்லை அறுத்து சிறிது அரிசி உண்டு செய்து ஈஷ்வரனுக்கு கொண்டு டோறி பால் கலசத்தில்
சிறுது செந்நெல்லரிசியும் போட்டு கந்தமூல பாலாதிகளுடன் பால்க் கலசத்தை வையித்து நமஷ்க்கரித்தான். ஈஷ்வரன் கண்டு வாரும் வள்ளல் மகனே என்றைக்கும் சுத்த
சூச்சமாய் வருகிறவன் இன்றைக்கி சேரும் சகதியுமாய் வந்தாயென்று கேள்க்க மவுனமாய் தலை கவிழ்ந்து நின்றான்.ஈஷ்வரன் பால் கலசத்தை பார்க்கும்
போது அன்ன மலராய் நிறைந்து
இருந்தது.
முப்பது
முக்கோடி தேவர்களுக்கும் செந்நெல் சோறு படைத்தல்
வரி
74 – 77
நிறைந்த
அன்ன மலரை முப்பத்து முக்கோடி
தேவர்களுக்கும் கந்தமூல பாலாதிகளுடன் செந்நெல் போசனம் செய்வித்து வள்ளல் மகனை அழைப்பித்து வாராய்
வள்ளல் மகனே மேடு பல்ல
மண்ணறாய் நிரவி செந்நெல்லுண்டு செய்வாய் என்று ஈஷ்வரன் சொல்ல வள்ளல் மகன் சொல்வது சுவாமி
மேடு பள்ளம் மொன்றாய் நிறைவினால் லோகம் கட்டு கொள்ளாதென்றான்.
சேர,சோழ,பாண்டிய மூவேந்தர்களை
அழைத்து செந்நெல் சோறு படைத்தல்
வரி
77 – 81
அதனாலவைன
பூலோகத்துக்கு அனுப்ப வேணுமென்று பூலோகத்து ராசாக்களாகிய சேரன்,சோழன் பாண்டியன் மூவராசாக்களையும் வரவழைத்து அவர்களுக்கு கந்தமூல பாலாதிகளுடன் செந்நெல் போசனம் செய்வித்து பாக்கிலை கொடுத்து ஈஷ்வரன் முன்பதாக அழைத்து வந்தார்கள். மூவராசாக்களும் தேவலோகத்தில் கந்தமூல பாலாதிகளுடன் செந்நெல் போசனம் மருந்தினபடியினாலே அனந்தம் தோத்திரங்கள் செய்து சொல்வார்கள்.
வள்ளல்
மகனை மூவேந்தர்கள் பூலோகத்துக்கு அழைத்து வருதல்
வரி
81 – 86
சுவாமி
எங்கள் தேச பூலோகத்திலுள்ள சீவசெந்துக்களுக்கும்,தேவர்களுக்கும் கம்பு,சோளம்,கேவற முன்னை முஷ்ட்டை
தவிர, வேறே ரசவர்க்கம் இல்லாதபடியினாலே
கந்தமூல பாலாதிகளுடன் செந்நெல்லுண்டு செயும்படியாக வள்ளல் மகனை பூலகத்துக்கு அனுப்பிதருள
வேணுமென்று அனந்தம் தோத்திரங்கள் செய்தார்கள். அப்போது ஈஷ்வரன் கருணை மகிழ்ந்து விருமா விஷ்ட்டுன்னு தெய்வேந்திரன் விசுவகர்ம அனுப்ப வேணுமென்று சலமான விருதுகளுடனே சென்னெல் விரையும் கந்தமூல பாலதிகளும் மலைதகத்தான் என்கிற மண்வெட்டியும் குடுத்து பூலோகத்துக்கு அனுப்புகிற போது
வள்ளல்
மகன் தெய்வலோகத்திலிருந்து செந்நெல கொண்டு வருதல்
வரி
86 – 89
செந்நெல
எல்லாம் பூலோகத்துக்கு போறதில்லை என்று சிறகு முளைத்துப் பரவையாச்சுது. பரந்த செந்நெல்லைப் பிடித்து பொன் ஊசி கொண்டு
மூக்குப்பூரி பொதி பிடித்து தெய்வேந்திரனுடைய
வெள்ளை யானையின் பேறில் போட்டு மூவராசாக்களுடன் கூட்டி பூலோகத்துக்கு அனுப்பினார்.
தெய்வ
கண்ணாளர் ஏர் செய்து கொடுத்தல்
வரி
89 – 94
பூலகத்தில்
நாலு திக்கும் நீரோடையும் பள்ளச்சாற்வும் கண்டு அதில் சிறிது வயல் வரம்புகளுண்டு இதை
சேறு செய்ய உழவு முஷ்த்தேதி வேணுமென்று
தெய்வ கன்னாளனாகிய மனு ஆசாரி மகாசாரி
இருபேர்களிடத்திலும் சொல்ல அவர்கள் இருபேரும் அனந்தம் ஏர்ச் சோடினை செய்து குடுத்தார்கள். வள்ளல் மகன் அதிக உபசாரத்துடன்
வாங்கி தோளில் வைத்து கானகத்தில் நுழைந்து கரடி புலி யாழி
சிம்ம இவையெல்லாம் ஓட்டி வந்து ஏரில் கட்டி உழுகிற போது மிருகங்களெல்லாம் அவஷ்த்தைப்
பட்டு ஈஷ்வரனை நோக்கி முறையிட்டதுகள்
உழுவதற்கு
தெய்வலோகத்திளிருந்து மாடு,எருதுகள் கொண்டு
வருதல்
வரி
94 – 100
பரமேஷ்வரன்
நந்தி தேவரை அழைத்து வள்ளல் மகன் பூலோகத்தில் செந்நெல்லுமுண்டு
செய்யும்படியா சில நந்தி வாகனம்
உண்டு செய்து குடுக்க வேணுமென்று சொல்ல நந்தியேஷ்வரன் மகனக்கான தியானத்தினாலே வெள்ளைப்பசு வில்லைப்பசு காராம்பசு கவுலைப்பசு பில்லைப் பசு சிவலைப் பசு
இப்படி அனந்தம் பசுக்களை உண்டு செய்தார். அப்போது தேவர்கள் மகிழ்ந்து அந்த பசுக்களிடமா பிறந்த
மயிலனன் சன்னவான் முகிலனன் இந்த இரண்டெருத்துக்கு மின்சல்லி
, பின்சல்லி வீரவெண்டயம் களப கஷ்த்தூரிகளணிந்து வாரீர் நந்தி
தேவர்களே நீநல் பூலோகத்துக்குப் போய் வள்ளல் மகனிடமாயிருந்து
செந்நெல்லுண்டு செய்து சங்கிராந்தி முதலான நோன்புகளும் கொண்டாடி வருவீர்களென்று பூலோகத்துக்கு அனுப்ப
வள்ளல்
மகனின் மாட்டுப் பொங்கல்
வரி
100 – 102
பசுக்களெல்லாம்
பூலோகத்துக்கு வந்ததை வள்ளல் மகன் கண்டு சந்தோஷத்துடன்
ஓட்டி வந்து மட்டானதம் பிறான மல்லாண்டய்யனார் வைத்து பச்சை பாளை போட்டு தூபம்
குடுத்து இரண்டு எருதையும் ஏரில் கட்டி உழுது சேறு செய்து நாத்துப்
பாவி உழவுத் தொண்டி கணகழவு செய்து வருகிற நாளையில் நாத்துகள் முளைத்து நடவு பக்குவமாய்ச்சிது.
இரம்பைகள்
நடவு செய்ய வருதல்
வரி
102 – 107
இந்த
நாத்துகளை பிடுங்கி நடவு போட பெண்கள்
வேணுமென்று மூவராசாக்களிடத்தில் சொன்னான். மூவராசக்களும் தெய்வலோகத்து செந்நெல்லானபடியினாலே இவ்விடத்தில் பருவம் தெரியாதென்று ஈஷ்வரனிடத்தில் சொன்னார். ஈஷ்வரன் உபைய ரம்பைகளை அனுப்பினார்.
ரம்பைகள் மூவராசாக்களிடமே வந்து எங்களை அழைத்ததென்னவென்று கேட்க வாரும் தெய்வ ரம்பைகளே வள்ளல் மகன் தெய்வலோகத்திலிருந்து செந்நெல் விரை
கொண்டு வந்து நாத்துப்பாவி இருக்கிறபடியால் அதை பிடுங்கி நடவு
போட்டால் உங்களுக்கு முத்து போடுகிறோமென்றார்.
இரம்பைகளுக்கு
நடவு கூலியாக முத்துக்கள் கொடுத்தல்
வரி
107 – 111
நல்லதென்று
வயலில் சென்று நாத்து பிடுங்கி முடி முடிந்து குப்பம்
சேர்த்து வயலில் நாத்து பங்கும் போது வள்ளல் மகன்
பேருக்கு இரண்டு மூடி போட்டான். சுந்தர
ரம்பை தெய்வ ரம்பைக்கு பின்னையும் ஒவ்வொரு முடி நாத்து அதிகமாய்
போட்டான். பெண்களெல்லாம் நடவு முடிந்து கால்
கை சரீரம் சுத்தி செய்து கொண்டு மூவராசாக்களிடமே வந்து வாங்கிக் கொண்டு தெய்வலோகம் போய் விட்டார்கள்.
சுந்தரரம்பை
தெய்வரம்பை பூலோகத்தில் தங்குதல்
வரி
111 – 113
சுந்தர
ரம்பை தெய்வ ரம்பைக்கு பின்னையும் ஒவ்வொரு முடி நாத்து அதிகமானபடியினாலே
பின் தங்கி வந்தார்கள். மூவராசாக்களும் கண்டு ஏதோ வள்ளல் மகன்
பேரில் இச்சை கொண்டு நின்றார்களென்று ஆலோசித்து ஈஷ்வரனிடத்தில் அறுக்கை இட்டார்கள்
தெய்வேந்திரனின்
வெள்ளை யானையின் பேறில் பட்டணம் மெறவனை வருதல்
வரி
113 – 117
ஈஷ்வரன்
இந்த ரெண்டு பெண்களையும் வள்ளல் மகனுக்கு கல்யாணம் செய்யும்படியா உத்தரவையும் கொடுத்தார். உத்தரவுப்படியே பந்தல் போட்டு மேல் கட்டு கட்டி
தென்னை,கமுகு,கதழி நிறுத்தி புஷ்ப்பம்
கொண்டலங்கரித்து மணவறை சோடித்து ஆணை அரசாணை வைத்து
வள்ளல் மகனுக்கு வஷ்த்திர பூஷண களப கஷ்த்தூரிகளணிந்து
தெய்வேந்திரன் வெள்ளை யானையின் பேறில் படனம் மெறவனை செய்து உபைய ரம்பைகளிருவருக்கும் மாணவரைக் கோலம்
செய்யச் சொன்னார்கள். அப்போது வள்ளல் மகன் சொன்னது.
