Saturday, October 10, 2020

 எங்கள் அப்துல் கலாம் ஐயாவே..!


இந்திய தென்கோடி

மண்ணில் பிறந்து

விண்ணை ஆண்ட

எங்கள் அப்துல் கலாம் ஐயாவே

எங்களின் 120 கோடி இதயங்களை

துடிக்க விட்டு

உங்களின் இதயத் துடிப்பை

நிறுத்தியது ஏன்?

‘வல்லூறு நாடுகளுக்கிடையே

இந்தியாவை வல்லரசாக்க

வாருங்கள் மாணவர்களே..!’

என்றழைத்த எங்கள் ஆசானே

மண்ணிலுள்ள உங்கள்

மாணவர்களை துடிக்க விட்டு

விண்ணில் நட்சத்திரமாய்

மறைந்து போனது ஏன்?

அணுகுண்டு சோதனையில்

அணுவைப் போல்

அடக்கமாய் செயல்பட்டு

வினையில் விண்ணைத்தொட்ட

அறிவியல் ஐயனே…

உலக அரங்கில் தலை நிமிர்ந்த தமிழனே

உங்களின் சிம்மக் குரல்

மரணச் சிறைக்குள் அகப்பட்டது ஏன்?

ஏவுகணையின் நாயகனே

ஏழைகளின் தூயவனே

எளிமையின் இருப்பிடமே

தமிழகம் ஈன்றெடுத்த தங்கமே

உன் பிரிவாலின்று

குமரி முதல் இமயம் வரை உள்ள

240 கோடி கண்களும் அழுகிறதே

கண்ணீரைத் துடைக்க வராதது ஏன்?

‘கனவு காணுங்கள்

இந்தியைவை வல்லரசாக்க’

‘கேள்வி கேளுங்கள்

எதையும் பரிட்சித்துப் பார்க்க’

என்று எங்களுக்கு போதித்த புத்தனே

ஏன் எங்களை விட்டுச் சென்றாய்

என்று கேள்வி கேட்டு

கேவிக் கேவி அழுகிறோம்

அண்ணலே மீண்டு(ம்) வா..!

வாழ்ந்தது போதுமென்று

‘அக்னி சிறகுகள்’

கொண்டு பறந்து விட்டாயா

‘இந்தியா 2020’ முழக்கத்தை

மறந்து விடுவோம் என்று

நினைந்து விட்டாயா?

என்றென்றும் உம்

வழி நடப்போம் நாங்கள்

என்றும் அப்துல் கலாமின்

மாணவர்கள் நாங்கள்..!

No comments:

Post a Comment

கணவன் - மனைவி உறவைவிட உன்னதமான உறவு உண்டா?

கணவனுக்குத் தலைவலி. நெற்றியை அழுத்திப் பிடித்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்திருக்கிறான். மனைவி கொஞ்சம் தைலம் எடுத்து வந்து, கணவன் அருகில் அம...