Wednesday, February 15, 2023

கவிஞர் அன்புசிவா எழுதிய "காத்திருந்த கனவுகள்" கவிதை நூல் வெளியீட்டு விழா

வேந்திரகுல வேளாளர் நலச் சங்கம் - தாம்பரம் சார்பாக 14. 02.23 செவ்வாய்க் கிழமை மாலை 05.30  மணிக்கு  சென்னை ஜேப்பியார் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத்தலைவர் பேராசிரியர் முனைவர் அன்புசிவா எழுதிய 30வது நூலான "காத்திருந்த கனவுகள்" என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா சென்னை வண்டலூர் மூதறிஞர் தேவ ஆசிர்வாதம் நூலகத்தில்  நடைபெற்றது . விழாவிற்கு சங்கச் செயலாளரும் தமிழ் ஆர்வலருமான மருத்துவர் சு. மதிவாணன் தலைமை தாங்கினார். நூலை சென்னை எஸ்.ஐ.வி.இ.டி.பொருளியியல் துறைத் தலைவர் மற்றும பேராசிரியரும் தமிழ்நாடு அரசு உதவி பெறும் கல்லூரி பேராசிரியர் சங்கச் செயலாளருமான முனைவர் பாலசரவணன் வெளியிட்டார். விழாவில் சங்கத்தலைவர் செல்லத்துரைஇ திருசூலம் கண்ணாயிரம் இ கவிஞர் துரைசாமி வேளச்சேரி சங்கத் தலைவர் கந்தசாமி சங்கத் துணைத்தலைவர் செல்வராஜ் மற்றும் பலர் வாழ்த்துரை வழங்கினர். சங்க மகளிர் அணித் தலைவி சரஸ்வதி செல்வராஜ் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை சங்க நிர்வாகிகளும் சங்க அலுவலக மேலாளர் மார்க்கண்ணும்  சிறப்பாக செய்திருந்தனர்.






No comments:

Post a Comment