வள்ளல்
மகன் ரம்பைகளை மணம் செய்ய வரையறை
வரி
117 – 122
வருமாய்யா
மூவராசாக்களே இந்த பெண்கள் தெய்வலோகத்து
உபைய ரம்பைகளானபடியினாலே சந்தேகம் தெளியும்படிக்கு ஓமக் குண்ட அக்கினியை
அள்ளி மணவறையை மூன்று தரம் வலமாக வந்து
பொங்கலடுப்பில் போட்டு செந்நெல் விரையை கையினால் தேய்த்து பச்ச கலசத்தில் பொங்கல்
வைத்து மணவறை அரசாணிக்கு நெவேத்தியம் செய்தல் கோரையுடுத்தி மணவறையில் வைத்து மங்கிலியம் தரிப்பேன். இல்லாதிருந்தால் மனவரையடியில் கம்பி புடவையுடுத்தி கைப்பிடிப்பதேயல்லாமல் மணவறை ஏத்தக் கூடாது என்றான். மூவராசக்களும் மெத்தக் கிலேசம் கொண்டு இருந்தார்கள்.
இரம்பைகள்
வரையறையை ஏற்று மணம் முடித்தல்
வரி
123 – 126
அப்போது
ரம்பைகள் பார்த்து வாருமைய்யா மூவராசக்களே நீங்களொன்றுக்கும் யோசனை செய்ய வேண்டாம். அந்தப்படியே செய்து கொடுக்கிறோமென்று ஓமக் குண்ட அக்கினியை
அள்ளி மணவறையை மூன்று தரம் வலமாக வந்து
பொங்கலடுப்பில் போட்டு செந்நெல் விரையை கையினாலே தேய்த்து பச்ச கலசத்தில் பொங்கல்
வைத்து மணவறை அரசாணிக்கு நெவேத்தியம் செய்தார்கள்.
சோழ,பாண்டிய ராசாக்கள் ரம்பைகளை தத்தெடுத்தல்
வரி
126 – 128
மூவராசாக்களும்
அதிக சந்தோஷம் கொண்டு மூத்த பெண்ணாகிய சுந்தர ரம்பையை சோழ ராசா என்
சோழிய பிள்ளை என்றெடுத்துக் கொண்டார். இளைய பெண்ணாகிய தெய்வ
ரம்பையை பாண்டிய ராசா என் பாண்டியப்
பிள்ளை என்றெடுத்துக் கொண்டார்.
வள்ளல்
மகனுக்கு தெய்வேந்திரன் 1என்று பெயர் கொடுத்தல்
வரி
128 – 129
வள்ளல்
மகனுக்கு தெய்வேந்திரனென்று பெரும் குடுத்து
தெய்வேந்திரன்
திருமணம்
வரி
129 – 133
பொன்முடி
பூமுடி தரித்து ரம்பைகளிரு பேருக்கு மணவறைக் கோலம் செய்து கங்கணம் தரித்து பதினாறு சீரும் பாங்குடன் வைத்து தெய்வச் சபையை தரிசனம் செய்து திருமங்கிலியம் தரித்து பதினெட்டாயுதம் பாங்குடனெடுத்து புரவியிலேறி பூலோகம் தன்னில் மூவராசக்களுடன் பட்டணம் வலமாக வந்து வந்த பேர்க்கெல்லாம் பாக்கிலை
கொடுத்துக் கொண்டு இருக்கிற நாளையில்
செந்நெல்
வகை
வரி
133 – 138
வள்ளல்
மகனிட்ட வேளாண்மையெல்லாம் அமுர்தம் கொண்டு சிறுமணி பெருமணியாய் விளைந்தது. செந்நெல் விவரம், முத்த நாராயணன், மூழரி , கரும்பொன், வின்னவராயன், சேர்ந்தமுத்தான், ஈசம்பதியான், இளந்தலை கிழவன், இன்பமாதாரி, விந்து மாதாரி, ஆள்கொண்டராயன், அருந்துவ குபேரன், அறவாபரணன், வாறிகல்லுண்டை , பாகம்பிரியான், தாகம்தீத்தான், இருப்புலக்கை தவிர்த்தான், ஈசர்கினியான், மச்சுமுறிச்சான், மகிழம்பூ, வாசகன்,குழியிடித்தான், கோதும்பை, புன்னை குறக்கொடி,வாலன்,பாக்கு நிறத்தான், பசுங்குலை வாழை.
உமியில்லா
வாசகன்
வரி
138 – 141
ஊனுக்கினியான்,
உமியில்லா வாசகன், வில்லக்காய் மேனியன்,மழிமுடக்கி,வள்ளவாய் காத்தான், மூங்கில் நிறத்தான், மயல்க்கன்னி, கயல்கன்னி, மொட்டு சென்னி,புளியிட்ட சாதனன்,புன்னை நிறத்தான்,வட்ட கன்னி,மாதுள
கன்னி,குங்கும கன்னி,கோமள கன்னி,மல்லிகை,சுந்தரி.
சம்பா
வகை வெள்ளானை வேந்தன்
வரி
141 – 148
பரிமள
சம்பா, செண்பகமாலை, உள்பக சம்பா, நாட்டுக்கினிய சூரிய சம்பா, வெள்ளானை வேந்தன், வழதடி சம்பா, எலிவால் சம்பா, இலுப்பை பூ வாசகன், மாபூ
வாசகன், ராசா வெள்ளை, காக்கை
சம்பா, கதுவாரி வண்ணன், சீராக சம்பா, இக்கி சம்பா, புனுகு சம்பா, பேரில்லா வெள்ளை, மணவாரி புண்ணை, கதம்பை நிறத்தான், ஆள்ளோட்டி மசபுளுநி நீர்ச்சாரை, நெடுஞ்சாரை, காடை கழுத்தன், கற்ப்பூர
வாசகன், செம்மஞ்சள்வாறி, பறக்கும் சிறுக்குருவி, செம்மோடன், கருமோடன், ராவணன், சேர வளநாடன், வைகை
வளநாடன், சோதி குறும்பை, துய்ய
மல்லிகை, கிழிமூக்கு வளைத்தான், திரிகத்தை மணிகத்தை, செவ்வெள நீர் வாசகன், வாழைப்பூ
வாசகன், தாளை விழுந்தான்,
கொடக்கினியாசி
மிளகு சம்பா வகை அமராபதியான் பன்னிராயிரம்
சாதி நெல்
வரி
148 – 151
சிருமிளகி,
பெருமிளகி, கருமிளகி,செம்மிளகி,வெள்ளைமிளகி,பில்லைமிளகி, சந்தனமிளகி, சடைமிளகி, மட்டிமி குறுவை, மணிகுறுவை, செங்குறுவை, கருங்குறுவை, பண்முகரி, கயிலைப் பதியான், வைகுண்டபதியான், அமராபதியான்,அற்புதபறணன், அழகியவாளுடனே பன்னிராயிரம் சாதி நெல் விளைந்தது.
நெல்லறுத்தல்
வரி
151 – 155
செந்நெல்லை
மூவராசாக்களும் கண்டு அதிக மகிழ்ச்சி கொண்டு
வள்ளல் மகனை அழைத்து செந்நெல்லை
என் விபரமாய் அடித்தடியாக்கும்படியா உத்தரவு கொடுத்தார்.அந்தப்படியே பட்டணத்து சனங்களை அழைத்து வந்து செந்நெல்லை என் விபரமாய் அறுத்தடித்து
அளவு கண்டு பொதி பிடித்து வெள்ளை
யானையின் பேறில் போட்டு மூவராசாக்களிடமே வந்து இருந்த தேவதாயம் முதலான பல உபசாரங்களும் செய்து
கொண்டு வருகிற நாளையில்
இரம்பைகளின்
சூழ்ச்சி
வரி
155 – 159
உபைய
ரம்பைகளிருவரும் சில குழந்தைகளை பெத்து
அதிக சந்தோஷம் கொண்டு வள்ளல் மகனை தெய்வலோகத்துக்கு அழைத்து
போக வேணுமென்று சூதுகளை நினைத்து மது மாங்கிஷங்களை தரிவித்து
வீட்டில் தாபிதம் செய்து மூவராசாக்களிடம் வந்து வாருமய்யா மூவராசாக்களே வள்ளல் மகன் மது மாங்கிஷங்களை
பெரிக்க நினைத்து வீட்டில் கொண்டு வந்து தாபிதம் செய்திருக்கிறபடியால் இனி நாங்கள் இங்கே
இருக்க கூடாது தெய்வலோகம் போக வேணுமென்று சொன்னார்கள்.
தெய்வேந்திரன்
சினம்
வரி
159 – 164
மூவராசாக்களும்
வள்ளல் மகனை அழைத்து கொண்டு
வீட்டிலே வந்து சோதினை பார்க்கும் போது வெள்ளரளி, குங்கும
அரளி, செவ்வரளி , செவ்வந்தி, செண்பகம், மல்லிகை, முல்லை இப்படி பல விதமான புஷ்ப்பங்களாச்சுது.வள்ளல் மகனுக்கு அதிக கோபம் வந்து
தெய்வலோகம் போக நினைந்து மலைதகத்தான்
என்ற மண்வெட்டியை எடுத்து தோளில் வைத்துக் கொண்டு தெய்வலோகத்தை நாடி போகிற போது
உபைய ரம்பைகள் இருபெர்களும் குழந்தைகளை கூட்டிக் கொண்டு கூடத் தொடர்ந்தனர்.
அவர்களைப்
பார்த்து தெய்வேந்திரன் ஆதிசிவனிடம் சென்று சேர்தல்
வரி
164 – 169
வாரும்
உபைய ரம்பைகளே உங்களை நான் நூறு பொன்
ஐம்பது பொன் போட்டுக் கொள்ள
வில்லை. நீங்கள் இடையிலே வந்தவர்கள். இடையிலேயே போங்களென்று முந்தானியை கிழித்துயெடைக்கி குடுத்து துரும்பை கிள்ளி கையிலே குடுத்து நீங்கள் கொண்டு வந்த விருதுகளெல்லாம் பிள்ளைகள்
வசத்தில் ஒப்பிவைத்து தான் தெய்வலோகத்தை நாடி
வாரபோது மலைகளான பறந்து எதிறிட்டு எதிறிட்ட மலைகளை மண்வெட்டியினாலே இரு பிளவு செய்து
கொண்டு ஆதிசிவனிடமே சேர்ந்தான்.
மூவராசக்கள்
தெய்வேந்திரன் பிள்ளைகளுக்கு காணி செய்து கொடுத்தல்
வரி
169 – 174
வள்ளல்
மகன் பரமசிவனிடம் போய் சேர்ந்தானென்று மூவராசாக்களும்
மெத்தமும் கிலேசமுற்று உபைய ரம்பைகளையும், குழந்தைகளையும்
கூட்டி வரச் சொல்லி வாரும்
உபைய ரம்பைகளே நீங்கலொன்றுக்கும் கிலேசப்பட வேண்டியதில்லை. ஆதியில் உங்களை எங்கள் பிள்ளையாக எடுத்துக் கொண்டபடிக்கு உங்கள் வயிற்றில் பிறந்த பிள்ளைகளுக்கெல்லாம் எங்களுடைய தேசத்தில் காணி பூமி கோவில்
குளம் கல்வெட்டி காணி கொடுக்கிறோம் என்று
கல்வெட்டி காணி செய்து கொடுத்தார்கள்.
