கோவை, காந்திபுரம் கிளேசியா பார்க்கில் கவிஞர் நீரோடை மகேஸ் அவர்களின் “நீரோடை பெண்” என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா 28.03.2021 அன்று மாலை 03.00 மணிக்கு நடைபெற்றது. விழாவில் கோவை சுகுணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் பூ.மு. அன்புசிவா அனைவரையும் வரவேற்றார். மூத்த பத்திரிகையாசிரியர் கவிஞர் மீனாட்சி சுந்தரம் அவர்கள் தலைமைதாங்கினார். நூலாசிரியர் மகேஸ் அவர்களின் பெற்றோர் திரு முத்துசாமி மற்றும் பாப்பாத்தி அம்மாள் கவிதை நூலை வெளியிட கவிதாயினி உமா மகேஸ்வரி அவர்கள் பெற்றுக்கொண்டு சிறப்புரையாற்றினார். பேராசிரியர் ஜானகி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். கோவை இலக்கிய சந்திப்பு ஒருங்கிணைப்பார்கள் கவிஞர் இளஞ்சேரல் மற்றும் கவிஞர் இளவேனில் ஆகியோர் நிகழ்வை ஒருங்கிணைத்தனர். 60க்கு மேற்பட்டோர் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர்.

மிக்க நன்றி
ReplyDelete