வாய்மைத் திரு வள்ளுவனார்
வகுத்து வைத்த பாதையிது
நான்மறை வேதம் இது
வாழ்வு நெறிப் போதமிது!
மேன்மையுற மாந்தர் பெற
மேதையவர் தந்த மொழி;
ஆனவரை பொருள் அறிந்த
அனுபவமே குறள் அமுதம்;
மூழ்கிவரும் வேளையில் நான்
முத்தடுக்கத் துணிந்த துண்மை;
வாழந்திருக்கும் நாளுக்குள் யான்
வந்தவரை உரைப்பன் குறள்;
மேதினியில் வாழ்ந்த வகை
மீதம் இது அவ்வளவே!
மேவுவது வாழ்வா சாவா?
யாதுமவன் இட்ட பணி
ஆய்ந்து தமிழ் அறிந்து
அரும் பொருள் உரைக்க
ஆதிசிவன் தாழ் பணிந்தேன்
அமுத மழை பொழிகவே
No comments:
Post a Comment