தெய்வேந்திர
மரபின் காணியாளர் பட்டியல்
வரி
174 – 180
பள்ளு
விபரம் முதல் தெய்வேந்திர பள்ளன்,சோழியப் பள்ளன், பாண்டியப் பள்ளன், கொங்குப் பள்ளன், குமுணப் பள்ளன், மரங்கொத்தி பள்ளன்,மங்கனாட்டுப் பள்ளற்,மாநாட்டுப் பள்ளற், ஈசர் பள்ளற்,அன்னியப்
பள்ளற்,குமணப் பள்ளற்,மோகினிப் பள்ளற்,மேனாட்டு பள்ளற்,வேங்கல நாட்டு பள்ளற்,கடைய பள்ளற்,கவுண
பள்ளற்,பட்டணக்கரை பள்ளற்,வேப்பங்குளத்து பள்ளற்,பூலாங்குலத்து பள்ளற்,சின்னிய பள்ளற்,தொட்டிய பள்ளற்,ஆத்தாய பள்ளற்,ஆய பள்ளற்,ஆமண
பள்ளற்,சாமண பள்ளற்,சானாட்டு
பள்ளற்,குங்கும பள்ளற், வங்கள பள்ளற்,
அரச
பள்ளற், வடமப் பள்ளற்
வரி
180 – 187
இருள
பள்ளற்,இளம்பிறை பள்ளற்,முக்குவிசைப் பள்ளற், கப்பரை பள்ளற், துலுக்கப் பள்ளற், மேல்மடைக்கட்டி பள்ளற்,வஞ்சுளி பள்ளற், வடமப் பள்ளற், பூரண பள்ளற்,பூசார
பள்ளற், அக்கறை கண்ட பள்ளற், அரச
பள்ளற், ஆனைக்குட்டி பள்ளற், யாப்பு பள்ளற், பாப்பு பள்ளற், முகுத பள்ளற், பாங்கி பள்ளற், கூனங்குடி பள்ளற் வானங்கட்டி பள்ளற், கிழிஞ்சி பள்ளற், தவளை பள்ளற், தாதுவ
பள்ளற், வெண்டி பள்ளற், வீரிய பள்ளற்,பச்சை பள்ளற், பாணாங்குடி பள்ளற்,திருநாம பள்ளற், ஆயப் பள்ளற், சாயப்
பள்ளற், கவிதமான பள்ளற், விதலைசயா பள்ளற் , பாவை கட்டி பள்ளற்,
வாணங்கட்டி பள்ளற், அளவு கையிட்ட பள்ளற்
வடுக பள்ளற், வடுபடுத்தி கொள்ளும் பள்ளற்
காட்டானை
வென்ற பள்ளர்
வரி
187 – 191
துட்டுஷ
பள்ளற், துறையேறி பள்ளற், தொண்டமண்டல பள்ளற், அளவு கையிட்ட பள்ளற்,
இப்புரை பள்ளற், பழிவிக்கும் பள்ளற், பழிதளுவிக் கொள்ளும் பள்ளற், நாகனாட்டு பள்ளற், நாகமழித்த பள்ளற்,காட்டனை வென்ற பள்ளற், சுழிசுழியா பள்ளற், ஆனையூர்ப் பள்ளற், அடுத்த நாட்டுப் பள்ளற், கோனுதையும் பள்ளற், கொலை களவு வென்ற
பள்ளற், தொல்லை மாலை விலை கூறும்
பள்ளற், ஆதியூர் பள்ளற், அரச பள்ளற், விசைய
பள்ளற், வீரண பள்ளற்
தெய்வேந்திர
பள்ளர் விருது
வரி
191 – 195
இப்படி
பள்ளனெனப்பட்ட சாதி காசிக்கும் தெற்கு
கண்ணியாமுரிக்கும், வடக்கு மாந்தைக்கும் , கிழக்கு மானொளிக்கும், மேற்கு இந்த நான்கு தேஷத்திற்க்குண்டாகிய
பள்ளனெனப்பட்ட சாதி அனைனவோர்களுக்கும் தரும்ம விளக்கம்
செய்கின்ற பழனி மட சிவாலயம்
தெய்வேந்திர பள்ளன் விருது
“கந்தன் மயேஷ்பரன் கணபதி வாழ்க
செந்
திருமகளுடன் செனகமால் வாழ்க
அயனுடன்
சரஷ்பதி அமரரும் வாழ்க
நாத்திசை
புவனம் நரர்களும் வாழ்க”
மீண்டும்
தெய்வேந்திரர் வரலாறு
வரி
195 – 201
“சிவனுயுமையும் மதிறுக் காஞ்சி தன்னில்
எகாம்பரரா
இருந்தருள் புரிந்து
மதுரையை
நோக்கி வரும் வழியதனில்
உலகலாமீன்ற
உமையவள் மனதில்
திருவருள்
தோன்றி சிவனிடத்துரைக்க
அரன்மன
மகிழ்ந்து முகமது வேர்க்க
கரமதில்
வாங்கி வரமதுக்கியந்து
வைகையில்
விடுக்க
வருணன்
பொழிந்துருளிக் காத்தடித்து
குளக்
கரையதனில் கொடி வள்ளல் தாங்க
ஓமம்
வளர்ந்து உற்ப்பணமாக
ஈஷ்வரி
தேடி இருளில் நடக்க
கூவிய
சத்தம் குமரனை நோக்கி
வாரியெடுத்து
வள்ளலை வலப்புறம் வைத்து
வலமார்
பிய்த்து அமிர்தம்
பொழிந்து
அஷ்த்தம் கொடுக்க
பாலன்
நரிவு பணிவிடைக்காக
புரந்தரன்
மகிழ்ந்து பூரித்தேடுக்க”
தெய்வேந்திரன்
அன்னம்
படைத்தல்
வரி
201 -204
“கன்னல் சென்னல் கதழி பிலாவுடன்
தென்னை
கமுகு செறந்த வெள்ளிலை
அன்ன
மிளகு மாந்துளிற் மஞ்சள்
மல்லிகை
முல்லை மகழி நுவர்ச்சி
