கோவை இலக்கியச் சந்திப்பின் 88 ஆம் நிகழ்வு 25.02.2018 அன்று காலை 10.00 மணிக்கு சிறப்பாக
தொடங்கியது. கவிஞர் இளவேனில்; வரவேற்றார். நிகழ்வில் பேரா. அன்புசிவா, பேரா.சி.சுப்பிரமணியம் ஆகியோர் தொகுத்த (Speech
of Abdul kalam) என்னும் நூலை
முனைவர் அரவிந்த் சுப்பிரமணியம் சிறப்பாக அறிமுகம் செய்தார். பேராசிரியர் அன்புசிவா, அவர்களின் கட்டுரை நூலான “பாரதி முதல் கவிதாசன் வரை” நூலை கவிஞர் இளஞ்சேரல் சிறப்பாக அறிமுகம் செய்தார். முனைவர்
இராமேஷ் அவர்களின் மொழிபெயர்ப்பு நூலான “ரஜியா” சிறுகதை நூலை பேரா. திலீப்குமார் சிறப்பாக
அறிமுகம் செய்தார். எழுத்தாளர் சுப்பிரபாரதிமணியன் அவர்களின் “கடவுச்சிட்டு” என்னும் நாவலை
திருமதி சீலா சிவக்குமார் சிறப்பாக அறிமுகம் செய்தார். நிகழ்வில் சுப்ரபாரதி
மணியன் பேரா.திலீப்குமார் அரவிந்த் சுப்ரமணியன், பேரா ரமேஷ்குமார் பேரா.அன்புசிவா ஆர்.பாலகிருஷ்ணன்
எழுத்தாளர் சீலா சிவக்குமார் ஆகியோர் வந்திருந்து நிகழ்வைச் சிறப்பாக்கிக்
கொடுத்தார்கள். கவிஞர் யோக. செந்தில்குமார் நன்றி கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
கணவன் - மனைவி உறவைவிட உன்னதமான உறவு உண்டா?
கணவனுக்குத் தலைவலி. நெற்றியை அழுத்திப் பிடித்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்திருக்கிறான். மனைவி கொஞ்சம் தைலம் எடுத்து வந்து, கணவன் அருகில் அம...
-
பேரா.முனைவர் பூ.மு.அன்புசிவா 149, ஹரிஸ்ரீகாடர்ன்ஸ் சுண்டப்பாளையம்(அ) கோயம்புத்தூர் - 641 007 பேச:098438 74545. பண்பாடும் மொழ...
-
இமையம் மொழி என்ற தொடர்பு சாதனம் உருவானபோதே கதை சொல்வது என்ற செயலும் உருவாகியிருக்க வேண்டும். மனிதனால் எவ்வாறு பேசாமல் இருக்க ...
-
தமிழிலக்கியச் சூழலில் இன்று உரக்க ஒலிக்கும் விவாதங்களிலொன்று பெண்கள் எழுதும் கவிதைகளைப் பற்றியது. எல்லா விவாதங்களையும் போல இதிலும் ம...
No comments:
Post a Comment