வாழ்வின் கவிதைக் குரல் – எஸ் . செந்தில் குமார்
தமிழின் நவீன கவிதை தன்னுடன் வாசிப்பதற்கு எப்போதும் இணையான மற்றொரு கவிதையின்
அடையாளத்தைக் கொண்டுள்ளது. தொடர்ச்சியாக வசிப்பவர்கள் இந்த அடையாளத்தை
எளிதில் கண்டடைந்திடலாம் . இணைபிரதி என்கிற parallel text ஐ மனதில்
வைத்துக்கொண்டு எந்தவொரு கவிஞனும் கவிதை எழுதுவதில்லை.தட்டையான
அர்த்தத்தைத் தரக்௬டிய கவிதையின் காலத்தை வாசகர்களும்எழுத்தாளர்களும்
வெற்றிகரமாக முடித்து விட்டார்கள். நவீன கவிதை ஒன்றுக்கு மேற்பட்டபல
அர்த்தங்களை தரக்௬டியதாகவும் அதே சமயம் ஓரே அர்த்தத்தை
தரக்௬டியதாகவும் அமைந்து விடுவது கணித விளையாட்டு அல்ல, என்பதை நவீன
வாசகர்கள் அறிந்திருக்கிறார்கள். வாழ்வின்நெருக்கடிகள் , போதாமைகள்
,நிராகரிப்புகள் மேலும் மேலும எழுத்தையும் எழுத்தாளனையும் உருவாக்குகிறது.
நிச்சயமாகச் சொல்லலாம், வாழ்வின் நெருக்கடிகளே கவிதையின் அதன் மொழியின்
அதன் வடிவத்தின் தன்மையைத் தீர்மானிக்கிறது .சிறுகதை உள்ளிட்ட உரை
நடைகளில் நிச்சயமாக துணை பிரதி ஒன்றை வாசிக்கும் போது கண்டடைய முடியாது.பல
சிக்கல்களை அதே நேரம் பல அர்த்தங்களை உருவாக்கும் வாழ்க்கையின்
நிழலைப் போல தான் கவிதையும்,அதன் வடிவமும் ஓன்று சொல்லத் தோன்றுகிறது.
தமிழின் நவீன கவிதையில் சக்திஜோதியின்
‘கடலோடு இசைத்தல்’ என்கிறத் தொகுப்பு அதன் மொழியாகவும், கச்சிதமான
வடிவத்திற்காகவும் உண்மையான அனுபவத்தை நேர்மையாகவும்,உயர்த்தியும்
தாழ்த்தியும் பேசாது கவிதை என்கிற மெல்லிய குரலிலேயே எழுதியிருப்பது அதிசய
மனதாகும்.
மலையும் அதன் கீழ் பறந்து கிடக்கும் வயல்வெளி நிலமும்
இக்கவிதைகளின் பின்னனிகளாகவும்,கவிதை அர்த்தங்கொள்ள உதவும்
வண்ணங்களாகவும் அமைந்துவிடுகின்றன.நவீன கவிதையின் தனிமை,தனித்த அறை
உள்ளிட்ட படிமங்கள் காலவதியாகிவிட்டது.தற்போது சிறுகதையில் இந்த படிமம்
விரிவாக விவரிக்கப்பட்டு எழுதப்படுகிறது என்பதை குறிப்பிட வேண்டும் மலை
கிராமத்ததின் வாழ்வும் அந்நிலத்தின் வாழும் பெண்ணின் குரலும்
கவிதையாக்கப்பட்டிருக்கிறது என்ற தட்டையான அர்த்தம் இக்கவிதைகளைப்
பரீசிலிக்கப் போதுமானதாக இல்லை.மனம், உடல்,சிந்தனை ,ஆகியவற்றின் மீதான
அடக்குமுறையை எதிர்த்து இக்கவிதையின் மெல்லிய அச்சம் மிகுந்த குரல்
ஒழித்துக் கொண்டேயிருக்கிறது.ஆனந்தம் என்றால் என்ன என்ற கேள்விகளுக்கு அது
தான் இவ்வளவு சுதந்திரத்தைத் தருகிறதா என்று முடியும் கவிதை(பக்கம் -20 ).
கேள்வியும் பதிலும் என்ற தலைப்பில் உள்ளது. இதே
சுதந்திரம் என்ற சொல் அர்த்தம் தரும் கவிதையொன்று கிளிபுராணம் என்ற
தலைப்பில் உள்ளது.பல ஆயிரம் ஆண்டுகளாய் கூட்டினை அடையாத கிளிகள் பறந்து
செல்கின்றன.
அகன்ற வானில் என்று முடிகிறது பறத்தல் என்பது வானம் என்பாதும், கவிதையில்
அடங்குதல் அடக்கம் ஒடுக்குமுறை ஆகியவற்றின் எதிரான படிமமாகத்தான்
வாசிக்கும் போது உருவாகிறது. கவிதையில் வானத்தை வானமாக மட்டும் வசிக்கும்
சூழல் நவீன கவிதைக்கு எதிரானதாகும் .
சுதந்திரத்தைப்பற்றிய மனவோட்டம் மெல்லிய இழைகளால்
பின்னப்பட்டிருப்பது போல ,இக்கவிதைகளில் சில பிரிவும் அது தரும் துயரம்
கவித்துவமான வார்த்தைகளால் எழுதிச் செல்லப்பட்டிருக்கின்றன .பக்கம் 36
காதலின் மெளனம் என்கிற கவிதை ‘புறாக்கள் கூடடையும் சப்தம்
சொல்லத்தூண்டுகிறது பிரிவின் வேதனையை ‘என்ற மூன்று வாக்கியம் மனதில்
நீங்காத சித்திரத்தையும் ஒருவரிடமிருந்து பிரிந்து செல்லும் துயரத்தைப்
படிமமாகச் சொல்கிறது . இவ்வேதனை உச்சமாகி ,ஒரு துளி கண்ணீர் வழியாக கடந்து
செல்கிறது .அன்பு என்று பக்கம் -46-47 ல் உள்ள கடத்தல் என்ற தலைப்பிலான
கவிதையின் கடைசி வரிகளாக இடம் பெற்றுள்ளது பிரிவு என்பது வேதனையானது அதை
விட பிரிவை நினைவு கூறும் தருணம்.இத்தொகுப்பில் பக்கம் -60 ல்
‘ஆசிர்வதிக்கப்படட மாலைப்பொழுது’என்கிற கவிதை முழுக்க பிரிவின் துயரத்தைத்
தான் நம்முன் சித்திரப்படுத்த விரும்புகிறது .நேர்த்தியான ஒளிப்பதிவாளர்
பதிவு செய்யும் காட்சிக்கும் அதற்கு உவந்த இசையும் இணையும் போது
பார்வையாளகள் மனதில் எழுசிக்கொள்ளும் அனுபவமே இக்கவிதையை வாசிக்கும்
பொழுது ஏற்ப்பட்டது.
இக்கவிதைத்தொகுப்பில் இரண்டு கவிதைகள் விசித்திரமான
கதையிடல் தன்மையை வடிவரீதியாகவும்,கருத்துரீதியாகவும் அமைத்திவிட்டது
.தேன் என்கிற கவிதையின் தொடக்கம் அற்புத எதார்த்த மொழியில் அமைந்துவிட்டது
(பக்கம் -18 ) .’அவள் தான் நீள் கூந்தலில் பூலெனச் சூடியிருக்கிறாள்
நிலவை . நிலவருகேச் செல்வாயெனில் கூந்தலில் சூடியுள்ள நிலமலர்களை
வீசியெறிவாள் உன்னை நோக்கி.பிறகு நீ அதிலிருந்து கசியும் தேனை
பருகுவாயெனில் முதல் துளி அவளது காதலானாக்கும் ,இரண்டாவது துளி அவளுடன்
கைகோர்த்து உலவச்செய்யும் மூன்றாவது துளி அவளின் பூங்காவில்
ஆலிங்கனத்தில் மயங்கி முத்தமிடுவாய் .இக்கவிதைவரிகள் கதையின்
தொடக்கமாகவும்,கதையின் குணமாகவும் அமைந்திருக்கிறது .மாலதி மைத்தி,
ராணிதிலக் ஆகியோருக்குப்பிறகு கவிதையின் முக்கிய குணங்களில் நன்றாக அற்புத
எதார்த்தத்தை tools ஆக பயன்படுத்தியிருப்பது சக்திஜோதி மட்டுமே .
உடல்களையும் ,அதன் பயன் சார்ந்த வெளிபாடுகளையும் அரசியலாக்கி எழுதுவதும்
,எழுதியதையெல்லாம் கவிதையாக்கம் செய்வதும் நவீன கூறுகளில்
ஒன்றாகயிருக்கும் இச்சூழலில் இயற்கையை பாடுபொருளாக்கியிருப்பது
கவணிக்கவேண்டியது.
அதே போல பக்கம் -74 ல் இத்தொகுப்பில்
நீள் கவிதையான ,பெண்மைப்பற்றிய சில கவிதைகள் பெண்மையின் ஏழு பருவங்களையும்
,அந்த பருவத்தை நிலக்காட்சியோடு கூறும் முறையும் பரிசோதனையை மீறி
சிறப்பாக அமைந்துள்ளது .Nearly Story என்று கூட இக்கவிதையைச் சொல்லலாம்
.மாலதி மைத்ரியின் இரும்பு தொப்பி கவிதை வடிவம் போல கதையாகச்
கூறிச்செல்லும் முறை வெற்றியாக அமைந்துள்ளது .பெண் குழந்தை பிறந்து
,வளர்ந்து ,வெற்றிகரமான வாழ்வையும் ,அதிகாரமையத்தையும் அடையும் வரை
கவிதை கதைச் கூறிச்செல்கிறது.சீனா ,ஜப்பான் ,இந்தோனேசியா ,ஆகிய நாட்டு
மக்களின் கனவில் சிவப்பு நிறம் தெரிந்தால் நல்ல சகுணம் என்றும் அது வெற்றி
அடையாளம் என்றும் ,பெருபான்மையோர் கருதுகின்றனர்.இக்கவிதையில் ஏழாவது
பருவத்தில் அவர்கள் முட்டையின் சிவப்பு சாயமிட்டு பரிசளிக்கும் கனவைக்
காணத் தொடங்கவுள்ளனர்,என்ற முதன்பாடாகவும்,அதே நேரம் உலக பொதுவும்சமாகவும்
இருக்கிறது .எல்லோருக்குமான கனவு என்பது குறிப்பிட்ட இனக்குழுவின்
கனவு என்பது வேறுவேறாகவே இதுவரை வாசிக்கப்பட்டுள்ளது .ஏழுநிறங்களின்
ஏழு காலங்களையும்,அக்காலத்தினுடாகப் பயணிக்கும் பெண்ணின் பள்ளிப்பருவம்,
காதல் ,நட்பு , மனவாழ்க்கை, சிற்றின்ப இயலாமை ,பொருளாதார நெருக்கடி
என்று இக்கவிதை முயற்சிப்பதும் சாத்தியமாகியிருக்கிறது பக்கம் 30 ல் .அதே
போல கிளி புராணம் என்ற கவிதையும் பெண்ணின் பொதுவான வாழ்வாதாரங்களை
மையமிட்டே பாடிச்செல்கிறது .பல ஆயிரம் ஆண்டுகளாய் கூட்டினை அடையாத
கிளிகள் பறந்து செல்கின்றன அகன்ற வானில் ,என்ற கவிதை ஒடுக்கப்படுவதால்
என்பதற்கு எதிரான கவிதையாக இருந்த போதிலும் கவிதையும் அதன் நோக்கமும்
,பெண் வரலாற்றை மையமிட்டதாகவே உள்ளது
தொகுப்பில் கடல்
என்பது ஆழ்மனதிலிருந்து வெளியேறும் சொல்லாகவும் ,அகச்சிக்கலை
தீவுக்கொள்ளத்தவிக்கும் வடிவமாகவும் உள்ளது. ‘கடல் ஒரு தேவதை என்றேன்’
என்ற சொல் கடல் வெளியே அதன் மொத்த பிரதேசத்தையும் உள்வாங்கி திரும்பவும்
,பதிலீடாக ஒரு சொல்லாக உருமாறிச்சொல்லுவது அதன் போல கடற்கரை,கடல்சிப்பி
,தோனி, கடற்கரை பௌர்ணமி என்று தனித்தனி அழகியில் கூறுங்கள் இங்கு
படித்துச்செல்வதில் சிக்கலாகி ‘தேவதை’என்று முடிந்திருக்கிறது .
மனதிலிருக்கும் சிக்கலை கழற்றிக்கொள்ளத் தேவைப்படும் பாதுகாப்பும்
,தொலைத்தல் ,சுயம் இழத்தல் போன்ற கூறுகளோடு ,இதனை பொருத்திப்பார்க்க
வேண்டும் .கடல் தப்பித்தல் என்று பிரம்மராஜன் தனது நேர்காணல் ஒன்றில்
கூறியுள்ளார்.சக்திஜோதி தனது ஆறு கவிதைகளில் ,கடல் பழமை ,கடல் நீலம் அது
,ஆழ்கடல் மௌனம் வெளிப்படுத்தாத காமத்திற்கு நிகராணது.கடல் என்பது
பிரபஞ்சத்தின் ஓசைகளை உள்வாங்கிய நிலம் என்று சொல்லும் சக்திஜோதி ‘முரண்’
கவிதையில் கடல் என்பது வாழ்வும் தத்துவமும் ,வாழ்வும் கவிதையும்
,வாழ்வும் பேரின்பமும் சந்திக்கும் புள்ளி என்பது போல எழுதிருக்கிறார் .
அக்கவிதை கடலின் மீன்களைச் சேகரித்துக் கூடையில் சுமந்து செல்கிறாள்
ஒருத்தி .ஒருவன் கரையொதுங்கிய நட்சத்திர மீன்களை திரும்பக்கடலில் எறிந்து
கொண்டிருந்தான்.
எஸ் .செந்தில் குமார்
3 /4 ,பட்டிணத்தார்சந்து ,பரமசிவன் கோவில் வீதி,போடிநாய்க்கனுர்
cell-9994284031
No comments:
Post a Comment