பரிமள
சுகந்தம் பாங்குடன் கொண்டு
தெய்வ
சபையை தெரிசிக்க வென்று
காராவின்
பாலை கரகத்திலேந்தி
சீராக
அன்னம் சிறப்பித்த போது”
தெய்வேந்திரன்
விருதுகள்
வரி
204 – 211
“ஈஷ்வரன் மகிழ்ந்து இணைமுடி தரிக்க
அமரர்கள்
மகிழ்ந்து இணைமுடி தரிக்க
அமரர்கள்
மகிழ்ந்து அதிசயத் திவர்கும்
விமரிசையாக
விருது கொடுக்க
மாலயன்
ருத்திரன் மகேஷ்பரன் மகிழ்ந்து
பொன்முடி
யதனில் பூசன மணிய
வாடாத
மாலை மார்பினி லிலங்க
வெட்டுப்
பாவாடைகள் வீணைகள் முழங்க
செந்நெல்
சேறாடி சிறப்புடன் சூழ
வெள்ளைக்
குடையும் வெங்களிருடனே
டாலுடம்மான
சத்தம் அதறிட
மத்தாளம்
கைத்தாமம் மகேஷ்பரத் துடனே
எல்லா
விருதும் இயல்புடன் கொண்டு
தெய்வ
சபையை தெரிசனம் செது
பதினெட்
டாயுதம் பாங்குட னெடுத்து
புரவியிலேறி
பூலோக மதனில்
சென்னலா
யெங்கும் சிறப்பிக்கம் போது
விசுவ
கண்ணாளர் மேழியும் கொடுக்க
மூவராசாக்கள்
முடிமணம் சூட்ட”
செந்நெல்லைப்
படைத்தோர்
வரி
211 – 216
“குகவேலருளால் குடும்பன் தழைக்க
சிவனருளாலே
திருநீறணிந்து
யெல்லா
வுலகும் யிரவியுள் ளனவும்
தெள்ளிமை
யாத செந்நெலை படைத்தோர்
சேத்துக்கால்ச்
செல்வரான
செந்நெல்
முடி காவலரான
முத்தளக்கும்
கையாதிபரான
பாண்டியன்
பண்டான பாறதகதபரான
அளவு
கையிட்டவரான
மூன்று
கைகுடையாதிபரான
பஞ்ச
கலசம் பாங்குடன் வயித்து
அஞ்சலித்
தேவர்கும் அன்னம் படைத்தவரான
மண்ணை
வெட்டிக் கொண்டு மலை தகத்தவரான
கடல்
கலங்கினும் காவேரி வற்றிலும் மலை
கலங்கினும்
மனங் கலங்காத வல்லபரான
மாடக்குளத்தில்
வந்துதித்தவரான பரமசிவனுக்கு
பாத
பணிவிடை செய்கின்றவரான”
தெய்வேந்திரன்
பிள்ளைகளாகிய காணியாளர்கள்
வரி
216 – 220
தெய்வலோகத்தில்
தெய்வேந்திரன் பிள்ளைகளாகிய பழனித் தலத்தில் காணியாளனாகிய கொங்கப் பள்ளறில் பழனி பழனிப் பன்னாடி,
கந்தப் பன்னாடி, கடையப் பள்ளறில், தென்பழனி இருள குடும்பன், மங்கனாட்டுப்
பள்ளறில் பெரியழக குடும்பன், பாலசமுத்திரம் அறிய நாச்சி குடும்பன்,
குமாரக் குடும்பன் கலையன்புத்தூர் பெரிய அழக குடும்பன், அக்கிரஹாரம்
அழக குடும்பன்,ரெட்டையன்பாடி பாப்ப குடும்பன், பந்த குடும்பன்,கல்லாபுரம்
குமார குடும்பன்,கொழுமம் குமாரலிங்கம் சின்னாதா குடும்பன், நயினா குடும்பன்,
கன்னாடிப்புத்தூர்
பண்ணாடிமார்கள்
வரி
221 – 226
கன்னாடிபுத்தூர்
வெள்ளானை பன்னாடி,கரிச்சி பன்னாடி,சோழமாதேவி ராக்க பன்னாடி, சோழ பன்னாடி,கணியூர்
மூப்பன், காரத்தொழுவு வேல்பன்னாடி, கடத்தூர் குருப்பன்னாடி, அலங்கயம் ராக்க பன்னாடி, தனஞ்சியம் அழக பன்னாடி, தாராபுரம்
உடையா பன்னாடி,வீராச்சி மங்கலம் கன்னாடிபுறுத்யூர் …..ல பன்னாடி,கோழிகடவு
கூழைமலை பன்னாடி, ஆயிக்குடி சப்பளி குடும்பன், கரும குடும்பன், விருப்பாச்சியில்
செவந்தா குடும்பன், நீலகண்ட குடும்பன், எடையைக் கோட்டை எழுவ குடும்பன், பாரைப்பட்டி
பனிக்க குடும்பன், திண்டுக்கல் சனுவ குடும்பன்,வலையா
குடும்பன், வல்ல கொண்டாம் நாயக்கனூரில்
வேலக் குடும்பன்,தாடி கொம்பு குமார
குடும்பன்,
வத்தலக்
குண்டு குடும்பனார்கள் பலகனார்கள்
வரி
226 – 231
கொத்தபள்ளி
கண்ணா பலகான்,கன்னிவாடி உக்கினிக் குடும்பன் ஆத்தூரில் திம்மக் குடும்பன், குழப்ப நாயக்கனூரில் சின்னாண்டி காலாடி, அம்ம நாயக்கனூரில் அம்மையாக்
