ஏ.வி.பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பாக தமிழ் மன்ற நிறைவு விழாவும், மகளிர் தின விழாவும் 04.03.2019 காலை 10.00 மணிக்கு கல்லூரி கருத்தரங்கக் கூடத்தில் நடைபெற்றன. விழாவில் தமிழ்த்துறைத் தலைவர் பேரா. என். மஞ்சுளா அவர்கள் வரவேற்புரையாற்றினார். கல்லூரி தலைவர் திரு. ஆ. கார்த்திகேயன் அவர்கள் தலைமையுரையாற்றினார். கல்லூரி முதல்வர் முனைவர் கு. முத்துசாமி அவர்கள், கல்லூரி ஆலோசகர் முனைவர் ந. கந்தசாமி அவர்கள் வாழ்த்துரையாற்றினார்கள். கோவை சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் பூ.மு. அன்புசிவா அவர்கள், “பெண் பெண்ணியம் ஆளுமை” என்ற தலைப்பில் சிறப்புறையாற்றினார். தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் ஜெ. வித்யா நன்றியுறையாற்றினார். 300க்கு மேற்பட்ட மாணவிகளும், பேராசிரியர்களும் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment