கோவை:இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி, மொழித்துறை வாசிப்பு முற்றம், கோவை இலக்கிய சந்திப்பு, 100வது நிகழ்வு இணைந்து, காலை 10.00 மணிக்கு நடைபெற்றது. நவீன தமிழ் இலக்கிய விழாவை நேற்று நடத்தியது.கல்லூரி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியின் துவக்கத்தில், கவிஞர் வெங்கடேசனின் "புலன்” எனும் நூலை, சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரிப் பேராசிரியர் முனைவர் பூ.மு.அன்புசிவா வெளியிட, ஆராய்ச்சி மாணவி நித்யாதேவி பெற்றுக்கொண்டார்.மூத்த எழுத்தாளர் ரவீந்திரன் பேசுகையில், 'தமிழில் எழுதப்படும் இலக்கியம் அனைத்துமே, இலக்கியம் ஆகாது. மண் சார்ந்த இலக்கியமே உண்மையான இலக்கியமாக கருதப்படுகிறது. திறமை, முயற்சி இருந்தும், அவற்றை சரியான தருணத்தில் வெளிப்படுத்தினால் மட்டுமே வானளாவிய சிந்தனை திறனை மேம்படுத்த முடியும்'' என்றார்.தொடர்ந்து, பல்வேறு தலைப்புகளில் அமர்வுகள் இடம்பெற்றன. இந்துஸ்தான் கல்லூரி மொழித் துறைத்தலைவர் திலீப்குமார் எழுத்தாளர் நடராஜன்கவிஞர் அவைநாயகன் உட்பட பலர் பங்கேற்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
கணவன் - மனைவி உறவைவிட உன்னதமான உறவு உண்டா?
கணவனுக்குத் தலைவலி. நெற்றியை அழுத்திப் பிடித்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்திருக்கிறான். மனைவி கொஞ்சம் தைலம் எடுத்து வந்து, கணவன் அருகில் அம...
-
ஒரு தந்தையாவது மிகவும் இலகுவானது. ஆனால் ஒரு தந்தையாக இருப்பது மிகவும் கடினமானது. -Wilhelm Busch- அப்பா... ஒரு மனிதன்,பின்னாளில் தனக்கு சொந்...
-
கணவனுக்குத் தலைவலி. நெற்றியை அழுத்திப் பிடித்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்திருக்கிறான். மனைவி கொஞ்சம் தைலம் எடுத்து வந்து, கணவன் அருகில் அம...
-
உலகில் தொன்மையான தற்போது மக்கள் பயன்பாட்டில் உள்ள மொழிகள் சிலவற்றை செம்மொழிகள் என அறிவித்துள்ளனர். உலக மக்கள் பேசும் மொத்த மொழிகளின் எண்ண...

No comments:
Post a Comment