குடும்பன், மாவுத்தன் காலாடி, வத்தல குண்டு கெங்குவார்ப்பட்டி குடக்குடும்பன்,காரைக் குடும்பன், மூங்கிலணை வள்ளி குடும்பன், பெரிய குளம் தாமரைக்குளம் ராமக் குடும்பன்,போடிநாயக்கனூரில் பொன்னழக குடும்பன்,திணைகுளம் சங்க குடும்பன்,மஞ்சக்
குடும்பன்,பூதணத்தம் நாச்சி குடும்பன்,விரும குடும்பன்,ஆனைமலை குலகார பன்னாடி.,
கோயமுத்தூர்
பண்ணாடிமார்கள்
வரி
231 – 234
மாரிச்சனாயக்கம்
பாளையம் குப்பையாண்டி பன்னாடி,ஊத்துக்குழி ஆண்டிக் குடும்பன்,கோதைவாடி வேலுப்பன்னாடி, கோயமுத்தூர் வெள்ளானை பன்னாடி, வீர பன்னாடி, அவனாசி
பன்னாடி, சூலூரு தம்பியா பன்னாடி, உக்கிரங்க்கொடி வேலிமங்காப் பன்னாடி,குறுப்பநாடு வில்லாப் பன்னாடி, ஆவிழி சொக்கப் பன்னாடி, அமுக்கயம் கத்தாங்க்கண்ணி ராக்கப்பன்னாடி.,
ஈரோடு
கொங்குமுடையப் பன்னாடி சேலம் பலகனார்
வரி
234 – 236
ஈரோடு
கொங்குமுடையார் பன்னாடி, சேலம் முத்த பலகான்,ராசிபுரம் கன்ன பலகான், நயினா
பலகான், பரமத்தி கன்ன பலகான், வெங்கரை
பாண்டமங்கலம் மூத்த பலகான்,சின்ன தாராபுரம் முத்துகருப்ப குடும்பன், பள்ளப்பட்டி வேல் குடும்பன், அறவக்குறிச்சி
ஆண்டி குடும்பன்.,
கரூர்
திருச்சிராப்பள்ளி நாட்டு
மூப்பனார்கள்
வரி
236 – 239
கருவூர்,
புலியூர் பெரிய மூப்பன், பசவ மூப்பன், வாங்கல்
சின்னாறி யாமூப்பன், புகழியூர் சின்னக்காளி மூப்பன், கட்டளை நடுவறுத்தா மூப்பன், குளித்தலை பழனி மூப்பன், தொட்டியம்
உத்த மூப்பன், வெள்ளூர் பரம மூப்பன், சோமையநல்லூரு
நயினகாளி மூப்பன், திருச்சினாப்பள்ளி நாட்டு மூப்பன், சொக்க மூப்பன், துறையூர்ச் சீமை எளுவ மூப்பன்,
ஆண்டி மூப்பன், பெரிய மூப்பன், பழனி மூப்பன்
தஞ்சாவூர்ப்பணிக்கனார் தொண்டைமானார்
சீமை குடும்பனார்
வரி
239 – 242
தஞ்சாவூர்
சீர்மை துளசி பணிக்கன், ஆண்டி பணிக்கன், சனுவ குடும்பன், மெய்ய
குடும்பன், தொண்டமனார் சீர்மை பழனிக் குடும்பன், மெய்ய குடும்பன், சரச குடும்பன், குப்பா
குடும்பன், காரை குடும்பன், சோடான்
பிச்சை குடும்பன், சின்னாண்டி காலாடி, பழனி காலாடி, லின்கமநாயக்கர்
சீர்மை, ராமக் குடும்பன், இலிங்கா குடும்பன்
மதுரை
சொக்கக் குடும்பன் இராமநாதபுரம்
ரகுநாதக் குடும்பன்
வரி
242 – 246
மதுரையில்
சொக்க குடும்பன், வீர குடும்பன் மாடக்குளம்
வேதி காபல் குடும்பன், தண்டு காபல்க் குடும்பன், கவுண்டன் கோட்டை புலையா குடும்பன், உடையாத் தேவர் சீர்மை சேதுபதி குடும்பன், ராம குடும்பன், அழக
குடும்பன், கீழை பருத்தியூர், மேலை
பருத்தியூர், உடையா குடும்பன், வீர குடும்பன், ராமனாதபுரம்
ரெகுனாத குடும்பன், ராம குடும்பன், கலங்காதகண்டம
நாயக்கனூரில் திருவிருந்தா குடும்பன், அழகன் காலாடி, சின்னாண்டி காலாடி, வண்டியினார் சீர்மை சிவசூரிய குடும்பன், அழக குடும்பன், தும்சபிச்சவங்கனூரில்
சோனைக் குடும்பன்
தெய்வேந்திர
காணியாளர்
வரி
246 – 251
காணி
காலாடி மர்ருமுண்டாகிய குடும்ப(னார்)கள், பன்னாடிகள்,
காலாடிகள், மூப்பன், பலகானென்கிற அய்ந்து வகுப்பும், பன்னீராயிரம கோத்திரமுடைத்தாகிய தெய்வேந்திர வமிஷத்தாரானவோர்களும் கொங்கு வய்காபுரி நாட்டில் பழனி மலை மேல்
மகாபூசை கொண்டருளிய பால சுபிரமணிய சுவாமியார்
திருவலப் புறமாக எழுந்தருளி வருகிற தெற்கு வீதியில் தென்மேல் மூலையில் தெய்வேந்திர சாதி அற மேடம்
ஆலயமும் தெய்வேந்திர வினாயகனும் உண்டு செய்து பேறழம் தேபனாசித்தய்யற் சீசன் பழனிமலை உடையாருக்கு தருமசாதினமாகிய தாம்பூரசாதின பட்டயம் கட்டளை இட்டோம்.
