Thursday, June 03, 2021

திருக்குறள்

வாய்மைத் திரு வள்ளுவனார்

வகுத்து வைத்த பாதையிது

நான்மறை வேதம் இது

வாழ்வு நெறிப் போதமிது!

மேன்மையுற மாந்தர் பெற

மேதையவர் தந்த மொழி;

ஆனவரை பொருள் அறிந்த

அனுபவமே குறள் அமுதம்;

மூழ்கிவரும் வேளையில் நான்

முத்தடுக்கத் துணிந்த துண்மை;

வாழந்திருக்கும் நாளுக்குள் யான்

வந்தவரை உரைப்பன் குறள்;

மேதினியில் வாழ்ந்த வகை

மீதம் இது அவ்வளவே!

மேவுவது வாழ்வா சாவா?

யாதுமவன் இட்ட பணி

ஆய்ந்து தமிழ் அறிந்து

அரும் பொருள் உரைக்க

ஆதிசிவன் தாழ் பணிந்தேன்

அமுத மழை பொழிகவே

No comments:

Post a Comment

கணவன் - மனைவி உறவைவிட உன்னதமான உறவு உண்டா?

கணவனுக்குத் தலைவலி. நெற்றியை அழுத்திப் பிடித்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்திருக்கிறான். மனைவி கொஞ்சம் தைலம் எடுத்து வந்து, கணவன் அருகில் அம...