தெய்வேந்திரர்
பழனிகோயில் கட்டளைகள் அன்னதானம்
வரி
251 – 253
அந்த
மடத்தில் அறதேசி பரதேசிக்கு உப்பு,ஊறுகாய்,நீராகாரம்,திருவிளக்கு,திருக்கண் சாத்தும் மலையின் பேறில் திருமஞ்சனம் மலை ஏறும் மேல்
பாறிசம் தண்ணீர், பந்தல் நந்தவனம் இது முதலான தருமங்களும்
உண்டு செய்து குடுத்தோம்.
கோயிலுக்குத்
தெய்வேந்திரர் கொடை
வரி
253 – 269 பட்டய சுபார்த்தியம் குடிக்கு நிமாட்டாயனுக் காறுபடி பெனசிரை பதினாலுபடி குடும்பன் பன்னாடி பதினாலு வள்ளமுனோர் தேசத்தில் தலைகட்டுக்கு ஒரு பணமும் தண்டுவனுக்கு
அரைப்பணமும் கலியாணத்துக்கு மாப்பிள்ளை வீட்டுக்கு மூணு பணமும் பெண்
வீட்டுக்கு ரெண்டு பணமும் அனாதி முதலு சாதியில் குத்தம் தீந்த பணமும் கட்டளை இட்டோம். திருவிழாவுக்கு பெரிய ஊருக்கு அஞ்சு பணமும் சித்தூருக்கு மூணு பணமும் வினாயக
சதூர்த்தி, சரஷ்பதி பூசை, கந்த சஷ்டி, சங்கிறாந்தி,
சிவன் ராத்திரி இந்த விசேஷங்களுக்கு ஊருக்
கொரு பணம் குடுத்து வருவோர்களாகவும்
இந்த தருமத்தை பரிபாலனம் செய்யப்பட மடத்தய்யர் பட்டயங் கொண்டு கிராமங்களில் நாடுகளில் வந்தால் வருக்கு படி முதலானதும் குடுத்து
பட்டயத்துக்கு அபிஷேகம் செய்து கோடி வஷ்த்திரம் சாத்தி
நெவேத்தியம் குடுத்து பட்டய வாசகம் கேட்டு கோயில் உரிமை
காலம்
– பரிபாலனம்
வரி
269 – 274
பட்டயத்திலுள்ளபடி
கல்லும் காவேரியும் புல்லும் பூமியும் உள்ளவரைக்கு வரித்தனை குடுத்து நடத்தி வருவோர்களாகவும் வரித்தனை குடாத பேர்களை அஞ்சு சாதியின் பேறில் ஆணையிட்டு தெய்வேந்திரன் ஆணைக்கு உள்படுத்தி தீயுந்துறை, தண்ணித்துறை, வண்ணா நாசுவன் தடங்கல்ச் செய்து மங்கலமொதுக்கி வெங்கலமேடுத்துக் கொள்வோராகவும், அந்த அக்கை ஊரு
மந்தையில் மிடகுக் கொள்ளாவிட்டால் தருமா மடமாலையத்தில் சேர்த்தி கொள்வாராகவும் இந்த படிக்கி பழனியாண்டவருக்கு
பொதுவாக இந்த தருமத்தை பரிபாலனம்
செய்து வருவோர்களாகவும்
வாழி
வரி
274 – 276
“மூலயனுக்கான சிவன் விந்தும் வாழி
மும்மல
அருள்ப் பார்வை விசுவர்கமா வாழி
மாலனருள்
தெச்சணமா டக்குளமும் வாழி
வளர்பால
கனையீன்ற வள்ளல்க் கொடியும் வாழி
பாலகனாய்
வந்தவள்ளல் மகனும் வாழி
பன்னீரா
யிரம்கோத்திரம் பவிசும் வாழி
தானே
ஆறுமுகம் துணை”
பட்டய
நகல்
வரி
276 – 278
இந்த
பட்டயம் இதற்க்கு முன் இருந்த பட்டயம்
கை விடுதலாயிப் போனதற்கு பதிலா இப்போது ஆங்கிலா வருடம் புரட்டாசி மாதம் உண்டைக்கிய பட்டயம். (குருசாமி சித்தர், மள்ளர் மலர், மே 2002 , ப.16 -23 )
(முற்றும்)
No comments:
Post a Comment